search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிமாநில தொழிலாளர்"

    • மக்களுக்கு சுகாதாரம், உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடை முறை சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் குப்பை கழிவுகளால் பரவும் நோய் களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கவர்னர் மாளிகையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி பேசியதாவது:-

    புதுச்சேரி மாநிலத்தில் யானைக்கால் நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வேலைசெய்ய வரும் பணியாளர்களுக்கு கால முறையில் யானைக்கால நோய் பாதிப்பு மற்றும் தொற்று நோய் அறிகுறிகள் குறித்து பரிசோதனைகள் நடத்த எற்பாடு செய்ய வேண்டும். அவர்களுக்கு மருத்துவ அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.

    மருத்துவர்களும் வல்லுநர்களும் சுழற்சி முறையில் கிராமப்புறங்களுக்கு சென்று கிராமப்புற மக்களின் சுகாதாரமான சூழ்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் ஊழியர்க ளுக்கு சுழற்சி முறையில் பயிற்சி அளிக்க கோரிமேடு நோய் ஒழிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.

    மக்களுக்கு சுகாதாரம், உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பள்ளி-கல்லூரி மாணவர்களிடையே தூய்மை மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை எற்படுத்த வேண்டும்.

    மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உடல்பருமன், சர்க்கரை நோய் போன்ற வாழ்வியல் நோய்களைக் கட்டுப்படுத்தவும் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி விளையாட்டு மைதானங்களை மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக திறந்து விடுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டும்.

    புதுச்சேரியில் யானைக் கால் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடை முறைசாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நகரங்களை காட்டிலும், புறநகர் பகுதிகளான கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் கவனம் செலுத்தி களமிறங்கி வேலை செய்கின்றனர்.
    • பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழில்துறையினருடன் கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்தனர்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் வெற்றிக்கனியை பறிக்கும் நோக்கில் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க., வினர் பல்வேறு தேர்தல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர். நகரங்களை காட்டிலும், புறநகர் பகுதிகளான கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் கவனம் செலுத்தி களமிறங்கி வேலை செய்கின்றனர். அதன்படி தினமும் மண்டலம், சக்தி கேந்திரம், பூத் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

    தொழில் நகரமான திருப்பூரில் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட், ராஜஸ்தான் என பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு தங்கி பல்வேறு பனியன் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிமாநில தொழிலாளர்கள், தொழில் துறையினரின் ஓட்டுக்களை வளைக்கும் நோக்கில், பா.ஜ.க., பிறமொழி பிரிவினர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அவ்வகையில், சில நாட்களுக்கு முன் திருப்பூரில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழில்துறையினருடன் கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்தனர்.

    அதில், ராஜஸ்தான் மாநில எம்.பி., ராஜேந்திரகுமார் கெலாட் பங்கேற்று கலந்துரையாடினார். இரண்டாம் கட்டமாக, மற்றொரு கூட்டத்தை பா.ஜ.க.,வினர் வரும் 12-ந் தேதி திருப்பூரில் ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து பா.ஜ.க., நிர்வாகிகள் கூறியதாவது:-திருப்பூரில் வாழும் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி வருகின்றோம். இப்பணி பா.ஜ.க., பிறமொழி பிரிவினர் நடத்தி வருகின்றனர். தற்போது, இரண்டாம் கட்டமாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். திருப்பூருக்காக நீங்கள், உங்களுக்காக திருப்பூர், எங்களுடன் நீங்கள், உங்களுடன் நாங்கள் என பல தலைப்புகளில் அவர்களை சந்தித்து தேர்தல் பிரசாரத்தை துவக்கியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×