search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாம் தமிழகர் கட்சி"

    • நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

    தமிழகத்தில் நிலவி வரும் படுகொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கண்டித்தும், மின் கட்டண உயர்வைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தால், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

    இந்நிலையில், சீமானின் பேச்சுக்கு, திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் பொதுக்கூட்டம் ஒன்றில் சீமான், காவல்துறை பொறுப்பு வகிக்கும் பதவிகளை இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில், இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட எஸ்.பி., தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் மூலமாக சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். சீமானின் பொய்யான அபிப்பிராயங்களுக்கு நீதிமன்றங்கள் மூலம் வழக்கு தொடர்வேன்.

    பொது மேடையில் பேசினாலும், கொச்சையான பொய்களை தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாம்தமிழர் கட்சியின் தென்சென்னை மாவட்ட வேட்பாளராக தமிழ்ச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வி பற்றி விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

    பாராளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

    நாம்தமிழர் கட்சியின் தென்சென்னை மாவட்ட வேட்பாளராக தமிழ்ச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தமிழ்ச்செல்வி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது அவர் தனது Audi A4 சொகுசு காரில் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் அந்த Audi A4 சொகுசு காருக்கு தமிழ்ச்செல்வி இன்சூரன்ஸ் கட்டவில்லை என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இன்சூரன்ஸ் இல்லாத Audi A4 சொகுசு காரில் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்த தென் சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வி பற்றி விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

    ×