என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரியானா முன்னாள் முதல்வர்"

    • ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில் ராஜினாமா.
    • கட்டார், மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    அரியானா மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வந்தார். கட்டார் ஆட்சிக்கு ஜனநாயக ஜனதா கட்சி என்ற மாநில கட்சி ஆதரவு அளித்து வந்தது.

    இரு கட்சிகளும் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. ஜேஜேபி கட்சி தலைவரும், அரியானா மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த துஷ்யந்த் சவுதாலா டெல்லியில் ஜே.பி. நட்டா உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் பா.ஜனதா- ஜேஜேபி இடையிலான கூட்டணி முறிவடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. 

    இருந்த போதிலும் சில சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் கட்டாருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில், கட்டார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதற்கிடையே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள கட்டார், மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், அரியானாவில் கர்னூல் சட்டமன்ற எம்எல்ஏ பதவியை முன்னாள் முதல்வர் மனோகர்லால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார்.

    விரைவில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியான நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

    ×