என் மலர்
நீங்கள் தேடியது "தென்காசி காசி விஸ்வநாதர் கோவில்"
- மங்கள வாத்தியங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.
- வழி நெடுகிலும் பக்தர்கள் சாமிக்கு மலர்மாலை அணிவித்து வழிபாடு.
தென்காசி:
தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயமான காசி விஸ்வநாதர் கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. இதில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரம்மாண்ட அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மாலையில் சிறப்பு சொற்பொழிவுடன் காசி விஸ்வநாதர் உலகம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி கோவிலின் உள்பகுதி பிரகாரத்தில் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட நந்தி வாகனத்தில் உலக அம்மன் மற்றும் காசி விஸ்வநாதர் எழுந்தருளி பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.
திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்ற போது கோவில் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதனைத் தொடர்ந்து உலகம்மன் காசி விஸ்வநாதர் சப்பரத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து காட்சி அளித்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் சாமிக்கு மலர்மாலை அணிவித்து வழிபாடு செய்தனர்.
முன்னதாக திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு கோபுர வாயிலின் முகப்பு பகுதியில் பிரம்மாண்ட அத்த பூக்கோலம் போடப் பட்டிருந்ததை பக்தர்கள் தங்களின் செல்போன்களில் படம் பிடித்து உற்சாக மடைந்தனர்.

கும்பாபிஷேக நிகழ்ச்சி முடிந்த பின்பும் இன்று காலை வரையில் காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தென்காசியில் காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு எவ்வித அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் சிறப்பாக பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்த னர்.
அவர்களுக்கு கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் பக்தர்கள் பொதுமக்கள் சார்பில் தங்களின் நன்றியை தெரிவித்தனர்.
- சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
- தினமும் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு வந்தது.
தென்காசி:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் தென்காசி காசி விசுவநாதர் சுவாமி கோவிலும் ஒன்றாகும். காசிக்கு நிகரானதாக கருதப்படும் இந்த கோவிலில் தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இக்கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன்பின்னர் 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் கும்பாபிஷேகம் நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
எனவே மீண்டும் தென்காசி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையேற்று கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பழமை வாய்ந்த தென்காசி காசி விசுவநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழா விரைவில் நடத்தப்படும் என அறிவித்தார்.
அதன்படி 18 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேக விழா நடத்த தீர்மானிக்கப்பட்டு ஏப்ரல் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான பணிகள் முடிக்கி விடப்பட்டு தீவிரமாக நடைபெற்றது. அதன்படி கடந்த சில மாதங்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ராஜ கோபுரத்திற்கு வர்ணம் தீட்டும் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

மேலும் பல்வேறு சிறப்பு பூஜைகள், தினமும் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு வந்தது. நேற்று காலை முதல் இரவு வரை யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், ஆறாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 5 மணிக்கு விநாயகர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
7 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, திரவியாகுதி நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு காசி விசுவநாதசுவாமி ராஜ கோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை தூத்துக்குடி ஆலால சுந்தர லோக சிவாகம வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் என்ற கல்யாண சுந்தர சிவாச்சாரியார் நடத்தினார்.
பூஜைகளை காசி விசுவநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் செந்தில் ஆறுமுகம் பட்டர் மற்றும் அர்ச்சகர்கள் செய்தனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சென்னை, கன்னியாகுமரி, கோவை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் தென்காசியில் குவிந்தனர். இதனால் தென்காசி நகரமே விழாக்கோலம் பூண்டது.
கோவில் பகுதியில் எங்கு பார்த்தாலும் மனிதர்களாகவே காணப்பட்டனர். கும்பாபிஷேகம் நடைபெற்றபோது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவ.. சிவ.. அரோகரா.. என விண்ணதிர கோஷங்கள் எழுப்பினர்.

கும்பாபிஷேக விழாவயொட்டி இன்று தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
விழாவில் கலெக்டர் கமல் கிஷோர், ராணிஸ்ரீ குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், ராஜா, நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே. காளிதாசன் நாடார், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் பொன்னி, தென்காசி நாடார் சங்க தலைவர் ஏ.கே.எஸ். ராஜசேகரன் நாடார், செயலாளர் ராஜகோபால் நாடார், பொருளாளர் எஸ். ராஜன் நாடார் மற்றும் தருமை ஆதீனம், சிவனடியார்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி நெல்லை சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சந்தோஷ் கதிமணி, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் 4 கூடுதல் சூப்பிரண்டுகள், 13 டி.எஸ்.பி.க்கள் உள்பட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 1100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி தென்காசியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் 11 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
- அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது.
தென்காசி:
தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலும் ஒன்றாகும்.
இக்கோவில் மகா கும்பாபிஷேக விழா 18 ஆண்டுகளுக்கு பின்பு நாளை (திங்கட்கிழமை) காலை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 3-ந் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது.
கும்பாபிஷேக விழா நடைபெற இருப்பதையொட்டி தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற யாகசாலை சிறப்பு பூஜையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் பொன்னி மற்றும் தருமை ஆதீனம் மற்றும் சிவனடியார்கள், பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக விழாவை யொட்டி கோவில் முழு வதும் இரவில் ஒளிரும் வகையில் வண்ண விளக்கு கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மங்கள இசையுடன் யாகங்கள் நடைபெற்று வருவதால் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் தென்காசியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
நாளை அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், ஆறாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 5 மணிக்கு விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
7 மணிக்கு மகா பூர்ணாகுதி, திரவ்யாகுதி நடக்கிறது. 9 மணிக்கு மேல் உலகம்மாள் உடனுறை காசிவிஸ்வநாத சுவாமி ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், மகாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
கும்பாபிஷேகத்தை தூத்துக்குடி ஆலால சுந்தர லேகசிவாகம வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் என்ற கல்யாண சுந்தர சிவாச்சாரியார் நடத்துகிறார்.
காசிவிஸ்வநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் செந்தில் ஆறுமுகம் பட்டர் உள்ளிட்டோர் பூஜைகள் செய்கின்றனர். இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.
கும்பாபிஷேகத்தை யொட்டி கோவிலில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெறும் இடங்களான ராஜகோபுரம், சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி ஆகிய இடங்களில் உபயதாரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நின்று பார்வையிட ஏதுவாகவும், பாதுகாப்பு கருதியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கோவிலை சுற்றியுள்ள ரத வீதிகளிலும், கோவில் வளாகத்திற்குள்ளும் நின்று கும்பாபிஷேகத்தை காணும் பக்தர்களுக்கு டிரோன் மூலம் தீர்த்தம் தெளிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் கண்டு களிக்க வசதியாக கோவில் மற்றும் ரத வீதிகளில் எல்.இ.டி. திரை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து தென்காசிக்கு வரும் பக்தர்கள் ஆசாத் நகர் பகுதியிலும், சங்கரன்கோவில், புளியங்குடி ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள் தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து இறங்கியும் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தென்காசி கோவில் மற்றும் வளாக பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கோவில் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
- சைவ சமய ஆதீனங்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
தென்காசி:
தென்காசி காசி விஸ்வநாதர்-உலகம்மன் கோவிலில் சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த சில மாதங்களாக கோவிலில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்றது. கோவில் ராஜகோபுரம் வர்ணம் தீட்டப்பட்டு, மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
7-ந் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் இன்று தொடங்கியது. அதிகாலை 5 மணி அளவில் உலகம்மன் சன்னதி மண்டபத்தில் கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் செயல் அலுவலர் பொன்னி ஆகியோர் முன்னிலையில் மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள், மங்கள வாத்தியம் முழங்க நடை பெற்றது.
நிகழ்ச்சியில சைவ சமய ஆதீனங்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஆதினங்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பால கிருஷ்ணன் பொன்னாடை மற்றும் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இன்று அதிகாலையில் தொடங்கிய யாகசாலை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
- மாசி மாதம் 11 நாட்கள் மாசி மக பெருந்திருவிழா கொண்டாடப்படும்.
- கொடி மரத்தில் கொடி யேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
தென்காசி:
தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவில் பழமையான கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 11 நாட்கள் மாசி மக பெருந்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டிற்கான மாசி மக பெருவிழா இன்று காலை சுவாமி சன்னதி கொடி மரத்தில் கொடி யேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

முன்னதாக அதிகாலை கோவிலின் நடை திறக்கப்பட்டு கொடிப்பட்டம் ரத வீதி உலாவும், பின்னர் கொடி மரத்திற்கு 11 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்க ரிக்கப்பட்டு, வேத விற்பனர்கள் வேத மந்திரங்களை முழங்க கொடி மரத்திற்கு மகா தீபாரதனை நடத்தப்பட்டது.
விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நாளான வருகிற 21-ந்தேதி நடராஜருக்கு தாண்டவ தீபாராதனையும், 28-ந் தேதி நடராஜருக்கு பச்சை சாத்தி ரத வீதி உலாவும் நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நாளான வருகிற 23-ந்தேதி அன்று சுவாமி-அம்பாள் எழுந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப் படிதாரர்கள் செய்துள்ளனர்.
- மாசி மாதம் 11 நாட்கள் மாசி மக பெரு விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
- கொடி மரத்திற்கு மகா தீபாரதனை நடத்தப்பட்டது.
தென்காசி:
தென்காசியில் பழமையான காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 11 நாட்கள் மாசி மக பெரு விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான மாசி மகப்பெருவிழா கடந்த 15-ந்தேதி சுவாமி சன்னதி கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
கோவிலின் நடை திறக்கப்பட்டு கொடிப் பட்ட ரத வீதி உலாவும், பின்னர் கொடி மரத்திற்கு 11 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்க ப்பட்டு வேத விற்பனர்கள் வேத மந்திரங்களை முழங்க கொடி மரத்திற்கு மகா தீபாரதனை நடத்தப்பட்டது. விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது.
விழாவின் 9-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் காசி விஸ்வநாதர் மற்றும் உலக அம்மன் பக்தர்களுக்கு கட்சி அளித்தனர். தேரை திரளான பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பொதுமக்கள் பலர் அன்னதானம் மற்றும் மோர், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர். மாசி மக பெருந்திரு விழாவில் வருகிற 28-ந்தேதி பச்சை சாத்தியுடன் கூடிய தாண்டவ தீபாராதனை நடைபெற உள்ளது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப் படிதாரர்கள் செய்துள்ளனர்.