என் மலர்
நீங்கள் தேடியது "2011 ஒருநாள் உலகக் கோப்பை தொடர்"
- 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின.
- 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின.
10-வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2011-ம் ஆண்டில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடந்தது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து 2-வது முறையாக மகுடம் சூடியது.
கவுதம் கம்பீர் (97 ரன்), கேப்டன் டோனி (91 ரன்) ஆகியோரின் அற்புதமான பேட்டிங் வெற்றிக்கு வித்திட்டது. நேற்றுடன் (ஏப்ரல் 2) இந்தியா உலகக் கோப்பையை ருசித்து 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை அந்த உலகக் கோப்பையில் ஆடிய இந்திய வீரர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் மேலும் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு நடந்தது. அது என்னவென்றால், இறுதிப்போட்டியில் இரண்டு முறை டாஸ் போடப்பட்டது. எம்.எஸ். தோனி மற்றும் குமார் சங்கக்காரா இருவரும் முதல் முயற்சியிலேயே டாஸை வென்றதாக நினைத்தனர்.
சங்கக்காராவின் அழைப்பை கேட்கவில்லை என்று நடுவர் ஜெஃப் குரோவ் கூறினார். இதனால் டாஸ் மீண்டும் போடப்பட்டது. ஐசிசி இறுதிப்போட்டியில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இந்த போட்டியில் மட்டும் தான் என்பது கூடுதல் தகவல் ஆகும்.
- இது மல்யுத்தம் அல்லது வேறு எந்த தனிப்பட்ட விளையாட்டு இல்லை.
- அந்த தொடரில் யுவராஜ் சிங் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
2011 ஒருநாள் உலகக் கோப்பையை எம்எஸ் டோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்த உலகக் கோப்பை தனி ஒருவரால் பெற்றதில்லை என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இது மல்யுத்தம் அல்லது வேறு எந்த தனிப்பட்ட விளையாட்டு இல்லை. ஒருவரால் ஒரு போட்டியை வெல்ல முடியாது. அந்த தொடரில் யுவராஜ் சிங் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் ரன்களை எடுத்தார். ஜாகீர் கான் 21 விக்கெட்டுகளை எடுத்தார். கம்பீர் 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011-ல் ரன்களை அடித்தார். டோனி 2011 இறுதிப் போட்டியில் ரன்களை அடித்தார்.
எனவே இது ஒரு அணி வெற்றியாகும். பேட்டர்களில் குறைந்தது மூன்று பேர் ஃபார்மில் இருக்க வேண்டும். குறைந்தது இரண்டு பந்து வீச்சாளர்களாவது விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கிறது. அது ஒரு டெஸ்ட், ஒருநாள் அல்லது டி20 ஆக கூட இருக்கலாம். ஒரு வீரரால் உங்கள் போட்டிகளை வெல்ல முடியாது.
இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.
இதே போல ஒருவரால் மட்டுமே வெற்றி கிடைக்காது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தவிர டோனிக்கு எதிரான பல கருத்துக்களை கம்பீர் கூறியுள்ளார்.