என் மலர்
நீங்கள் தேடியது "பாப் டு பிளெசிஸ்"
- அக்ஷர் படேலை டெல்லி அணியின் கேப்டனாக அணியின் நிர்வாகம் கடந்த 14-ந் தேதி அறிவித்தது.
- கே.எல்.ராகுலை நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் விரும்பியது.
புதுடெல்லி:
18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த தொடரில் சென்னை, மும்பை, ஐதராபாத், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 5 அணிகளின் கேப்டன்களில் எந்த மாற்றமும் இல்லை. மீதியுள்ள கொல்கத்தா, பெங்களூரு, லக்னோ, பஞ்சாப், ஷ்ரேயாஸ், டெல்லி ஆகிய 5 அணிகளும் புதிய கேப்டன்களுடன் விளையாட உள்ளனர்.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் (ருதுராஜ் கெய்க்வாட்), மும்பை இந்தியன்ஸ் (ஹர்திக் பாண்ட்யா) சன்ரைசர்ஸ் ஐதராபாத் (கம்மின்ஸ்), குஜராத் டைட்டன்ஸ் (சுப்மன்கில்), ராஜஸ்தான் ராயல்ஸ் (சஞ்சு சாம்சன்) ஆகிய 5 அணிகளின் கேப்டன்களில் மாற்றம் இல்லை.
மற்ற 5 அணிகளில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ரகானேவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரஜத் படிதாரும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ரிஷப்பண்ட்டும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயரும், டெல்லி அணிக்கு அக்ஷர் படேலும் புதிய கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
9 அணிகள் ஏற்கனவே அறிவித்து விட்ட நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 14-ந் தேதி தான் கேப்டனை அறிவித்தது. டெல்லி அணியில் கே.எல்.ராகுல், அக்ஷர் படேல், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டுபெலிசிஸ் ஆகிய 3 பேரின் பெயர்கள் கேப்டனுக்கான தேர்வில் இருந்தது.
இதில் கே.எல்.ராகுலை நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் அவர் அதை நிராகரித்தார். இதனால் அக்ஷர் படேலை டெல்லி அணியின் கேப்டனாக அணியின் நிர்வாகம் அறிவித்தது. துணை கேப்டன் யார் என்பது குறித்து எந்த தகவலையும் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பாப் டு பிளெசிஸ் டெல்லி அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் மேக்ஸ்வெல் சதம் அடித்தார்.
- இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடிலெய்டு:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது, இதனால் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் மேக்ஸ்வெல் சதம்(120) அடித்ததன் மூலம் ரோகித் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரோகித் (5 சதம்) சாதனையை மேக்ஸ்வெல் (5 சதம்) பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக சூர்யகுமார் யாதவ் ( 4 சதம்), பாபர் அசம் (3 சதம்), காலின் முன்ரோ (3 சதம்) ஆகியோர் உள்ளனர்.
மேலும் நாட் அவுட் மூலம் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் முதல் இடத்திலும் ரோகித் 2-வது இடத்திலும் உள்ளனர். இதுபோக 4-வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் (117), பாப் டு பிளெசிஸ்(119) சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
- கயானா அமேசன் வாரியர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் லூசியா கிங்ஸ் வீழ்த்தியது.
- கரீபியன் பிரிமியர் லீக் கோப்பையை செயின்ட் லூசியா கிங்ஸ் அணி முதல் முறையாக வென்றது.
கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் தகுதி பெற்றன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்தது. லூசியா கிங்ஸ் தரப்பில் நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய லூசியா கிங்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் கயானா அணியையும் வீழ்த்தி அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. மேலும் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய ரோஸ்டன் சேஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதேசமயம், தொடர் முழுதும் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய நூர் அஹ்மத் தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டி முடிவில் கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கோப்பையை வாங்கி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடந்து முடிந்த 2024 டி20 உலகக் கோப்பை கோப்பையை இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொண்டாடியதைப் போலவே ஃபாஃப் டு பிளெசிஸும் சிபிஎல் கோப்பையை வென்ற பிறகு கொண்டாடினார்.