என் மலர்
நீங்கள் தேடியது "முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி"
- 90 லட்சம் குடும்பங்களுக்கு ₹500 சிலிண்டர் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி
- அனைத்து வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும்
தெலங்கானாவில் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த 200 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் ₹500 சிலிண்டர் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி
அனைத்து வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும் என்றும், மகாலட்சுமி திட்டத்தின் மூலம் மொத்தம் 40 லட்சம் குடும்பங்கள் இதில் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்தார்.
தெலுங்கானாவில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயண வசதியை வழங்கும் திட்டத்தையும், ராஜீவ் ஆரோக்யஸ்ரீ திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு திட்டத்தையும் டிசம்பர் 9-ஆம் தேதி காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- போக்குவரத்து சீரமைப்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
- தனித்தனியாக சீருடைகளும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் திருநங்கைகள் பல்வேறு பணிகளில் பணியாமத்தப்படுவார்கள் என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக ஐதராபாத் மாநகர பகுதியில் போக்குவரத்து சீரமைக்க திருநங்கைகள் படை உருவாக்க ப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தனித்தனியாக போக்குவரத்து சீரமைப்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
இதற்காக தனி தனியாக சீருடைகளும் வடிவமைக்க பட்டு வருகின்றன. திருநங்கை படையில் உள்ளவர்களுக்கு இரண்டு வகையான சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
திருநங்கை படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும்.
அதற்கு பிறகு ஐதராபாத் மாநகர பகுதியில் திருநங்கை படையினர் பணியில் அமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தனர்.
- தெலுங்கானா மாநிலத்திற்கு 5 பத்ம விருதுகளையாவது வழங்கி இருக்க வேண்டும்.
- 4 கோடி தெலுங்கானா மக்களுக்கு அவமானம்.
திருப்பதி:
இந்தியா முழுவதும் நடிகர் அஜித்குமார் உட்பட 139 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் 2 பேருக்கு மட்டுமே பத்ம விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் பத்ம விருதுகளுக்கு மாநில அரசு பரிந்துரை செய்த பிரபலங்களின் பெயர்களை பரிசீலனை செய்யவில்லை. 139 பேருக்கு விருதுகள் அறிவித்த மத்திய அரசு தெலுங்கானா மாநிலத்திற்கு 5 பத்ம விருதுகளையாவது வழங்கி இருக்க வேண்டும்.
ஆனால் 2 பேருக்கு மட்டுமே பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த பிரபலங்களின் பெயர்களை பத்ம விருதுகளுக்கு மத்திய அரசு பரிசீலிக்காதது 4 கோடி தெலுங்கானா மக்களுக்கு அவமானம்.
மேலும் பத்ம விருதுகள் அறிவிப்பில் தெலுங்கானாவுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.