search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நயன் தாரா"

    • இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • நடிகை நயன்தாரா இவ்விழாவில் கலந்துக் கொண்டார்.

    2003-ம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான 'குறும்பு' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார் விஷ்ணுவர்தன். அதைத் தொடர்ந்து தமிழில் அறிந்து அறியாமலும், பட்டியல் போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.

    அஜித் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான 'பில்லா' திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

    இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது. 2021-ம் ஆண்டு ஷெர்ஷா எனும் இந்தி திரைப்படத்தை கரன் ஜோஹர் தயாரிப்பில் இயக்கினார்.

    அதனை தொடர்ந்து நீண்ட இடைவேளிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு நேசிப்பாயா என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் இன்று சென்னையில் நடந்தது.

    படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர். நடிகை நயன்தாரா இவ்விழாவில் கலந்துக் கொண்டார். நயன் தாரா படத்தின் நாயகனான ஆகாஷ் முரளியை அறிமுகம் செய்தார். விழாவில் பேசிய நயன் தாரா " நான் எந்த விழாவிலும் கலந்துக் கொள்ள விருப்பப்படுவதில்லை, ஆனால் இந்த விழாவிற்கு கலந்துக் கொள்ள காரணம் உண்டு. இந்த விழா எனக்கு ஒரு குடும்ப விழா போன்றது. அதற்கு காரணம் என்னுடைய இயக்குனர் விஷ்ணுவர்தன் தான். அவரை எனக்கு 15 வருடங்களாக தெரியும் , ஒரு சிறந்த மனிதன்" என கூறினார்.

    இப்படத்தை மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை நயன்தாரா தம்பதியினர் கோவிலில் சென்று தரிசனம் செய்தனர்.
    • சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த நயன்தாராவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.

    நடிகை நயன்தாரா-விக்னேஷ்சிவன் தம்பதியினர் திருமணத்திற்கு பிறகு குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. இதன் பிறகு குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகை நயன்தாரா-விக்னேஷ்சிவன் தம்பதியினர் நேற்று குமரி மாவட்டம் வந்தனர்.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த நயன்தாரா தம்பதியினரை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் வரவேற்றார். இதைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா தம்பதியினர் கோவிலில் சென்று தரிசனம் செய்தனர். அங்குள்ள ஆஞ்ச நேயரையும் வழிபட்டனர்.

    பின்னர் நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு வந்தனர். நாகராஜா கோவிலில் பயபக்தியுடன் நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிக்கு சென்ற நடிகை நயன்தாரா நெற்றியில் திருநாமம் இட்டு அய்யா வைகுண்டரை வழிபட்டார். விக்னேஷ்சிவன் தலையில் தலைப்பாகையுடன் சாமி தரிசனம் செய்தார்.


    தொடர்ந்து இருவரும் பதியில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தனர். நயன்தாராவுடன் அங்கிருந்த குழந்தைகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் நயன்தாராவை காண பதியின் வெளியே ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். அவர்களை பார்த்து நயன்தாரா கையசைத்தவாறு சென்றார்.

    பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் உள்ள ஸ்ரீ காலபைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, பாலசவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீநாகராஜா, சூரிய பகவான் சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் நயன்தாரா தனது குழந்தைகள் பேரில் அர்ச்சனை செய்தார். சாமி தரிசனத்திற்கு வந்த நயன்தாராவிற்கு அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் வரவேற்பு அளித்தார். பின்னர் கோவில் அலுவலகத்தில் நயன்தாரா பேசிக்கொண்டிருந்தார். பகவதி அம்மன் கோவில் ராஜகோபுரத்திற்கு நன்கொடை வழங்க வேண்டும் என்று அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த நயன்தாராவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது அவர்கள் முண்டியடித்து கொண்டு நயன்தாராவுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அதன் பிறகு கோவிலுக்கு வெளியே உள்ள கடைகளுக்கு சென்று பேன்சி பொருட்களை நயன்தாரா வாங்கி சென்றார்.



    • அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
    • இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இவர் தமிழ் இயக்குனரான விக்னேஷ் சிவனை ஜூன் 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அழகான இரு ஆண் குழந்தைகள் அக்டோபர் 2022 ஆம் ஆண்டு பிறந்தன. அவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என பெயரிட்டனர். அவ்வப்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளங்களில் அவர்களின் திரை துறை வாழ்க்கையை பற்றியும் தனிப்பட்ட வாழ்க்கையில் நடைப்பெறும் நிகழ்வை பற்றியும் புகைப்படங்களை பகிர்ந்து வருவர்.

    அதுப்போல் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் நயன்தாரா அவரது மகன்களான உயிர் மற்றும் உலகுடன் குழந்தையோடு குழந்தையாய் விளையாடிக்கொண்டு இருக்கிறார். குழந்தையை தோள் மேல் தூக்கி வைத்து விளையாடுவது, மகனை முத்தமிடுவது, கொஞ்சுவது, சிரிப்பது, கைப் பிடித்து நடப்பது என அந்த வீடியோவில் காட்சிகள் அமைந்துள்ளன.

    இந்த வீடியோவை   பார்க்கவே மிகவும் கியூட்டாக உள்ளது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீதான் என்னுடைய உயிர் மற்றும் உலகம் என அந்த வீடியோவில் நயன்தாராவை குறித்து பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2023 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்
    • தியான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த படம் ’லவ் ஆக்‌ஷன் டிராமா’.

    2023 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார் நயன்தாரா. அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

    2019 ஆம் ஆண்டு தியான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த படம் 'லவ் ஆக்ஷன் டிராமா'. ஷான் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    தற்பொழுது நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' நடிக்கவிருக்கிறார். அறிமுக இயக்குனரான சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் இயக்குகிறார்கள்.

     

    பாலி ஜூனியர் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளது. நயன்தாரா இப்படத்தில் நடிக்க போகிறார் என்பதை படக்குழுவினர் ஒரு வீடியோவின் மூலம் தெரிவித்திருக்கின்றனர். அதில் பேப்பரில் இங்க் ஊற்றி நயந்தாராவின் புகைப்படம் தெரிகிறது. இந்த வீடியோவை நிவின் பாலி அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு இயக்கத்தை கையில் எடுத்துள்ளார் சசிகுமார்.
    • அடுத்ததாக அவரின் கணவரான விக்னேஷ் சிவன் இயக்கி கொண்டிருக்கும் எல்.ஐ.சி படத்திலும், தனி ஒருவன் 2, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 போன்ற படத்திலும் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் போன்ற நட்சத்திர பிரபலங்கள் நடித்து வெளிவந்த ஜவான் படத்தில் கதாநாயகியாக நயந்தாரா நடித்தார். இந்தி சினிமாவில் நயந்தாராவிர்கு கதாநாயகியாக முதல் படம் இதுவே. இப்படம் உலகளவில் 1000 கோடி ரூபாயை வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜவான் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இறைவன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின் அவரின் 75 ஆவது படமான அன்னபூரணி படத்தில் நடித்தார்.

    நயன்தாரா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என மொழி வேறுபாடின்றி பல முக்கியமான நட்சத்திர பிரபலங்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சித்தார்த் மற்றும் மாதவன் நடித்திருக்கும் டெஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.

    அடுத்ததாக அவரின் கணவரான விக்னேஷ் சிவன் இயக்கி கொண்டிருக்கும் எல்.ஐ.சி படத்திலும், தனி ஒருவன் 2, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 போன்ற படத்திலும் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் சசிகுமார் இயக்கும் அடுத்த படத்தில் முன்னணி கதாப்பாத்திரமாக நயன் தாரா நடிக்கவுள்ளார். இப்படமானது பெண்களை மையமான கதைக்களம் ஆகும். இப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

    சசிகுமார் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர். அவர் இயக்கும் படங்கள் எல்லாம் ஒரு வித சமூக கிளர்ச்சியை உண்டாக்கும். சுப்பிரமணியபுரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளராக அறிமுகமாகினார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அயோத்தி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. . நடிகர் சூரி, உன்னி முகுந்தன் மற்றும் சசிக்குமார் இணைந்து கருடன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தககது.

    மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு இயக்கத்தை கையில் எடுத்துள்ளார் சசிகுமார். இதனால் ரசிகர்கள் அனைவரும் மிக உற்சாகத்துடன் இருக்கின்றனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×