என் மலர்
நீங்கள் தேடியது "காங்கிரஸ் கருப்பு கொடி"
- வக்பு திருத்த மசோதாவில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன.
- வழிபாடு, சொத்துக்கள், சட்டங்களில் யாரும் தலையிடக்கூடாது.
சென்னை:
பிரதமர் மோடி தமிழகம் வருகையை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், இந்தியா கூட்டணி கட்சிகள் இதில் பங்கேற்கும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்து இருந்தார்.
அதன்படி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே போலீஸ் அனுமதி அளித்து இருந்தது. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்க வந்து கொண்டு இருந்ததாகவும், வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:-
மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இஸ் லாமியர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வரு கின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக உடைத்து மாநில அந்தஸ்தை பறித்தது.
பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த முயற்சிப்பது என்று இஸ்லாமியர்களுக்கு எதிரான நட வடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.
இப்போது கொண்டு வரப்பட்டுள்ள வக்பு திருத்த மசோதாவில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. இது முற்றிலும் அரசியல் சட்டத்துக்கு எதிராக அமைந்து உள்ளது.
உதாரணமாக முன்பு மதரசாக்களுக்கு யார் வேண்டுமானாலும் நன்கொடை வழங்க முடியும். இதை சுப்ரீம் கோர்ட்டும் அங்கீகரித்தது.
ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள திருத்த சட்டம் மூலம் 5 ஆண்டுகள் இஸ்லாமிய மதத்தை பின்பற்றி வருவது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே வழங்க முடியும்.
இதே போல வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்களும் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் இந்து கோவில் அறங்காவலர்களாக இஸ்லாமியர்களை நியமிக்க முடியுமா?
ஒரு மதத்தினர் வழிபாடு, சொத்துக்கள், சட்டங்களில் யாரும் தலையிடக்கூடாது. இப்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டு வந்தது போல வருங்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் தொடங்கி விடுவார்கள்.
இந்து ராஷ்டிரம் என்ற தவறான கொள்கையை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் திணிக்க முயற்சிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் வக்பு திருத்த சட்டம் செல்லாது என்று நிச்சயம் அறிவிப்பு வரும்.
இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

ஆர்ப்பாட்டத்துக்கு முத்தழகன் முன்னிலை வகித்தார். முன்னாள் காங்கி ரஸ் தலைவர் தங்கபாலு, கருணாஸ், பொன்குமார், வன்னியதேவன், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் அசன் மவுலானா எம்.எல்.ஏ., கோபண்ணா, உ.பலராமன், ரங்கபாஷ்யம், வக்பு வாரிய உறுப்பினர் எஸ்.கே. நவாஸ், தளபதி பாஸ்கர், ஹசினா சையத், பி.வி.தமிழ்ச்செல்வன், அகரம் கோபி, மயிலை தரணி உள்பட பலர் கலந்து கெண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களுக்கு எதிராக பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
- அனுமதியும் இன்றி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தக்கலை:
பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தக்கலையில் காங்கிரசார் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
எந்த ஒரு அனுமதியும் இன்றி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் உட்பட 217 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.