என் மலர்
நீங்கள் தேடியது "வீணா விஜயன்"
- குற்றம் உறுதியானால் 6 மாதம் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.
- பதவி விலகக் கோரி பா.ஜ.க. போராட்டங்களை நடத்தும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநில முதல்-மந்திரி பினராய் விஜயனின் மகள் வீணா. இவர் எக்சா லஜிக் சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் ஐ.டி. நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனம் சார்பில் கொச்சின் மினரல் ரூட்டில் லிமிடெட் என்ற தனியார் சுரங்க நிறுவனத்தில் வீணா லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தன.
மார்க்கெட்டிங் ஆலோசனை மற்றும் மென்பொருள் சேவைகளை வழங்குவதற்காக தான் எக்சாலஜிக் மற்றும் அதன் துணை நிறுவனமான எம்பவர் இந்தியா பணம் பெற்றதாக வீணா தரப்பில் கூறப்பட்டது.
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில் புகார் குறித்து விசாரணை நடத்தி வந்த தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் வீணா விஜயன் உள்பட 27 பேர் மீது லஞ்ச குற்றம் சாட்டி அவர்கள் மீது கொச்சி பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்தது.
கோர்ட்டு இந்த புகாரை ஏற்றுக் கொண்ட பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பவார்கள்.
160 பக்க குற்றப்பத்திரிகையில் வீணா மற்றும் அவரது நிறுவனம் மீது நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 447-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இல்லாத செலவு களை அதிகப்படுத்தி போலி பில்களை உருவாக்குவதன் மூலம் மோசடி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது
இந்த பிரிவின் கீழ் குற்றம் உறுதியானால் 6 மாதம் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் தற்போது இந்த புகார் சம்பவம் கேரளாவில் மீண்டும் பரபரப்பை எட்டி உள்ளது.
மகள் மீது லஞ்சக் குற்றம் சாட்டப்பட்டு இருப்பதால் முதல்-மந்திரி பதவியில் இருந்து பினராய் விஜயன் விலக வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.
கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் எம்.பி. கூறுகையில், முதல்-மந்திரியோ அவரது மகளோ ஆதாரங்களை தவிர்க்க முடியாது. பணம் வாங்கியவர்கள் இறுதியில் விளைவுகளை சந்திப்பார்கள். இது 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க கூடிய குற்றமாகும்.
இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வழி தேடுவதற்காக டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசி உள்ளனர். இந்த விஷயத்தில் பினராய் விஜயன், முதல்-மந்திரி பதவியில் இருந்து உடனே விலக வேண்டும் என்றார்.
மதுரை மாநாட்டிலேயே கட்சி இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும். சி.பி.எம். கட்சி கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதை விடுத்து பினராய் விஜயனை காப்பாற்றினால், அது சி.பி.எம்.மின் வீழ்ச்சியின் தொடக்கத்தை குறிக்கும் என்றார்.
கேரள சட்டமன்ற எதிர் கட்சி தலைவரும் காங்கிரஸ் தலைவர்களின் ஒருவருமான சதீசன் கூறுகையில், இது மிகவும் தீவிரமான விஷயம். குற்றப்பத்திரிகையில் எந்த சேவைகளையும் வழங்காமல் வீணா பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பினராய் விஜயனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.
பா.ஜ.க. மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறும் போது, பெரிய அளவிலான ஊழல் நடந்துள்ளது. இதில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே பினராய் விஜயன் பதவி விலக வேண்டும். அவர் பதவி விலகக் கோரி பா.ஜ.க. போராட்டங்களை நடத்தும் என்றார்.
- தனியார் நிறுவனம் 1.75 கோடி ரூபாயை வீணா விஜயன் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக வழங்கியதாக குற்றச்சாட்டு.
- வீணா விஜயன் நிறுவனம் தனியார் நிறுவனத்திற்கும் எந்த சேவையும் வழங்காத நிலையில் இந்த பணம் பரிமாற்றம்.
கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பினராயி விஜயன் முதல் மந்திரியாக இருந்து வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக எதிர்க்கும் மாநில அரசாக இருந்து வருகிறது.
இந்த நிலையில்தான் பினராயி விஜய் மகளாக வீணா விஜய் மீது அமலாக்கத்துறை பணமோசடி புகாரில் வழக்குப்பதிவு செய்துள்ளது. விரைவில் சம்மன் அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பினராயி விஜயன் மகள் வீணா விஜயன் ஐ.டி. நிறுவனம் நடத்தி வருகிறார். வீணா விஜயனும், அவரது ஐ.டி. நிறுவனமும் தனியார் மினரல் நிறுவனத்திற்கும் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் எம்.பி. கோவிந்தன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எம்.பி. கோவிந்தன் கூறியதாவது:-
நாட்டின் முக்கியமான அமைப்புகளில் ஒன்று அமலாக்கத்துறை. இது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்த வழக்கை உரிய முறையில் எதிர்கொள்வோம். நீங்கள் அரசியலில் யாரையும் குறி வைக்கலாம். ஆனால் யார் குறி வைக்கிறது என்பதுதான் கேள்வி. அமலாக்கத்துறை பா.ஜனதாவுக்கு தினசரி கூலி போன்றதாகிவிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் தொண்டர்களும் இதுபோன்ற தந்திரங்கள் மற்றும் வழக்குகளுக்கு சரண் அடைபவர்கள் அல்ல.
இவ்வாறு கோவிந்தன் தெரிவித்துள்ளார்.
கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட் என்ற நிறுவனம் வீணாவின் Exalogic Solutions நிறுவனத்திற்கு முறைகேடாக 1.72 கோடி ரூபாய் பணம் செலுத்தியுள்ளது. ஆனால் ஐ.டி. நிறுவனமான Exalogic Solutions அந்த தனியார் நிறுவனத்திற்கு ஒரு சேவையும் செய்யவில்லை.
எஸ்.எஃப்.ஐ.ஓ. (Serious Fraud Investigation Office) வழக்கு விசாரணையை தொடங்கியதற்கு எதிராக வீணா விஜயன் நிறுவனம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது.
எஸ்.எஃப்.ஐ.ஓ. வழக்குப்பதிவு செய்ததை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.