search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் தொடர்"

    • குமார சங்ககாரா இங்கிலாந்து ஒயிட்-பால் அணிக்கு பயிற்சியாளராக செல்ல வாய்ப்பு.
    • அதனால் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியை ராகுல் டிராவிட் ஏற்க உள்ளதாக தகவல்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட், இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார். இதனால் ஐபிஎல் அணிகளுக்கு பயிற்சியாளராக முடியாமல் இருந்தது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் 2014-ம் ஆண்டு வரை வீரராக விளையாடினார். அதன்பின் பயிற்சியாளராக செயல்பட்டார். பின்னர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

    சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பையுடன் அவரது தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் அணிகளில் ஏதாவது ஒரு அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரண்டரை முதல் மூன்று மாதம் என்பதால் அதை ஏற்பதில் சிரமம் இருக்காது. பெரும்பாலான பயிற்சியாளர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கையை சேர்ந்த சங்ககாரா உள்ளார். இவர் இங்கிலாந்து ஒயிட்-பால் அணி பயிற்சியாளர் பதவியை ஏற்பார் எனத் தெரிகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சங்கக்கராவை நியமிக்க விரும்புவதாக தெரிகிறது. இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்பது குறித்து சங்கக்கராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சங்கக்கரா மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.

    இதனால் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவியை சங்ககாரா ஏற்றுக்கொண்டால், ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக வாய்ப்புள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக ஷேன் பாண்ட், டிரேவர் பென்னி இருந்து வருகிறார்கள்.

    இங்கிலாந்து ஒயிட்-பால் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்து மேத்யூ மோட் வெளியேற இருக்கும் நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அவருக்கு மாற்று பயிற்சியாளரை தேடிவருகிறது.

    • நாட்டுக்காக விளையாட வெளியேறிய இந்த முடிவு மிகவும் நியாயமானது என்றார் வாகன்.
    • பாகிஸ்தான் பற்றி மைக்கேல் வாகன் கூறியது உண்மைதான் என்றார் கம்ரான் அக்மல்.

    கராச்சி:

    டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து ஜாஸ் பட்லர், மொயீன் அலி, ரீஸ் டாப்லி, வில் ஜாக்ஸ் போன்ற இங்கிலாந்து வீரர்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்பே வெளியேறினர்.

    இதனால், முழுமையாக விளையாடுங்கள். இல்லையெனில் ஐ.பி.எல். தொடரில் விளையாட இந்தியாவுக்கு வராதீர்கள் என இர்பான் பதான் விமர்சித்தார். அதேபோல, பாதியில் வெளியேறும் இங்கிலாந்து வீரர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என சுனில் கவாஸ்கர் விமர்சித்தார்.

    இதற்கிடையே, நாட்டுக்காக விளையாடுவதற்காக வெளியேறிய இந்த முடிவு மிகவும் நியாயமானது என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பதிலடி கொடுத்திருந்தார். மேலும், சுமாரான பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதைவிட தரமான ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதே சிறந்தது என தெரிவித்தார். இதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சில முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், சமீப காலங்களில் அயர்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் பற்றி மைக்கேல் வாகன் கூறியது உண்மைதான் என கம்ரான் அக்மல் ஒப்புக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக கம்ரான் அக்மல் கூறியதாவது:

    அது மிகவும் வலியைக் கொடுக்கும் கருத்தாகும். ஆனால் அவருடைய கருத்து சரியானது என நினைக்கிறேன்.

    அனைவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் லெவல் தெரியும். இப்போதெல்லாம் நாம் அயர்லாந்து போன்ற சிறிய அணிக்கு எதிராக தோற்கிறோம்.

    எனவேதான் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் கடினமானது அல்ல என மைக்கேல் வாகன் தெரிவித்தார். அதனால் தவறு நம்முடையது.

    ஒருவேளை நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடியிருந்தால் அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார்.

    ஐ.பி.எல். தொடரைப் பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டும். அங்கே 40,000 முதல் 50,000 ரசிகர்களுக்கு முன் சிறந்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் பங்கேற்கின்றனர். எனவே அது கடினமான மற்றும் தரமான கிரிக்கெட்டாகும் என தெரிவித்தார்.

    • டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்படுவார்.
    • ஐ.பி.எல். போட்டிக்கு ரிஷப் பண்ட் உடல் தகுதியுடன் இருப்பார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.

    இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் காயத்தில் இருந்து குணமடைந்தார். அதன்பின் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது முழுமையாக குணம் அடைந்துள்ள ரிஷப் பண்ட் கிரிக்கெட் களத்துக்கு திரும்ப தயாராக உள்ளார்.

    அடுத்த மாதம் தொடங்க உள்ள ஐ.பி.எல். போட்டியில் அவர் விளையாட உள்ளார். டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரரான ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என்று டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக டெல்லி அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் கூறியதாவது:-

    2024-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு ரிஷப்பண்ட் கேப்டனாக செயல்படுவார். ஆனால் முதல் 7 ஆட்டங்களில் விக்கெட் கீப்பிங் பணியை செய்யமாட்டார். அவர் தனது விக்கெட் கீப்பிங் பயிற்சிகளை தொடங்கியுள்ளார்.

    பேட்டிங் மற்றும் ஓட்ட பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஐ.பி.எல். போட்டிக்கு ரிஷப் பண்ட் உடல் தகுதியுடன் இருப்பார். முதல் போட்டியில் இருந்தே அவர் தலைமை தாங்குவார். ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே அவரது உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொறுத்து மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவது பற்றி முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
    • ஐபிஎல் தொடர் நடைபெறும் தேதி இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளது.

    இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசனானது மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ஐபிஎல் 2024 தொடரில் இருந்து விலகி உள்ளார். இடது கணுக்கால் காயம் குணமடையாத காரணத்தால் அவர் விளையாட மாட்டார் என தெரிய வந்துள்ளது.

     

    இவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது.
    • ஐ.பி.எல். தொடரை கொண்டாடும் விதமாக இத்தனை ஆண்டுகளாக விளையாடிய வீரர்களை கொண்ட கனவு அணி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது.

    ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற ஐ.பி.எல். தொடரை கொண்டாடும் விதமாக இத்தனை ஆண்டுகளாக விளையாடிய வீரர்களை கொண்ட கனவு அணி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த அணியை தேர்ந்தெடுக்கும் குழுவில் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், மேத்யூ ஹைடன், டாம் மூடி, டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இடம் பெற்றனர். அவர்களை தவிர்த்து கிட்டத்தட்ட 70 பத்திரிகையாளர்களும் இந்த அணியை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அனைத்து ஐ.பி.எல். போட்டிகளையும் அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்பட்ட இந்த அணிக்கு டோனி கேப்டனாக தேர்வாகி இருக்கிறார்.

    அனைத்து ஐ.பி.எல். போட்டியையும் சேர்த்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த 15 பேர் கொண்ட அணி வருமாறு:-

    டோனி (கேப்டன்), விராட் கோலி, கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், ரெய்னா, டிவில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா,பொல்லார்டு, ரஷீத்கான், சுனில் நரைன், யசுவேந்திர சாஹல், மலிங்கா, பும்ரா.

    ×