search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்எஸ்பி"

    • தெலுங்கானாவில் விவசாயிகள் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என ரேவந்த் ரெட்டி கூறினார்.
    • விவசாயிகள் கடன் தொகைக்கான இரண்டாவது தவணையை முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்தார்.

    புதுடெல்லி:

    தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகள் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என மாநில முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, விவசாயிகள் கடன் தொகைக்கான இரண்டாவது தவணையை முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி இன்று அறிவித்தார்.

    இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    தெலுங்கானா விவசாய சகோதர, சகோதரிகளுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்.

    தேர்தல் வாக்குறுதியின்பட, தெலுங்கானா அரசு விவசாயக் கடன் தள்ளுபடியின் இரண்டாவது தவணையை வெளியிட்டுள்ளது.

    ஒருபுறம், பா.ஜ.க. அரசு நாட்டின் விவசாயிகளை கடன் வலையில் சிக்க வைத்துள்ளது. அவர்களின் கோரிக்கை மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை மறுத்து வருகிறது.

    மறுபுறம், காங்கிரஸ் விவசாயிகளுக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    எம்.எஸ்.பி.க்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் என்ற ஆயுதத்தை வழங்குவதன் மூலம் இந்தக் கடன் பொறியிலிருந்து இந்தியா கூட்டணி விவசாயிகளை விடுவிக்கும் என பதிவிட்டுள்ளார்.

    • 2020-2021-ல் டெல்லி எல்லையில் விவசாயிகள் சுமார் ஓராண்டிற்கு மேலாக போராட்டம் நடத்தினர்.
    • அதன்பின் டெல்லி மாநிலத்திற்கு டிராக்டர் பேரணி மேற்கொள்ள முடிவு செய்தனர்.

    சட்டப்பூர்வமான எம்எஸ்பி (legal guarantee to MSP), விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்ளிட்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கமான சம்யுக்த் கிஷான் மோர்ச்சா (SKM) தெரிவித்துள்ளது.

    பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க நேரம் கேட்கப்படும். மற்றும் பாராளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்கள் ஆகியோருக்கு விவசாயிகள் போராட்டம் குறித்த குறிப்பாணை வழங்கப்படும்.

    2020-2021-ல் டெல்லி பஞ்சாப்- டெல்லி- அரியானா மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. அதன்பின் டெல்லி நோக்கி டிராக்டர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த முறை மாநிலம் தழுவிய போராட்டம் குறித்து கவனம் செலுத்தி வருகிறோம். குறிப்பாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர், அரியானா மாநிலங்களில் கவனம் செலுத்துவோம்.

    எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியான போராட்ட முறையை பயன்படுத்தமாட்டோம். நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம்.

    விவசாயிகள் போராட்டத்தால் மக்களவை தேர்தலில் ஆதிக்கமான 159 புறநகர் தொகுதிகளில் பாஜக தோல்வியை சந்திக்க நேரிட்டது என எஸ்கேஎம் தலைவர்கள் தெரிவித்தனர்.

    ஆகஸ்ட் 9-ந்தேதி வெள்ளையனே வெளியேறு என்பதை போன்று கார்பரேட்கள் வெளியேறு அனுசரிக்கப்படும்.

    உலக வர்த்தக அமைப்பில் (WTO) இருந்து இந்தியா வெளியேற வேண்டும், மேலும் பன்னாட்டு நிறுவனங்களை விவசாயத் துறையில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்பது அவர்களின் முக்கிய கோரிக்கைகளில் அடங்கும்.

    • 14 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    • கார்ப்பரேட் வரி விலக்கு 1.8 லட்சம் கோடி அளவில் கொடுக்கப்பட்டுள்ளது.

    விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தல் தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் "டெல்லி சலோ" என்ற பெயரில் டெல்லி நகரில் பேரணி செல்ல முயன்றனர்.

    ஆனால் அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். தங்களை டெல்லிக்கு அனுமதிக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். இதற்கிடையே மத்திய அரசு விவசாய சங்கங்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இதுவரை நான்கு கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. 4-வது கட்ட பேச்சுவார்த்தையின்போது குறிப்பிட்ட பருப்பு வகைகள், காட்டன், சோளம் உள்ளிட்டவைகளுக்கு ஐந்தாண்டுகள் குறைந்தபட்ச ஆதாய விலை வழங்கப்படும் என மத்திய அரசு பரிந்துரை செய்தது. மேலும் பல பரிந்துரைகளை முன்வைத்தது.

    ஆனால், விவசாயிகள் மத்திய அரசின் பரிந்துரையை ஏற்கவில்லை. நாளை முதல் பேரணி தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் எம்.எஸ்.பி.-க்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை விவசாயிகள் பட்ஜெட்டின் சுமையாக உருவாக்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக ஜிடிபி வளர்ச்சியின் உந்து சக்தியாக இருப்பார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் "மோடியின் பிரசார இயந்திரங்கள், அவருக்கு சாதகமாக ஊடகங்களும் எம்.எஸ்.பி. குறித்து பொய்களை பரப்பி விட்டன. மத்திய அரசின் பட்ஜெட்டில் எம்.எஸ்.பி.க்கான சட்ட உத்தரவாதத்திற்கு சாத்தியமில்லை என்பது பொய்.

    CRISIL-ன் கருத்துப்படி 2022-23-ல் விவசாயிகளுக்கு எம்.எஸ்.பி. அளித்திருந்தால், கூடுதலாக 21 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு சுமையைாக இருந்திருக்கும். இது மொத்த பட்ஜெட்டில் 0.4 சதவீதம்தான். இது உண்மை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், 14 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கார்ப்பரேட் வரி விலக்கு 1.8 லட்சம் கோடி அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகளுக்கான இந்த சிறிய அளவிலான செலவை மத்திய செய்ய மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

    விவசாயத்துறையில் முதலீடு அதிகரிக்கும். கிராமப் பகுதிகளில் தேவை அதிகரிக்கும். விதவிதமான பயிர்களை வளர்ப்பதில் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படும். இது நாட்டின் செழிப்பிற்கு உத்தரவாதம். வதந்தி பரப்புவது டாக்டர் சுவாமிநாதன் மற்றும் அவரது கனவை இழிவுப்படுத்துவதாகும் என்றார்.

    ×