search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் பொறுப்பாளர்கள்"

    • தமிழ்நாடு பா.ஜனதா சார்பிலும் தனியாக அடையாள அட்டை வழங்கி உறுப்பினர்களை சேர்த்துள்ளார்கள்.
    • டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை நாளையுடன் நிறைவடைகிறது. ஒரு கோடி பேரை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து பணியை தொடங்கினார்கள்.

    ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் உறுப்பினராக சேரலாம். வீடு தேடி வரும் நிர்வாகிகள் முன்னிலையில் மிஸ்டு கால் கொடுத்தும் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள முடியும்.

    மிஸ்டுகால் கொடுத்ததும் டெல்லி தலைமையில் இருந்து ஒரு அடையாள எண் வழங்கப்படும். அதன்படி உறுப்பினராக சேருபவரின் பெயர், முகவரி, தொழில், வாக்காளர் அடையாள அட்டை எண், தொகுதி, பூத் எண், எந்த வகுப்பை சேர்ந்தவர் என்ற பல விபரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இதில் எந்த விபரம் விடுபட்டாலும் கம்ப்யூட்டரில் பதிவாகாது.

    இப்படிப்பட்ட சிரமங்கள் இருப்பதால் உறுப்பினர் சேர்க்கை மந்தமாகவே நடக்கிறது. இதுவரை 30 லட்சம் பேர் சேர்ந்துள்ளார்கள்.

    இந்த உறுப்பினர் சேர்க்கையின் போது தமிழ்நாடு பா.ஜனதா சார்பிலும் தனியாக அடையாள அட்டை வழங்கி உறுப்பினர்களை சேர்த்துள்ளார்கள். இப்போது ஆன்லைன் உறுப்பினர்கள் எண்ணிக்கையையும், தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை விபரத்தையும் ஒப்பிட்டு சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையில் உறுப்பினர் சேர்க்கைக்கு கால அவகாசத்தை நீட்டித்து தரும்படி தமிழக பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.

    அடுத்த கட்டமாக உள்கட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அடுத்த மாதம் (நவம்பர்) முதல் வாரத்தில் கட்சி தேர்தல் தொடங்குகிறது. முதற்கட்டமாக கிளை, மண்டல தலைவர்கள், நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது.

    தேர்தல் பொறுப்பாளராக மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி, இணை பொறுப்பாளர்களாக மீனாட்சி, கதலி, ஜி.கே.செல்வகுமார் ஆகியோரை டெல்லி மேலிடம் நியமித்து உள்ளது.

    இவர்கள் 4 பேரும் டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்றனர். மேலிட வழி கர்டுதல்படி கட்சி தேர்தல் பணிகள் விரைவில் தொடங்கும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி நட்டா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    • அதில் பாராளுமன்ற தேர்தலுக்காக பல்வேறு மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்களை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி நட்டா இன்று அறிவித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:

    தமிழகம்: அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி

    அந்தமான் நிகோபார்: சத்யகுமார்

    அருணாசலபிரதேசம்: அசோக் சிங்கால்

    பீகார்: வினோத்தாவ்டே,தீபக்பிரகாஷ் எம்.பி

    சண்டிகார்: விஜய்பாய்ரூபனி எம்.எல்.ஏ.

    டாமன்-டையூ: புர்னேஷ் மோடி எம் எல்.ஏ.,துஷ்யந்த்பட்டேல்

    கோவா: ஆஷிஷ்சூட்

    அரியானா: பிப்லாப்குமார் தேவ் எம்.பி.,சுரேந்திரசிங் நாகர் எம்.பி.

    இமாசல பிரதேசம்: ஸ்ரீகாந்த் சர்மா,சஞ்சய் தாண்டன்

    ஜம்மு காஷ்மீர்: தரூண் ஷுக், ஆஷிஸ்சூட்

    லடாக்: தருண் ஷுக்

    ஜார்க்கண்ட்: லட்சுமிகாந்த் பாஜ்பாய்

    கர்நாடகா: ராதாமோகன்தாஸ் அகர்வால் எம்.பி.,சுதாகர் ரெட்டி,

    கேரளா: பிரகாஷ் ஜவடேகர்

    லட்சத்தீவு: அரவிந்த் மேனன்

    மத்திய பிரதேசம்: மகேந்திரகுமார் சிங், சதீஷ் உபாத்யாய

    ஒடிசா: விஜய்பால் சிங் தோமர் எம்.பி,லதா உசேந்தி எம்.எல்.ஏ.

    புதுச்சேரி: நிர்மல்குமார் சுரானா

    பஞ்சாப்: விஜய்பாய் ரூபானி எம்.எல்.ஏ,நரேந்திரசிங்,

    சிக்கிம்: திலீப் ஜெய்ச்வால்

    உத்தர பிரதேசம்: பாய்ஜெயந்த் ஜெய்பாண்டே

    உத்தரகாண்ட்: துஷ்யந்த்குமார் கவுதம்

    மேற்கு வங்காளம்: மங்கல்பாண்டே, அமித் மல்வியா, ஆஷா லக்ரா

    ×