search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாம்பியா"

    • 723 வனவிலங்குகளைக் கொன்று அவற்றின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்த நாம்பியா முடிவெடுத்துள்ளது.
    • இந்த திட்டத்தின்கீழ் ஏற்கவே 150 விலங்குகள் கொல்லப்பட்டு அவற்றின்மூலம் 63 டன் இறைச்சி பெறப்பட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நாம்பியாவில் கடுமையான வறட்சி நிலவுவதால் மக்களுக்கு உணவளிக்க வனவிலங்குகளைக் கொல்ல அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு 2023 முதல் கடுமையான வறட்சியால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது நாம்பியா.

    இதனால் தென் ஆப்பிரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் பாதியளவு அதாவது சுமார் 14 லட்சம் மக்கள் நாம்பியாவில் உள்ள நிலையில் வறட்சியால் பசி மற்றும் பட்டினியில் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். எனவே அவர்களுக்கு உணவளிக்கும் பொருட்டு காட்டில் உள்ள 723 வனவிலங்குகளைக் கொன்று அவற்றின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்த நாம்பியா முடிவெடுத்துள்ளது.

     

    இந்த 723 வனவிலங்குகளில் 300 வரிக்குதிரைகள், 100 wildebeest காட்டெருமைகள், 50 இம்பாலா மான்கள், 100 எலான்ட் வகை மான்கள், 30 நீர்யானைகள்[hippopotamuses] , 83 யானைகள் ஆகியவையும் அடங்கும். இந்த திட்டத்தின்கீழ் ஏற்கவே 150 விலங்குகள் கொல்லப்பட்டு அவற்றின்மூலம் 63 டன் இறைச்சி பெறப்பட்டுள்ளது.

     

    தென் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள உலகின் மிகப்பெரிய ஆப்பிரிக்கச் சவானா யானைகள் அழிந்து வரும் பட்டியலில் உள்ள நிலையில் கடுமையான வறட்சியால், உணவுக்காக யானைகள் கொல்லப்படுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை குடிமக்களுக்காக நாட்டின் இயற்கை வளங்களை பயன்படுத்துவதற்கு தங்களின் அரசியல் அமைப்பில் இடம் உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

     

    • நோயாளிகள் அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் தீவிர வயிற்றுபோக்கு ஏற்பட்டது.
    • புகாரின்பேரில் ஷவர்மா விற்ற ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

    லுசாகா:

    தென் ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவின் காப்பர்பெல்ட் மாகாணத்தில் உள்ள ஓட்டலில் வாடிக்கையாளர்கள் ஷவர்மா வாங்கி சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட அவர்கள் வாந்தி எடுத்து மயங்கினர். ஷவர்மா சாப்பிட்டதால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு 80 பேர் நிலைகுலைந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஷவர்மா சாப்பிட்டவர்களின் உணவில் விஷம் கலந்திருந்ததால் உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். நோயாளிகள் அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் தீவிர வயிற்றுபோக்கு ஏற்பட்டது. அவர்களுக்கு டாக்டர்கள் சிசிச்சை அளித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதனிடையே புகாரின்பேரில் ஷவர்மா விற்ற ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

    • காலரா தொற்றால் டயோரியா மற்றும் நீரிழப்பு போன்ற கடும் பாதிப்புகள் ஏற்படும்.
    • கடந்த 6-ம் தேதி முதல் முறையாக மனிதாபிமான உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    ஜாம்பியா நாட்டில் காலரா வியாதி பரவலாக அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை காலரா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,526 ஆக உள்ளது. 613 பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றில் லுசாகா மாகாணத்தில் தொற்றுகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து உள்ளன.

    ஜாம்பியாவில் காலரா பெருந்தொற்று பரவலால் 35 லட்சம் மக்கள் பாதிப்புகளை எதிர்நோக்கி உள்ளனர்.

    அந்நாட்டில் மழைக்காலம் வரும் மே மாதம் வரை இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பாதிப்புகளும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

    கனமழையால் ஏற்படக்கூடிய வெள்ளம், காலரா பரவலை அதிகரிக்கச் செய்யும். காலரா தொற்றால் டயோரியா மற்றும் நீரிழப்பு போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.

    இந்நிலையில், ஜாம்பியா நாட்டுக்குத் தேவையான நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள், குளோரின் மாத்திரைகள் மற்றும் பிற பொருட்கள் உள்ளடங்கிய 3.5 டன் எடையிலான உதவி பொருட்கள் இந்தியா சார்பில் அந்நாட்டுக்கு 2-வது முறையாக அனுப்பி வைக்கப்பட்டன. இந்திய தூதர் வழியே ஜாம்பிய அரசிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

    இதனை மத்திய வெளிவிவகாரத்துறை மந்திரி ஜெய்சங்கர் அவரது எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்து உறுதிப்படுத்தி உள்ளார்.

    கடந்த 6-ம் தேதி முதல் முறையாக மனிதாபிமான உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×