என் மலர்
நீங்கள் தேடியது "ஆரோக்கியமான உணவு"
- ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
- தூக்கம் என்பது அனைவருக்கும் மிகவும் இன்றியமையாதது.
ஒருவர் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு நல்ல உணவு முறை, தூக்கம், மனநலம் ஆகிய இம்மூன்றும் மிகவும் முக்கியமானது.
இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
உணவு முறை

ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
உங்கள் உணவில் புதிய பருவகால பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
நொறுக்குத் தீனி மற்றும் சர்க்கரையைத் முழுமையாக தவிர்த்துவிட வேண்டும். எல்லாவற்றையும் விட முதன்மையானது எந்த வேலையாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி போதுமான அளவு தண்ணீர் குடித்து, சரியான நேரத்தில் உணவு உண்ணுங்கள். இப்படி செய்தாலே ஆரோக்கியமாக இருக்கலாம்.
தூக்கம்

தூக்கம் என்பது அனைவருக்கும் மிகவும் இன்றியமையாதது. ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில் பகல் முழுவதும் அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு இரவு வெகுநேரம் வரை நண்பர்களுடன் நேரம் செலவிடுவது, அதிக நேரம் சமூக வலைதளத்தில் நேரத்தை செலவிடுவது போன்றவை போதிய தூக்கம் இல்லாமல் உடல் நலத்தை மோசமாக பாதிக்கிறது. இதன் காரணமாக இளைஞர்களிடையே தூக்கம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது.
நல்ல தூக்கம் என்பது நம் உடலையும் மூளையையும் புதுப்பிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு நாள் இரவும் 7- 8 மணிநேரம் நல்ல தூக்கத்தைப் பெற முயற்சி செய்யுங்கள். படுக்கைக்கு முன் திரை நேரத்தைக் குறைத்து, உறக்க அட்டவணையை அமைத்துக்கொள்ளுங்கள்.
மனநலம்

ஒருவருக்கு உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவு மனநலமும் முக்கியமானது. பெரும்பாலான நேரங்களில் மக்கள் அதை புறக்கணிக்கின்றனர்.
மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற மன பிரச்னைகள் நம் வாழ்க்கையை பாதிக்கலாம். எனவே, மன ஆரோக்கியத்தை பராமரிக்க யோகா மற்றும் தியானம் முதலானவற்றை செய்ய வேண்டும்.
சமூக உறவுகளை உருவாக்கி உங்கள் உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்துங்கள். உங்களுக்கு ஏதேனும் மனநலப் பிரச்னை இருப்பதாக உணர்ந்தால், தேவைப்பட்டால் உடனடியாக மனநல நிபுணரை அணுகவும்.
- முறைப்படி சாப்பிட்டால் தான் ஸ்லிம்மாக முடியும்.
- அளவாக சத்தான உணவை சாப்பிட்டால் அழகாக இருக்கலாம்.
கல்லூரி மாணவர்கள், இளம்பெண்கள் என அனைவருமே ஒல்லியாக இருக்கவே விரும்புகின்றனர். ஒல்லியாக இருப்பது தான் அழகு என்று நினைப்பது தான் இதற்கு காரணம். பல பெண்கள் சிம்ரன் போல ஒல்லியாக இருக்க வேண்டும், சினேகா போல இடுப்பு வேண்டும் என்று தங்கள் எடையை குறைக்க விரும்புகின்றனர். விளைவு, `நான் டயட்டில் இருக்கேன்' அப்படின்னு பெருமையா சொல்லிட்டு, அவங்க இஷ்டத்துக்கு ஏதேதோ சாப்பிடுறாங்க; சில பேர் சாப்பிடாம பட்டினி கிடக்குறாங்க.
சாப்பிடாமல் இருந்தால் ஸ்லிம்மாகி விடலாம் என்று யார் சொன்னது? உண்மையில், முறைப்படி சாப்பிட்டால் தான் ஸ்லிம்மாக முடியும். அளவாக சத்தான உணவை சாப்பிட்டால், என்றைக்கும் மாறாத இளமையோடும், அழகோடும் இருக்கலாம். அவரவர் உடம்புக்கு எந்தெந்த உணவு வகைகள் ஒத்துக் கொள்கிறதோ, அதைச் சாப்பிட்டு வந்தாலே போதும்.
அதை விட்டுவிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடந்தால், பீரியட்ஸ் ப்ராப்ளம், ரத்தசோகை, மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் தான் வரும். எனவே, ஒல்லியாகப் போறேன் அப்படின்னு உங்க இஷ்டத்துக்கு உணவை குறைக்காதீங்க; உங்கள் வயதுக்கேற்ற, ஆரோக்கியமான, சத்தான உணவை சாப்பிடுங்கள். அவரவர் உயரத்துக்கு தகுந்த எடையுடன் இருப்பது தான் அழகு. அப்படி நீங்க ஸ்லிம்மாக விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியவை:
மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்:
உங்கள் உடல் அமைப்பு, உணவுப் பழக்க வழக்கங்கள், நாள் ஒன்றுக்கு செலவாகும் சக்தி போன்ற பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு தான் மருத்துவர் உங்களுக்கு ஆலோசனை அளிப்பார். எனவே, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதற்கேற்ப டயட்டில் இருங்கள்.

உடற்பயிற்சி செய்யுங்கள்:
எடையைக் குறைக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஜிம், யோகா, நீச்சல், டான்ஸ், வாக்கிங் ஆகியவையும் உடற்பயிற்சி தான். இதுபோன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அதற்காக, அதிதீவிரமாக பயிற்சியில் ஈடுபடாதீர்கள். அது ஆபத்தில் கொண்டு போய் விடும். அளவான பயிற்சி, அளவான சாப்பாடு போன்றவை தான் நல்ல பயனை தரும். டயட்டீஷியன், பிட்னெஸ் மாஸ்டர் ஆகியோரை ஆலோசித்து செயல்படுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உணவுமுறையில் கவனம் செலுத்துங்கள்:
ஸ்லிம்மாக மாற வேண்டுமென்றால், நிச்சயமாக நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செ<லுத்த வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்கள் ஆகியவற்றை தவிருங்கள். அவை சுவையுள்ளதாக இருப்பினும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படி குண்டாக இருக்கோமே என்று கவலைப்படுவதை விட்டுவிட்டு, உரிய நபர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று, உங்கள் விருப்பப்படி ஸ்லிம்மாக மாறி லைப்பை என்ஜாய் செய்யுங்கள்.
- ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது அவசியமானது.
- அத்தகைய உணவுகளை எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமானது.
உடல் நலனை பாதுகாப்பதற்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது அவசியமானது. அத்தகைய உணவுகளை எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமானது. நிறைய பேர் விரும்பிய நேரத்தில் உணவு உண்ணும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். இரவு உணவை தாமதமாக உட்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
அலுவலகம் முடியும் நேரத்திலோ, வீடு திரும்பும் வழியிலோ நொறுக்குத்தீனிகளை உட்கொண்டுவிட்டு இரவு உணவு உண்ணும் நேரத்தை தாமதப்படுத்துகிறார்கள். 9 மணிக்கோ, அதற்கு பிறகோ சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி சாப்பிடுவது செரிமான செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இரவு 7 மணிக்குள் சாப்பிடுவதுதான் சரியானது. அதுதான் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நல்லது என்பது உணவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. முன்னோர்களும் அப்படி சாப்பிடும் வழக்கத்தைத்தான் பின்பற்றினார்கள். அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.

இரவு 7 மணிக்குள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
* தூக்கத்திற்கும், செரிமானத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. இரவு தாமதமாக சாப்பிட்டுவிட்டு உடனே தூங்க செல்லும்போது செரிமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படும். அது தன் வேலையை செய்வதில் தொய்வு ஏற்படும். தூக்கமும் தடைபடும். இரவு 7 மணிக்குள் சாப்பிட்டுவிட்டு 9 மணிக்கு பிறகு தூங்கச் செல்லும் வழக்கத்தை பின்பற்றினால் செரிமானம் சீராக நடைபெறும். உடல் உறுப்புகளுக்கும் எந்தவித பாதிப்பும் நேராது. அவை ஓய்வெடுத்து ஆழ்ந்த தூக்கத்திற்கு வித்திடும். காலையில் எழும்போது சோர்வு எட்டிப்பார்க்காது.
* இரவு உணவுக்கும், காலை உணவுக்கும் இடையே போதுமான இடைவெளி இருப்பது உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவும். இரவு 7 மணிக்குள் உணவு உட்கொள்ளும்போது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
* இரவு உணவை 7 மணிக்கு உண்ணும்போது உடலில் உள்ள கலோரிகளை எதிர்த்து போராடுவதற்கு உதவும். உடல் எடை குறைவதற்கும் வழிவகுக்கும்.
* இரவு தாமதமாக சாப்பிடும்போது விரைவாக செரிமானம் ஆவதற்கு செரிமான மண்டலம் ஒத்துழைப்பு கொடுக்காது. இரவு உணவுக்கும், தூங்கச் செல்லும் நேரத்திற்கும் இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும். தாமதமாக சாப்பிடும்போது அந்த இடைவெளி குறைந்துவிடும். அதன் காரணமாக அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளும் உண்டாகும்.
* இரவு உணவை தாமதமாக சாப்பிடும்போது கூடுதல் கலோரிகளை எரிப்பதற்கு போதிய நேரமில்லாமல் போய்விடும்.
* நீரிழிவு, இதயம், தைராய்டு சார்ந்த நோய் பாதிப்பு கொண்டவர்கள் இரவு உணவை குறைவாக சாப்பிட வேண்டும். மேலும் இரவில் சீக்கிரமாகவே சாப்பிட்டுவிடுவதும் நல்லது.