என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஜிட்டல் முறை"

    • படிப்படியாக சென்னையில் உள்ள மற்ற டெப்போக்களுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது.
    • பயணிகள் தங்கள் செல்போன்களை பயன்படுத்தி ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.

    சென்னை:

    சென்னையில் மாநகர பஸ்களில் டிக்கெட்டுகளுக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக பல்லாவரம் பஸ் டெப்போவில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதற்காக பல்லாவரத்தில் உள்ள மாநகரபோக்குவரத்து கழக பஸ் கண்டக்டர்களுக்கு, யுபிஐ மற்றும் கார்டு மூலம் டிஜிட்டல் முறையில் பணம் பெறும் புதிய கையடக்க கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த திட்டம் படிப்படியாக சென்னையில் உள்ள மற்ற டெப்போக்களுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த தொடுதிரை சாதனங்கள் மூலம், பயணிகள் ஏறும் பஸ் நிறுத்தத்தின் பெயரையும் அவர்கள் சேருமிடத்தையும் கண்டக்டர் தேர்வு செய்யலாம். அவர்கள் தேர்வு செய்தவுடன், பயணிகள் பணம், கார்டுகள் மற்றும் யுபிஐ உள்ளிட்ட பல்வேறு வகைகளில் டிக்கெட் கட்டணம் செலுத்தலாம். யுபிஐ முறை தேர்ந்தெடுக்கப்பட்டால், கியூஆர் குறியீடு திரையில் காட்டப்படும். பயணிகள் தங்கள் செல்போன்களை பயன்படுத்தி ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.

    மேலும் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அனைத்து மாநகர போக்குவரத்து கழக பஸ்களுக்கும் கியூஆர் அடிப்படையிலான டிக்கெட் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், பயணிகள் தங்கள் மொபைல் செயலியை பயன்படுத்தி தங்கள் கணக்குகளை ரீசார்ஜ் செய்யலாம். மேலும் பயணிகள் தங்களுக்கான கியூஆர் குறியீட்டை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரெயில் மற்றும் உள்ளூர் ரெயில்களிலும் பயணிக்கலாம்.

    இதற்காக அனைத்து பஸ்கள் மற்றும் ரெயில்களின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் கியூஆர் ஸ்கேனர்கள் நிறுவப்பட உள்ளது. மேலும் பயணிகள் பயணம் செய்யும் போது கியூஆர் குறியீடுகளை பஸ் கண்டக்டர்கள் மற்றும் ரெயில் டிக்கெட் பரிசோதகர்களிடம் காண்பிக்கலாம்.

    • குடும்ப அட்டைகளில் 99.8 சதவீதமும், தனிப்பட்ட பயனாளிகளில் 98.7 சதவீதமும் ஆதார் மூலம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
    • மொத்த உணவு தானியங்களில் 98 சதவீதம் தற்போது ஆதார் உறுதிப்படுத்துதல் மூலம் விநியோகிக்கப்படுவதால் கசிவுகள் குறைந்துள்ளன

    மத்திய அரசின் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பொது விநியோக முறையை சீர்திருத்தம் செய்வதற்கு டிஜிட்டல் மயம், வெளிப்படைத்தன்மை, திறமையான விநியோக நடைமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்த முயற்சிகள் காரணமாக, இடையிலேயே பலன் கசிவுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டு இலக்குகள் எட்டப்பட்டு வருகின்றன.

    இந்திய உணவுக் கழகத்தில் ஒதுக்கப்படும் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களின் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்கான முறையும் உருவாக்கப்பட்டுள்ளது. விநியோகத்தைப் பொறுத்தவரை 80.6 கோடி பயனாளிகளைக் கொண்ட 20.4 கோடி குடும்ப அட்டைகளின் விநியோக நடைமுறை முழுவதும் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறையால் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.

    குடும்ப அட்டைகளில் 99.8 சதவீதமும், தனிப்பட்ட பயனாளிகளில் 98.7 சதவீதமும் ஆதார் மூலம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

    டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஆதார் இணைப்பு ஆகியவை ரேஷன் கார்டுகளின் போலிகளை நீக்குவதற்கு வழிவகுத்துள்ளன. 5.8 கோடி ரேஷன் கார்டுகள் அகற்றப்பட்டுள்ளன.

    மொத்த உணவு தானியங்களில் 98 சதவீதம் தற்போது ஆதார் உறுதிப்படுத்துதல் மூலம் விநியோகிக்கப்படுவதால் கசிவுகள் குறைந்துள்ளன. தகுதியற்ற பயனாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. சரியான பயனாளிகளுக்கு பொது விநியோக முறையின் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய இ-கேஒய்சி எனப்படும் மின்னணு முறையிலான வாடிக்கையாளர்களை அறியுங்கள் என்ற பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    தற்போதைய நிலவரப்படி 64 சதவீத பயனாளிகள் இ-கேஒய்சி (eKYC) (Electronic Know Your Customer) மூலம் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள பயனாளிகளுக்கு இ-கேஒய்சி முடிப்பதற்கான செயல்முறை முழுவீச்சில் நடந்து வருகிறது.

    இந்த நடைமுறை காரணமாக நாடு முழுவதும் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பயனாளிகள் பொருட்களை வாங்க முடியும். மேலும் போலி குடும்ப அட்டைகள் களையப்பட்டு வருகின்றன. இதுவரை 5.8 கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளன.

    பயனாளிகளின் வசதிக்காக, நாடு முழுவதும் உள்ள எந்த நியாய விலைக் கடையிலும் (ரேஷன் கடையில்) பயனாளிகளின் இ-கேஒய்சி வசதியை செய்துள்ளது என்று நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ×