என் மலர்
நீங்கள் தேடியது "நடுவர்"
- பல சமயங்களில், நமது மனம் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வேலை செய்யத் தவறிவிடும்.
- இஷான் கிஷனின் நேர்மையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஐதராபாத்:
ஐதராபாத்தில் நேற்றிரவு நடத்திய 41-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் ஐதராபாத் வீரர் இஷான் கிஷன் அவுட் ஆனது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தீபக் சாஹர் பந்து வீச்சில் இஷான் கிஷன் பேட்டை உரசுவது போல் சென்றது. ஆனால் விக்கெட் கீப்பரோ, மும்பை வீரர்களோ யாரும் அப்பீல் செய்யவில்லை.
நடுவர் இஷான் கிஷன் வெளியேறியதையடுத்து யோசித்து கொண்டே அவுட் கொடுத்தார். ஆனால் இஷான் கிஷன் ரிவ்யூவும் கேட்காமல் பெவிலியன் நோக்கி நடந்தார். ஆனால் ரீப்ளேயில் பந்து பேட்டில் உரசவில்லை என்பது தெரியவந்தது. களநடுவர் மற்றும் இஷான் கிஷனின் இந்த செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பல சமயங்களில், நமது மனம் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வேலை செய்யத் தவறிவிடும். அது மூளை மங்கிப்போனதைத்தான் குறிக்கிறது. இஷான் கிஷன் குறைந்த பட்சம் நடுவர் தனது முடிவை எடுக்கும் வரை காத்திருக்கலாம். நடுவரை அவரது வேலையை செய்ய விடுங்கள். அதற்காக அவர் பணமும் வாங்குகிறார்.
இஷான் கிஷனின் நேர்மையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பந்து பேட்டில் பட்டிருந்தால் கூட அது புரிந்துகொள்ளத்தக்கதாக இருந்திருக்கும். ஆனால் அது அவுட்டும் இல்லை. நடுவரும் உறுதியற்றவராக இருந்தார். ஆனால் திடீரென இஷான் ஆடுகளத்தை விட்டு வெளியேறியது குழப்பமானது.
என்று கூறினார்.
- நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
- 3 முறை ஐசிசி-யின் சிறந்த நடுவர் விருதை இவர் வென்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நடுவரான மரைஸ் எராஸ்மஸ், சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2006-ம் ஆண்டு இவர் தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவராகப் பணியாற்றினார்.
அதுமுதல் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றியுள்ளார். 3 முறை ஐசிசி-யின் சிறந்த நடுவர் விருதை இவர் வென்றுள்ளார்.
தற்போது 61 வயதாகும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட்டில் தன்னுடைய பங்களிப்பு இருக்கும் எனக் கூறியுள்ளார்.
- 2014-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்த போது இவர் தான் நடுவராக இருந்தார்.
- இவர் நடுவராக செயல்பட்ட 2016 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்தது.
டி20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சூப்பர் 8 சுற்று வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - அமெரிக்கா அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில் இதற்கான நடுவர்களை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி இந்திய அணிக்கு எமனாக கருதபடும் ரிச்சர்ட் கெட்டில்பரோ இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இடம் பிடித்தது மட்டுமல்லாமல் இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் போட்டிக்கு இவர் நடுவராக செயல்பட உள்ளார். இது இந்திய ரசிகர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால் ஐசிசி தொடர்களில் இந்திய அணி தோல்வியடைந்த அத்தனை போட்டிகளிலும் ரிச்சர்ட் கெட்டில்பரோ தான் நடுவராக செயல்பட்டுள்ளார். இவர் நடுவராக இருந்த 2014-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில் இலங்கை அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. அதேபோல் 2015 உலக்கோப்பை அரையிறுதியில் இந்தியா அடைந்த தோல்வி, 2016 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தது.
அதேபோல் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. அப்போது ரிச்சர்ட் கெட்டில்பரோ தான் நடுவராக பணியாற்றியுள்ளார். அதேபோல் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணியின் டோனி ரன் அவுட்டான போது, நடுவராக இருந்து கெட்டிபரோ கொடுத்த ரியாக்ஷன் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாகும். அதேபோல் 2023-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சுப்மன் கில்லுக்கு அவுட் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார் கெட்டில்பரோ.
இதை தவிர ஒருநாள் உலகக் கோப்பை இறுதி போட்டியிலும் இவர் தான் நடுவராக செயல்பட்டார். இதிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் என்ன நடக்கும் என ரசிகர்கள் பீதியுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
சூப்பர் 8 சுற்றுக்கான நடுவர்கள் விவரங்களையும் எந்தெந்த போட்டிக்கு யார் நடுவர் என்பதையும் ஐ.சி.சி அறிவித்துள்ளது. சூப்பர் 8 சுற்றில் மொத்தம் 12 ஆட்டங்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் 8 சுற்றுக்கான நடுவர்கள் விவரம்:-
1.) அமெரிக்கா - தென் ஆப்பிரிக்கா (ஆண்டிகுவா)
நடுவர்: ரஞ்சன் மதுகல்லே
கள நடுவர்கள்: கிறிஸ் கேப்னி மற்றும் ரிச்சர்ட் கெட்டில்பரோ
டிவி நடுவர்: ஜோயல் வில்சன்
நான்காவது நடுவர்: லாங்டன் ருசரே
2.) இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் (செயிண்ட் லூசியா)
நடுவர்: ஜெப் குரோவ்
கள நடுவர்கள்: நிதின் மேனன் மற்றும் அஹ்சன் ராசா
டிவி நடுவர்: ஷர்புத்தூலா இப்னே ஷாஹித்
நான்காவது நடுவர்: கிறிஸ் பிரவுன்
3.) ஆப்கானிஸ்தான் - இந்தியா (பார்படாஸ்)
நடுவர்: டேவிட் பூன்
கள நடுவர்கள்: ரோட்னி டக்கர் மற்றும் பால் ரீபெல்
டிவி நடுவர்: அல்லாஹுதீன் பலேக்கர்
நான்காவது நடுவர்: அலெக்ஸ் வார்ப்
4.) ஆஸ்திரேலியா - வங்காளதேசம் (ஆண்டிகுவா)
நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன்
கள நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் மைக்கேல் கோப்
டிவி நடுவர்: குமார் தர்மசேன
நான்காவது நடுவர்: அட்ரியன் ஹோல்ஸ்டாக்
5.) இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா (செயிண்ட் லூசியா)
நடுவர்: ஜெப் குரோவ்
கள நடுவர்கள்: ஷர்புத்தூலா இப்னே ஷாஹித் மற்றும் கிறிஸ் பிரவுன்
டிவி நடுவர்: ஜோயல் வில்சன்
நான்காவது நடுவர்: கிறிஸ் கேப்னி
6.) அமெரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் (பார்படாஸ்)
நடுவர்: டேவிட் பூன்
கள நடுவர்கள்: பால் ரீபெல் மற்றும் அல்லாஹுதீன் பலேக்கர்
டிவி நடுவர்: ரோட்னி டக்கர்
நான்காவது நடுவர்: அலெக்ஸ் வார்ப்
7.) இந்தியா - வங்காளதேசம் (ஆண்டிகுவா)
நடுவர்: ரஞ்சன் மதுகல்லே
கள நடுவர்கள்: மைக்கேல் கோப் மற்றும் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்
டிவி நடுவர்: லாங்டன் ருசரே
நான்காவது நடுவர்: ரிச்சர்ட் கெட்டில்பரோ
8.) ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா (செயிண்ட் வின்செண்ட்)
நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன்
கள நடுவர்கள்: குமார் தர்மசேனா மற்றும் அஹ்சன் ராசா
டிவி நடுவர்: ரிச்சர்ட் இல்லிங்வொர்த்
நான்காவது நடுவர்: நிதின் மேனன்
9.) அமெரிக்கா - இங்கிலாந்து (பார்படாஸ்)
நடுவர்: டேவிட் பூன்
கள நடுவர்கள்: கிறிஸ் கேப்னி மற்றும் ஜோயல் வில்சன்
டிவி நடுவர்: பால் ரீபெல்
நான்காவது நடுவர்: அல்லாஹுதீன் பலேக்கர்
10.) வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா (ஆண்டிகுவா)
நடுவர்: ரஞ்சன் மதுகல்லே
கள நடுவர்கள்: ரோட்னி டக்கர் மற்றும் அலெக்ஸ் வார்ப்
டிவி நடுவர்: கிறிஸ் பிரவுன்
நான்காவது நடுவர்: ஷர்புத்தூலா இப்னே ஷாஹித்
11.) இந்தியா - ஆஸ்திரேலியா (செயிண்ட் லூசியா)
நடுவர்: ஜெப் குரோவ்
கள நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்பரோ மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த்
டிவி நடுவர்: மைக்கேல் கோப்
நான்காவது நடுவர்: குமார் தர்மசேனா
12.) ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் (செயிண்ட் வின்செண்ட்)
நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன்
கள நடுவர்கள்: லாங்டன் ருசேரே மற்றும் நிதின் மேனன்
டிவி நடுவர்: அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்
நான்காவது நடுவர்: அஹ்சன் ராசா.
- அபராதம் குறித்த அறிவிப்பானது 2-வது ஒருநாள் போட்டி தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன்னரே வெளியானது.
- இதனால் இன்றைய போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் ஜோசப்பின் பெயர் இடம்பெறவில்லை.
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியின் போது கள நடுவர்களிடம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் அநாகரிமாக நடந்து கொண்டதாகவும் அவர்களிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஐசிசி நடத்தை விதிகள் படி வீரர்கள் போட்டி நடுவர்களிடம் மோதல் போக்கை கொண்டிருப்பது குற்றமாகும். அதனடிப்படையில் தற்போது அல்சாரி ஜோசப்பிற்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீத கட்டணம் அபராதமாக விதிக்கப்படுகிறது என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அல்சாரி ஜோசப்பும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக அவர் மேற்கொண்டு விசாரனைக்கு உட்படுத்த தேவையில்லை என்றும் ஐசிசி கூறியுள்ளது.
அதேசமயம் அல்சாரி ஜோசப்பின் இந்த அபராதம் குறித்த அறிவிப்பானது 2-வது ஒருநாள் போட்டி தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன்னரே வெளியானது. இதனையடுத்து இன்றைய போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் அல்சாரி ஜோசப்பின் பெயரானது இடம்பெறவில்லை. மேலும் அவருக்கு பதிலாக அறிமுக வீரர் மார்க்வினோ மைண்ட்லிக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரிச்சர்ட் கெட்டில்பரோவை தெரியாத இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க முடியாது.
- டோனி ரன் அவுட் ஆகும் போது களத்தில் நின்ற ரிச்சர்ட், ஷாக் ரியாக்ஷன் கொடுத்து பிரபலமானவர்.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்டர் ஸ்டீவ் ஸ்மித். இவரது பேட்டிங் ஸ்டைலில் சற்று வித்தியாசமானதாக இருக்கும். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் நடனம் ஆடுவார் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு கால் சுழன்று கொண்டே இருக்கும்.
பந்து கீப்பரிடம் சென்ற பிறகு பேட்டை வைத்து ஸ்டைலாக போஸ் கொடுப்பார். மேலும் தடுப்பாட்டம் ஆடிய பிறகு எதிர் முனையில் இருக்கும் பேட்டரிடம் பேட்டை வைத்தே நில் என சைகை காட்டுவார். அவரது பேட்டிங் ஸ்டைலுக்கு பல ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.
இந்நிலையில் அவரது பேட்டிங் ஸ்டைலை போல இந்தியாவில் ஒரு சிறுவன் அவரை போலவே பேட்டிங் ஆடியுள்ளார். இந்த வீடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் நடுவரான ரிச்சர்ட் கெட்டில்பரோ சமூக வலைதளங்களில் பதிவிட்டு இந்தியாவின் ஸ்டீவ் ஸ்மித் என தலைப்பிட்டுள்ளார்.
ரிச்சர்ட் கெட்டில்பரோவை தெரியாத இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க முடியாது. 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் டோனி ரன் அவுட் ஆகும் போது களத்தில் நின்ற ரிச்சர்ட் ஷாக் ரியாக்ஷன் கொடுப்பார். அந்த ரன் அவுட் மூலம் மிகவும் பிரபலமானவர் இவர். இவர் களநடுவராக இருந்தால் இந்தியா தோல்வியடையும் என்ற நிலை இருந்து வந்தது. அந்த நிலையை கடந்த வருடம் ஒருநாள் உலகக் கோப்பையுடன் முடிவுக்கு வந்தது.
நியூசிலாந்து - இந்தியா மோதிய போட்டியில் மீண்டும் இவரே கள நடுவராக பணியாற்றினார். இதனால் இந்த போட்டியிலும் இந்தியா தோல்வியை தழுவும் என ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் அதை முறியடிக்கும் விதமாக இந்தியா அந்த போட்டியில் வெற்றி பெறும்.
இப்படி இந்திய ரசிகர்களால் அதிக கவனம் ஈர்த்த இவர் அடிக்கடி இந்திய கிரிக்கெட் சம்மந்தமாக பல வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்காமக கொண்டுள்ளார். அந்த வகையில் இந்த வீடியோ பதிவிட்ட நிலையில் இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- தொடர்ச்சியாக 3 ஆவது ஆண்டாக இவ்விருதை ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (61) வென்றுள்ளார்.
- முன்னதாக 2019,2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் இவ்விருதை அவர் வென்றுள்ளார்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த நடுவருக்கான விருதை இங்கிலாந்தின் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் வென்றுள்ளார்.
தொடர்ச்சியாக 3 ஆவது ஆண்டாக இவ்விருதை ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (61) வென்றுள்ளார். முன்னதாக 2019, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் இவ்விருதை அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.