search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூசுப் பதான்"

    • யூசுப் பதான் 5 லட்சத்து 22 ஆயிரத்து 564 வாக்குகள் பெற்றுள்ளார்.
    • ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 4 லட்சத்து 36 ஆயிரத்து 798 வாக்குகள் பெற்றுள்ளார்.

    மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிட்டன.

    பஹரம்புர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிறுத்தப்பட்டார். இவர் பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராகவும், மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகவும் உள்ளார். இவரை எதிர்த்து மம்தா பானர்ஜி முன்னாள் கிரிக்கெட் வீரரான யூசுப் பதானை நிறுத்தினார்.

    இதில் யூசுப் பதான் வெற்றிபெறும் நிலையில் உள்ளார். யூசுப் பதான் 5 லட்சத்து 22 ஆயிரத்து 564 வாக்குகள் பெற்றுள்ளார். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 4 லட்சத்து 36 ஆயிரத்து 798 வாக்குகள் பெற்றுள்ளார். யூசுப் பதான் 85 ஆயிரத்து 766 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் வெற்றி அருகில் உள்ளார்.

    மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக மம்தாவுக்கும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும் இடையில் வார்த்தை போர் நடைபெற்றது. மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார்.

    தன்னை கடுமையாக விமர்சித்த மூத்த அரசியல்வாதியை ஒரு கிரிக்கெட் வீரரை நிறுத்தி மம்தா பானர்ஜி தோற்கடித்துள்ளார் என கூறப்படுகிறது.

    • பெர்ஹாம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் யூசுப் பதான் வேட்பாளராக களமிறங்குகிறார்.
    • எனது கட்சி செய்த பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தின் பெர்ஹாம்பூர் பாராளுமன்ற தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் வேட்பாளராக களமிறங்குகிறார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

    தேர்தல் களம் மிகவும் வித்தியாசமானது. ஆனால் மக்களின் எதிர்பார்ப்புகள் அப்படியே இருக்கின்றன. அவர்களுக்காக நான் பணியாற்றுகிறேன். எனது கட்சி செய்த பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

    2007-ம் ஆண்டு உலக கோப்பைக்கு உற்சாகமாக இருந்ததைப் போல தற்போதும் உற்சாகமாக இருக்கிறேன்.

    குஜராத் எனது ஜென்ம பூமி மற்றும் மேற்கு வங்காளம் எனது கர்ம பூமி.

    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். ஆனால் காலம் மாறுகிறது, மாற்றம் நல்லதுக்காகவே நடக்கும் என தெரிவித்தார்.

    ×