search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபான கொள்கை முறைகேடு வழக்கு"

    • அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
    • இதே வழக்கில் கடந்த ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. அவரை கைது செய்தது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. கடந்த மே மாதம் 10-ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் ஜூன் 2-ம் தேதி திகார் ஜெயிலில் சரணடைந்தார்.

    இதற்கிடையே கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. அவர் சிறையில் இருந்து வெளியே வரும் நிலையில் இதே வழக்கில் கடந்த ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. அவரை கைது செய்தது.

    சி.பி.ஐ. வழக்கில் கெஜ்ரிவால் ஜாமின் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுமீது பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இந்த வழக்கில் சி.பி.ஐ.யின் கருத்துக்களை பெறாமல் உடனடியாக இடைக்கால ஜாமின் வழங்கமுடியாது என நீதிபதிகள் தெரிவித்து வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

    இந்நிலையில், கெஜ்ரிவால் ஜாமின் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி, சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் கெஜ்ரிவால் பெயர் இல்லை. அவரை கைதுசெய்ததற்கு எவ்வித ஆதாரமோ, முகாந்திரமோ இல்லை.

    கடந்த 2 ஆண்டாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் பெற்ற பிறகு சி.பி.ஐ. திட்டமிட்டு அவரை கைதுசெய்தது. கைது செய்வதற்கு முன் கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் எதுவும் அனுப்பவில்லை.

    அவர் எந்த அச்சுறுத்தலிலும் ஈடுபடமாட்டார். அவர் ஒரு அரசியலமைப்பு செயற்பாட்டாளர். எனவே கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க வேண்டும்.இந்த வழக்கில் மனீஷ் சிசோடியா, கவிதா உள்ளிட்டோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார். ஆனால், கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமின் கோரிய வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    • சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
    • டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    மேலும், டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

    இதற்கிடையே, அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும், சி.பி.ஐ. வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் உள்ளார்.

    இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் கெஜ்ரிவால் இன்று டெல்லி கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, அவரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 3-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
    • டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    மேலும், டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

    இதற்கிடையே, அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும், சி.பி.ஐ. வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் உள்ளார்.

    இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் கெஜ்ரிவால் இன்று டெல்லி கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, அவரின் நீதிமன்ற காவலை வரும் 27-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

    • கெஜ்ரிவால் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
    • வழக்கு விசாரணை வருகிற 23-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. கைது செய்ததற்கு எதிராக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அமலாக்கத் துறையால் கைது நடவடிக்கையால் ஜாமின் கிடைத்த நிலையில் திகார் சிறையில் உள்ள அவர் சி.பி.ஐ. கைதுக்கு எதிராக இந்த வழக்கை தொடுத்துள்ளார்.

    கெஜ்ரிவால் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. இந்த வழக்கு விசாரணை வருகிற 23-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    • டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதல் மந்திரி பதவியை மணீஷ் சிசோடியா இழந்தார்.
    • இந்த விவகாரத்தில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் அவரை கைதுசெய்து திகார் சிறையில் அடைத்தது.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதல் மந்திரி பதவியை மணீஷ் சிசோடியா இழந்தார். இந்த ஊழல் விவகாரத்தில் அவரை சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.

    இந்த வழக்கில் ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் சிசோடியா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கினர். அவர் வெளிநாடு செல்வதை தவிர்க்கும் நோக்கில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டனர். ஜாமின் காலத்தில் சாட்சியங்களை கலைக்கும் செயலில் சிசோடியா ஈடுபடக் கூடாது எனவும் தெரிவித்தனர்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விழாவில் டெல்லி அமைச்சர் அதிஷி கலந்துகொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், பொய்யான வழக்கில் மணீஷ் சிசோடியா அகப்பட்டு சிறை செல்ல நேர்ந்தது. தற்போது ஜாமினில் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று உண்மை வென்றது, கல்வி வென்றது, குழந்தைகள் வென்றுள்ளனர் என தெரிவித்தார்.

    மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் கிடைத்ததை கூறுகையில், அமைச்சர் அதிஷி மேடையில் தேம்பி தேம்பி அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    இந்த வழக்கில் சுமார் 17 மாதம் கழித்து சிசோடியாவுக்கு ஜாமின் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


    • சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
    • டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    மேலும், டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

    இதற்கிடையே, அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும், சி.பி.ஐ. வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் உள்ளார்.

    இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் கெஜ்ரிவால் இன்று டெல்லி கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, அவரின் நீதிமன்ற காவலை வரும் 20-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

    • டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கவிதா திகார் சிறையில் உள்ளார்.
    • முன்னாள் முதல் மந்திரி மகளான கவிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக தெலுங்கானா மாநிலத்தின் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் கவிதா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு தொடர்ந்துள்ளது. சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த இரண்டு வழக்குகளில் கடந்த மார்ச் 15-ம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் திகார் சிறையில் உள்ளார்.

    கடந்த ஏப்ரல் 11-ம் தேதி சி.பி.ஐ.யும் திகார் சிறையில் வைத்து கைது செய்தது. இவர் மீதான வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், கவிதா திகார் சிறையில் இன்று திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனே அவரை டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விசாரணையில், தீவிர காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என தெரிய வந்தது.

    • அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார்.
    • சிபிஐ தொடர்ந்த வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 25 வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேலும் இவ்வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இதில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தது.

    அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார். இதில் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி, நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் பிரிவு 19-ன் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததன் மூலம் கெஜ்ரிவாலை கைது செய்ததில் அமலாக்கத்துறை தவறு செய்ததாக கூறி இருந்தார்.

    இந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா ஆகியோரை கொண்ட அமர்வு, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிபிஐ தொடர்ந்த இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 25 வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதனால் இடைக்கால ஜாமின் கிடைத்த போதிலும், சிபிஐ கைது செய்யப்பட்ட வழக்கில் இன்னும் ஜாமின் கிடைக்காத காரணத்தினால் அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயிலில் இருந்து வெளியில் வருவதில் சிக்கல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
    • கெஜ்ரிவால் ஜாமின் மனு டெல்லி ஐகோர்ட்டில் இன்று நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன்பு விசாரணைக்கு வந்தது.

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அம்மாநில முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    பண மோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஜூன் 20-ந்தேதி அவருக்கு ஜாமின் வழங்கியது. ஆனால், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடைவிதித்தது.

    திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 26-ந்தேதி சிபிஐ-யால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தற்போது ரத்து செய்யப்பட்ட டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 12-ந்தேதி வரை விசாரணை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

    இந்நிலையில் சிபிஐ கைது செய்யப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமின் மனு டெல்லி ஐகோர்ட்டில் இன்று நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன்பு விசாரணைக்கு வந்தது.

    கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பயங்கரவாதி அல்ல என்றும், அமலாக்கத்துறையின் பணமோசடி வழக்கில் ஜாமின் பெற்ற பிறகு அவரை சிபிஐ கைது செய்ததாகவும் கூறினார்.

    சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டிபி சிங், ஜாமின் மனுவை முதலில் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் கெஜ்ரிவால் நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுகியதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

    தொடர்ந்து வாதங்களை கேட்ட நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, கெஜ்ரிவால் ஜாமின் மனு தொடர்பாக சிபிஐ பதில் அளிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்பினார். மேலும் ஜூலை 17-ந்தேதி ஜாமின் மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்தார்.

    • சிறப்பு கோர்ட்டு நீதிபதி காவேரி பவேஜா முன் காணொலி காட்சி மூலம் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார்.
    • இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளும் கெஜ்ரிவாலை கைது செய்திருந்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்தது.

    எனவே சிறப்பு கோர்ட்டு நீதிபதி காவேரி பவேஜா முன் காணொலி காட்சி மூலம் நேற்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை 12-ம்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். முன்னதாக இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளும் கெஜ்ரிவாலை கைது செய்திருந்தனர். சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வருகிற 12-ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சிபிஐ 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில், 3 நாட்கள் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • சிபிஐ அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக கெஜ்ரிவால் தரப்பு தெரிவித்துள்ளது.

    டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமின் பெற்று வெளியில் வந்த கெஜ்ரிவால் 21 நாட்கள் கழித்து இம்மாத தொடக்கத்தில் மீண்டும் திகார் சிறைக்கு திரும்பினார்.

    கெஜ்ரிவால் மீது சுமத்தப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டான கலால் கொள்கை முறைகேடு வழக்கு சம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    இதற்கிடையில் கீழமை நீதிமன்றதில் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் அது அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் அளித்த மனுவால் நிறுத்திவைக்கப்பட்டது.

    தனக்கு வழங்கப்பட்ட ஜாமின் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் கெஜ்ரிவால். கெஜ்ரிவாலின் இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில், நீதிமன்றத்தில் வைத்தே கலால் கொள்கை வழக்கில் சிபிஐ கெஜ்ரிவாலை கைது செய்தது.

    இந்த நிலையில், கலால் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்க 5 நாள் காவல் வழங்க வேண்டும் என சி.பி.ஐ. சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அம்மனுவில், இந்த வழக்கில் உள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வர அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்க வேண்டும் என்பதால் அவரை காவலில் வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    சிபிஐ வாதங்களை கேட்ட நீதிமன்றம் உத்தரவை ஒத்திவைத்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை தற்போது நடைபெற்ற நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சிபிஐ காவல் விடுத்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சிபிஐ 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில், 3 நாட்கள் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    அப்போது, சிபிஐ அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக கெஜ்ரிவால் தரப்பு தெரிவித்துள்ளது.

    • வீடியோவில் கெஜ்ரிவால் கோர்ட்டில் உரையாடியது இடம்பெற்றுள்ளது.
    • வழக்கு விசாரணையை ஜூலை 9-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி உள்ளனர்.

    இந்த நிலையில் கெஜ்ரிவால் வழக்கு விசாரணையின் வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதாக வக்கீல் வைபவ் என்பவர் குற்றம்சாட்டி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல செய்துள்ளார். அந்த வீடியோவில் கெஜ்ரிவால் கோர்ட்டில் உரையாடியது இடம்பெற்றுள்ளது என்றும், இது கோர்ட்டு நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

    9 முதல் 9.30 நிமிடங்கள் வரை அந்த வீடியோ இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் நினா பன்சால், அமித் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை இன்று விசாரித்தது. இது தொடர்பாக கெஜ்ரிவால் மனைவி சுனிதா உள்பட 6 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். கலால் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கையின் வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்குமாறு சுனிதாவுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    வழக்கு விசாரணையை ஜூலை 9-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ×