என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய யூனியன் முஸ்லீம் லீக்"
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
இந்நிலையில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யயப்பட்டுள்ளது.
- கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் 15 தொகுதிகள் தற்போது காங்கிரஸ் வசம் உள்ளன.
- தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி பற்றி தெரிவித்தது மட்டுமின்றி, ராஜ்யசபா தொகுதி ஒன்றையும் கேட்டுள்ளதாக தெரிகிறது.
திருவனந்தபுரம்:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற மே மாதம் முடிவடைவதால், 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலில் களமிறங்க தயாராகி வருகின்றன.
அனைத்து மாநிலங்களிலும் பிரதான கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. கேரள மாநிலத்தை பொறுத்தவரை பாரதிய ஜனதா, காங்கிரஸ், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்டது மட்டுமின்றி, தங்களது கூட்ட ணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையை நடத்தி வருகின்றன.
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் வயநாடு, திருவனந்தபுரம், கோழிக்கோடு, அட்டிங்கல், இடுக்கி, பத்தினம்திட்டா, சாலக்குடி, எர்ணாகுளம், வடகரை, கண்ணூர், மாவேலிக்கரை, பாலக்காடு, திருச்சூர், ஆலத்தூர், காசர்கோடு ஆகிய 15 தொகுதிகள் தற்போது காங்கிரஸ் வசம் உள்ளன.
அந்த தொகுதிகள் மட்டுமின்றி, மீதமுள்ள 5 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.
காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், எதிர்க்கட்சி தலைவர் சதீசன், த.மு.மு.க. தலைவர் குஞ்சாலிக்குட்டி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பனக்காடு சயீத் சாதிக் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி இரு கட்சி தலைவர்களும் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் தங்களுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை திருப்தி கரமாக இருந்ததாக கூறி யுள்ளனர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி பற்றி தெரிவித்தது மட்டுமின்றி, ராஜ்யசபா தொகுதி ஒன்றையும் கேட்டுள்ளதாக தெரிகிறது.
அதுபற்றி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுதாகரன் கூறும்போது, ராஜ்யசபா சீட் காலியாகும்போது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஏற்க தயாராக இருந்தால், அதை அவர்களுக்கு நாங்கள் வழங்குவோம் என்று தெரிவித்தார். தங்களது தொகுதி பங்கீடு முடிவுகளை நாளை (27-நதேதி) அறிவிப்போம் என்று இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன.
- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்.
- நீண்டகாலம் நலத்துடன் திகழ்ந்து தம் பொதுவாழ்வுப் பணியைத் தொடர்ந்திட விழைகிறேன்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
ஐயா அவர்கள் நீண்டகாலம் நலத்துடன் திகழ்ந்து தம் பொதுவாழ்வுப் பணியைத் தொடர்ந்திட விழைகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.