என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேர்தல் பத்திரம்"
- சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பாஜக தங்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன
- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
"சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் பத்திரம், இந்து - முஸ்லீம், கோயில் - மசூதி ஆகியவை இல்லையென்றால் பாஜக 100 இடங்களை கூட தாண்டாது" என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பாஜக தங்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றன.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் - நிர்மலா சீதாராமன்
- பாஜக தோற்றுவிட்டால் அவர்களுக்கு இன்னும் பணம் தேவைப்படும். அதற்குதான் தேர்தல் பத்திர முறையை பற்றி மீண்டும் பேசுகிறார்கள் - காங்கிரஸ்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,
"வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தேர்தல் பத்திர திட்டத்தை வேறு ஏதேனும் ஒரு வடிவத்தில் மீண்டும் கொண்டு வருவோம்.
தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத்தன்மை நிறைந்தது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது. அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமனின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் எம்.பி, "தேர்தல் பத்திர நன்கொடை முறையை திரும்பக் கொண்டு வருவோமென நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறார். அவர்களுக்கு பிரச்சனை என்னவென்றால், இந்த தேர்தலுக்கு அவர்களிடம் பணம் இருக்கிறது. ஆனால் இதில் அவர்கள் தோற்றுவிட்டால் இன்னும் பணம் தேவைப்படும். அதற்குதான் தேர்தல் பத்திர முறையை பற்றி மீண்டும் பேசுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம் என பா.ஜ.க கூறுகிறது. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதையே பா.ஜ.க இப்போதும் விரும்புகிறது. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் எத்தனை கோடி கொள்ளையடிப்பார்கள் என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக தான் தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வரப்பட்டது
- கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,
"வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தேர்தல் பத்திர திட்டத்தை வேறு ஏதேனும் ஒரு வடிவத்தில் மீண்டும் கொண்டு வருவோம்.
தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
"தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத்தன்மை நிறைந்தது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது. அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக தேர்தல் பத்திர திட்டம் குறித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்திய அரசியலில் கருப்பு பணத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தேர்தல் பத்திரம் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் கருப்பு பணம் திரும்பி விடும் என அஞ்சுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்ததைவிட அதை மேம்படுத்தி இருக்கலாம் என நான் நம்புகிறேன். ஆனால், அதில் ஏதும் செய்ய முடியாது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நான் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறேன்' என்று கூறியிருந்தார்.
தேர்தல் பத்திரம் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அத்துடன் நன்கொடையாளர்கள் பெயர், கட்சிகள் பெற்ற தொகை விவரம் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்திடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நன்கொடையாளர்கள் பெயர், கட்சிகள் பெற்ற தொகை ஆகிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடந்த பிப்ரவரி மாதம், உச்ச நீதிமன்றத்தால் தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டது.
- இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்வியின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
2018 முதல் 2024 வரை தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ததற்காக மத்திய அரசிடமிருந்து ரூ.10.68 கோடி பாரத ஸ்டேட் வங்கி (SBI) கமிஷன் பெற்றுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்வியின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கும் நிதி அமைச்சகத்துக்கும் இடையேயான கடிதப் பரிமாற்றத்தில், வங்கி தனக்கு செலுத்த வேண்டிய "கமிஷன்" கோரிக்கையை வைத்தது. மேலும், தேர்தலை முன்னிட்டு பத்திரங்கள் விற்பனை அதிகரிக்கும் என்றும் எஸ்.பி.ஐ குறிப்பிட்டுள்ளது. அத்துடன், வங்கி தனது பரிவர்த்தனை கட்டணம் மற்றும் வங்கிக் கட்டணங்களுக்கு 18% ஜி.எஸ்.டி-யுடன் "கமிஷன்" செலுத்துவதற்கான வவுச்சர்களை உயர்த்தியுள்ளது என்பதைக் காட்டுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம், உச்ச நீதிமன்றத்தால் தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஊழல் குற்றசாட்டு சாட்டப்படும் அரசியல்வாதிகள் பாஜகவில் இணைந்த உடன் அவர்களின் மீதான வழக்குகள் முடித்து வைக்கப்படுகிறது - காங்கிரஸ்
- மோடி வாஷிங் பவுடர், பாஜக வாஷிங் மெஷின் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்தியது
ஊழல் குற்றச்சாட்டு சாட்டப்படும் அரசியல்வாதிகள் பாஜகவில் இணைந்த உடன் அவர்களின் மீதான வழக்குகள் முடித்து வைக்கப்படுவதை தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது.
அதனையொட்டி, மோடி வாஷிங் பவுடர், பாஜக வாஷிங் மெஷின் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்தி விமர்சித்தது.
அந்த வாஷிங் மெஷினின் விலை 8,552 கோடி ரூபாய் என்றும், இது தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பெற்ற தொகை என காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.
இந்நிலையில், பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசுவதாக கற்பனை செய்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கிண்டலாக தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் ஒன்றை இட்டுள்ளார்.
அதில், "இப்போது வாஷிங் மெஷின்களையும் தேர்தல் பத்திரங்களையும் கொண்டு வந்திருக்கிறோம். அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் நாங்கள் Paytm கொண்டு வர மாட்டோம். நேரடியாக பிரதமருக்கே பணம் கொடுக்கும் PayPM திட்டம் கொண்டு வருவோம் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
- கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு கச்சத்தீவை மீட்பதற்கு எதுவும் செய்யவில்லை.
- நாடு முழுவதும் 150 இடங்களைதான் வெல்ல முடியும் என்பது அவர்களுக்கு தெரியும்.
சென்னை:
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்த கருத்துக்கு தி.மு.க. பதிலடி கொடுத்துள்ளது. தி.மு.க. செய்தி தொடர்பாளர் சரவணன் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நீங்கள் (பாரதிய ஜனதா) என்ன செய்தீர்கள். கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு கச்சத்தீவை மீட்பதற்கு எதுவும் செய்யவில்லை. பா.ஜ.க. இப்போது ஏன் இப்படி செய்கிறது. நாடு முழுவதும் 150 இடங்களைதான் வெல்ல முடியும் என்பது அவர்களுக்கு தெரியும். தேர்தல் பத்திர ஊழலில் இருந்து திசை திருப்பும் பிரச்சனைகளை அவர்கள் கையில் எடுக்க விரும்புகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பணம் யார் கொடுத்தது. யார் வாங்கினார்கள். எப்போது கொடுத்தது. எல்லா விவரங்களும் கிடைக்கிறது.
- தேர்தல் பத்திரத்தில் சில குறைபாடுகள் உள்ளன. எல்லா விசயங்களும் முழுமையாக இல்லை.
பிரதமர் மோடி தந்தி டி.வி.க்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். தேர்தல் பத்திரம் மிகப்பெரிய ஊழல் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
தேர்தல் பத்திரம் விவாகரம் பா.ஜனதா கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரதமர் மோடி அளித்த பதில் பின்வருமாறு:-
இந்த விவாகரத்தில் நான் என்ன செய்து விட்டேன். எதனால் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது என சொல்லுங்கள். இதற்காக இவர்கள் (எதிர்க்கட்சிகள்) எல்லோரும் சந்தோசப்பட்டு ஆடுகிறார்கள். இவர்கள் எல்லோரும் துன்பம்தான் படப்போகிறார்கள்
இந்த புத்திசாலிகளிடம் கேட்கிறேன். 2014-க்கு முன் எத்தனை தேர்தல் நடந்துள்ளது. அத்தனை தேர்தல்களிலும் எவ்வளவு செலவு ஆகியிருக்கும். அந்த பணம் எங்கிருந்து வந்தது? யாருக்கு கொடுக்கப்பட்டது என்று எந்த நிறுவனமாவது சொல்ல முடியுமா?.
தற்போது மோடி வந்து தேர்தல் பத்திரத்தை உருவாக்கிவிட்டார். அதனால் உங்களால் தேட முடிகிறது. பணம் யார் கொடுத்தது. யார் வாங்கினார்கள். எப்போது கொடுத்தது. எல்லா விவரங்களும் கிடைக்கிறது. தேர்தல் பத்திரத்தில் சில குறைபாடுகள் உள்ளன. எல்லா விசயங்களும் முழுமையாக இல்லை. சில குறைகளை தீர்த்துவிட்டால், தேர்தல் பத்திரத்தில் நன்மைகள் கிடைக்கும்.
- தனிநபர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்குப் நிதி வழங்க அனுமதிக்கும் வகையில் தேர்தல் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
- ஒரு அரசியல் கட்சியால் 15 நாட்களுக்குள் பத்திரங்களில் இருந்து பணத்தை பெற முடியும்.
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்ச நீதிமன்றம் தடை செய்வதற்கு 3 நாட்கள் முன்பு, மேலும் ₹10,000 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை அச்சிட பொதுத்துறை நிறுவனமான இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகத்திற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளிவந்துள்ளது.
தலா ₹1 கோடி மதிப்புள்ள 10,000 தேர்தல் பத்திரங்களை அச்சிட ஒன்றிய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்ற தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் அம்பலமாகியுள்ளது
10000 கோடி மதிப்பிலான தேர்தல் பாத்திரங்களை அச்சிடும் பணியை நிறுத்துமாறு நிதி அமைச்சகம் கடந்த மாதம் 28-ம் தேதி உத்தரவிட்டது.
தேர்தல் பத்திரங்களை தடை செய்த உச்சநீதிமன்ற உத்தரவிற்கு 2 வாரங்களுக்கு பின்னர், எஸ்பிஐ நிதி அமைச்சகத்திடம் அச்சிடும் பணியை நிறுத்தி வைக்குமாறு கூறிய பின்பு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகம் தலா ₹1 கோடி மதிப்புள்ள 10,000 தேர்தல் பத்திரங்களில் ஏற்கனவே 8,350 தேர்தல் பத்திரங்களை எஸ்பிஐக்கு தயாரித்து அனுப்பியுள்ளது. ஆகவே மீதமுள்ள 1,650 தேர்தல் பத்திரங்கள் அச்சிடுவது மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தனிநபர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி என அரசியல் கட்சிகளுக்குப் பத்திரங்களை வழங்க அனுமதிக்கும் வகையில் தேர்தல் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு அரசியல் கட்சியால் 15 நாட்களுக்குள் பத்திரங்களில் இருந்து பணத்தை பெற முடியும். ஆனால், யார் எந்த அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுத்தார்கள் என்ற தகவல் இதில், மறைமுகமாக பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் தேர்தலுக்கு முன்பாக பாஜக அரசால் முடக்கப்பட்டுள்ளது
- இது காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்கும் முயற்சிகளே அன்றி வேறில்லை
வருமான வரித்துறை சார்பில் சுமார் 1,823 கோடி ரூபாய் செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீடு மற்றும் அபராதம், வட்டி ஆகியவை தொடர்பாக 1,823 கோடி ரூபாய் கட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"நமது ஜனநாயக நாட்டில் மிகப் பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் தேர்தலுக்கு முன்பாக பாஜக அரசால் முடக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்கும் முயற்சிகளே அன்றி வேறில்லை, ஆனால் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக நாங்கள் பயப்பட மாட்டோம், வரும் தேர்தலில் நம் நாட்டு மக்கள் பாஜகவுக்கு இதற்காக பதிலையே வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
பாஜகவின் 8,250 கோடி தேர்தல் பத்திர ஊழல் இந்திய நாட்டையே உலுக்கியது. ஆளும் கட்சி தங்களது நண்பர்களிடம் இருந்து பணத்தை பெரும் அதே சமயத்தில், வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சியை குறிவைத்து 1800 கோடி அபராதம் விதித்துள்ளது.
தேர்தல் நேர்மையாக நடைபெறவேண்டும் என்பதையே ஜனநாயகம் விரும்புகிறது. வரி பயங்கரவாதத்தை அல்ல. ஒரு கட்சி பல ஆயிரம் கோடிகளை மிரட்டி வசூலித்துவிட்டு, மற்றொரு கட்சிக்கு பல ஆயிரம் கோடியை அபராதமாக செலுத்த உத்தரவிடுவது எப்படி நியாயம்?. பாஜக அரசு வரி பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருகிறது" என்று ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
- தேடுதல் பத்திர விவரங்கள் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்
- நம்மால் எதையும் செய்யமுடியும் என்று சங்பரிவார் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது
தேடுதல் பத்திர விவரங்கள் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் தான் இந்த பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப, டெல்லி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். நம் நாடு எதிர் நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான உதாரணம் இது. நம்மால் எதையும் செய்யமுடியும் என்று சங்பரிவார் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
தேர்தல் பத்திர முறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. தேர்தல் பத்திர முறை இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று அவர் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.
அதன் பின்பு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்பட அனைத்து விவரங்களையும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
- நிறுவனங்கள் நன்கொடை அளித்த விவரங்களை மட்டும் தான் எஸ்.பி.ஐ. தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது
- தேர்தல் பத்திரங்களின் முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வழங்கவேண்டும்
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்பட அனைத்து விவரங்களையும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்.
கடந்த பிப்ரவரி மாதம் 15 அன்று உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரம் பற்றிய தகவல்களை எஸ்.பி.ஐ. இரண்டு பகுதிகளாக வழங்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், நிறுவனங்கள் நன்கொடை அளித்த விவரங்களை மட்டும் அளித்த எஸ்.பி.ஐ. முழுமையான தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கவில்லை.
இதனையடுத்து கடந்த 18-ம் தேதி அன்று தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டு அதுகுறித்து பிரமாணப்பத்திரம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவின் படி தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி இன்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.
- காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன
- தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை சுதந்திரமாக செயல்பட வேண்டும்
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் முடக்கப்பட்டுள்ளது அந்த கட்சிக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய சோனியா காந்தி, "ஒருபுறம், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு பெரும் தொகை நன்கொடையாக வந்துள்ளது. மறுபுறம், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சிக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு, தேர்தல் செலவுகள் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த சவாலான சூழ்நிலையிலும் தேர்தல் பரப்புரையை திறம்பட செய்ய எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம்
இது நமது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகும். ஜனநாயகத்தை முடக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது என்று அவர் பேசினார்.
பின்னர் பேசிய கார்கே, "தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை சுதந்திரமாக செயல்பட வேண்டும். நியாயமான, நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் களம் சமமாக இருக்க வேண்டும். கணக்கில் வராத கட்டுக் கட்டான பணம் பாஜகவுக்கு சென்றுள்ளது. ஒரே கட்சி எல்லாவற்றையும் கைக்குள் வைத்துக்கொள்ள முயற்சித்து செயல்படுகிறது.
தேர்தல் பத்திரத்தின் மூலம், 55% நிதியை பாஜக பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி வெறும் 11% மட்டுமே பெற்றிருக்கிறது. இந்நிலையில் தான், எங்கள் வங்கி கணக்குகளையும் முடக்கி, அபாயகரமான விளையாட்டை பாஜக விளையாடியிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்