என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேகி"

    • தக்காளி, கேரட், வெங்காயம், மேகி மசாலா, காபி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து புது வகையில் நூடுல்ஸ் தயாரிக்கும் காட்சிகள் உள்ளன.
    • சில பயனர்கள் இந்த உணவு தயாரிப்பை விஷம் என விமர்சித்துள்ளனர்.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பிடித்த சிற்றுண்டியாக நூடுல்ஸ் மாறி வருகிறது. தெருவோரங்களில் பல்வேறு வகைகளில் தயாரிக்கப்படும் நூடுல்ஸ் வகைகள் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிரப்படுவதுண்டு.

    அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் தெருவோர வியாபாரி ஒருவர், காபி மற்றும் பாலுடன் மேகி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. அதில் அந்த வியாபாரி ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து அதில் மேகி நூடுல்ஸ் சேர்க்கிறார். தொடர்ந்து தக்காளி, கேரட், வெங்காயம், மேகி மசாலா, காபி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து புது வகையில் நூடுல்ஸ் தயாரிக்கும் காட்சிகள் உள்ளன.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள் இந்த உணவு தயாரிப்பை விஷம் என விமர்சித்துள்ளனர்.

    • இந்திய நிறுவனங்கள் கூடுதலாக 5 சதவீத வரி செலுத்தியாக வேண்டும்.
    • இதற்கு இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தம் (டிடிஏஏ) என்று பெயர்.

    இந்தியாவை தங்களின் விருப்ப நாடுகள் பட்டியலில் இருந்து சுவிட்சர்லாந்து நீக்கியுள்ளது. இதனால் அங்கு வணிகம் மேற்கொண்டிருக்கும் நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்தும் கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன.

    சுவிட்சர்லாந்து இந்தியவிலும், இந்திய நிறுவனங்களும் அந்நாட்டிலும் வர்த்தகம் செய்து வருகின்றன. சுவிட்சர்லாந்து சட்டப்படி மற்ற நாட்டு நிறுவனங்கள் 10% வரியை செலுத்த வேண்டும்.

    ஆனால் இந்தியா போன்று விருப்ப பட்டியலில் இருக்கும் நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் 5% வரியை செலுத்தினால் போதுமானது. இதற்கு இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தம் (டிடிஏஏ) என்று பெயர். இந்த விருப்ப பட்டியலிலிருந்துதான் தற்போது இந்தியாவை அந்நாடு நீக்கியிருக்கிறது.

    சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய வணிக நிறுவனமான 'நெஸ்லே' பொருட்கள் இந்தியாவில் அதிக புழக்கத்தில் உள்ளன. அதில் குறிப்பாக மேகி நூடுல்ஸ் அதிக விற்பனை ஆகும் பண்டமாக இருந்தது.

     

    ஆனால் உணவுப் பொருளான மேகி நூடுல்ஸ் -இல் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு ரசாயனம் கலந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மேகி இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

    ஆனால் அதிக ரசாயனம் கலக்கவில்லை என கூறி நெஸ்லே நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

     

    வெகு காலமாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் மத்திய அரசின் முடிவு சரிதான் என்ற தீர்ப்பளித்தது. இதனால் குமைச்சலில் இருந்த சுவிட்சர்லாந்து தற்போது இந்த வேலையை பார்த்துள்ளது.

    சுவிட்சர்லாந்தின் இந்த உத்தரவு 2025 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. அன்றைய தேதி முதல் அந்நாட்டில் வணிகம் செய்யும் இந்திய நிறுவனங்கள் கூடுதலாக 5 சதவீத வரி செலுத்தியாக வேண்டும். 

    ×