search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்த ஓட்டம் சீராகும்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெந்நீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • வெந்நீரைக் குடித்தால், உடலில் ரத்த ஓட்டம் சீராகும்.

    வெந்நீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சளி, இருமல் போன்ற பிரச்சனைகளும் வெந்நீரை குடிப்பதால் விலகும். இதய ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், வெந்நீரைக் குடிப்பது அதில் சாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது.

    நாம் வெந்நீரைக் குடித்தால், உடலில் ரத்த ஓட்டம் சீராகும். சரியான ரத்த ஓட்டம் காரணமாக, ரத்த அழுத்த அளவு சாதாரணமாக இருக்கும்.

    ரத்த அழுத்தத்திற்கும், இதய ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு என்பது நாம் அனைவருக்கு தெரியும். இதன் பொருள் ரத்த அழுத்தம் சீராக இருந்தால், இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயமும் குறைகிறது.

    நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரை ஒன்று அல்லது இரண்டு கப் குடிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி வெந்நீர் குடிப்பதும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

    உண்மையில், நீங்கள் சூடான தண்ணீரைக் குடிக்கும்போது, உடல் குளிர்ச்சியடையும் செயல்முறையைத் தொடங்குகிறது.

    இந்நிலையில், வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது, இது எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடல் பருமன் இதய ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    எனவே, உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். மொத்தத்தில், சூடான நீரைக் குடிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நல்ல விளைவைக் கொண்டிருக்கிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஆனால், எதையும் அதிகமாகச் செய்வது சரியல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    வெந்நீரிலும் இதே நிலைதான். வெந்நீரை அதிகமாக குடித்தால், உணவுக்குழாயில் உள்ள நல்ல திசுக்களை சேதப்படுத்தி, சுவை மொட்டுக்களை கெடுத்து, நாக்கில் பல பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே, நீங்கள் தொடர்ந்து சுடுநீரை குடிக்க விரும்பினால், அதை குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்வது நல்லது.

    • கொலஸ்ட்ராலை குறைப்பதில் மோர் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • மோர் சூட்டை தணித்து உடலை வரண்ட நிலையில் இருந்து பாதுகாக்கிறது.

    கெட்ட கொழுப்பு என்பது நமது உடலில் தேவையற்ற கொழுப்புகள் படிந்து காணப்படும் நிலை. இது தவறான உணவுப்பழக்க வழக்கத்தினால் வருவதாகும். இது ரத்த நாளங்களில் உறைவதால் ரத்த ஓட்டம் சீராக நடைபெறாமல் பல பிரச்சனைகள் வரும். இந்த கெட்ட கொலஸ்ரோலை குறைப்பதில் மோர் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் மோர் குடிப்பதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை எவ்வாறு குறைக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

    மோர் சூட்டை தணித்து உடலை வரண்ட நிலையில் இருந்து பாதுகாக்கிறது. வெண்ணெய் நீக்கப்பட்ட தயிரில் மோரை தயாரிக்கலாம்.

     மோரில் இஞ்சி, கருமிளகு, சீரகம் போன்றவற்றை சேர்க்கும் போது இது இரட்டிப்பான நன்மை தரக்கூடியது. காலையில் டீ காபி குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதை தவிர்த்து காலையில் ஒரு கிளாஸ் மோர் குடித்து வந்தால் மிகவும் நன்மை தரும்.

    மோர் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ரத்த அழுத்தத்தை குறைக்கக் கூடியது. இதனால் வயிறு சுத்தப்படுத்துவதுடன் உடலின் வளர்சிதை மாற்றம் அளவு அதிகரிக்கிறது.

    பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்டக்கூடிய வாயுப்பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது. இதில் தேவையான அளவு புரதம் இருக்கிறது. இதனால் எலும்புகள் பலமடைந்து தோல் ஆரோக்கியமாக இருக்கும். தோல் வறட்சி இல்லாமல் இருப்பதால் பளபளப்பான தோற்றத்தை கொடுக்கும்.

    மோரில் வைட்டமின் C, B நிறைந்துள்ளதால், தலைமுடிக்கும் நல்லது, சருமத்துக்கும் நல்லது. புரோபயாடிக் லாக்டிக் அமிலம் மோரில் உள்ளதால், தலைமுடிக்கும், சருமத்துக்கும் தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன.

    ×