என் மலர்
நீங்கள் தேடியது "எரிசாராயம் பறிமுதல்"
- 215 கேன்களில் 7525 லிட்டர் எரிசாராயம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
- எரிசாராயத்தை கடத்தி வந்த 2 பேரை கைது செய்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்திலிருந்து ஓசூர் வழியாக சென்ற லாரியை சோதனை செய்தபோது அதில் தர்பூசணி பழங்களுக்கு நடுவே எரிசாராயம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. 215 கேன்களில் 7525 லிட்டர் எரிசாராயம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
தர்பூசணி பழங்களுக்கு இடையே எரிசாராயம் மறைத்து வைக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
எரிசாராயத்தை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மர்ம நபர்கள் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- எரிசாராயத்தை மினி லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார்.
ஓசூர்:
கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகம் மற்றும் ஆந்திரா, கேரளாவிற்கு அடிக்கடி மதுபான வகைகள், எரிசாரயம், குட்கா பொருட்கள் சாதாரண ஆட்கள் என்ற போர்வையில் கார், இருசக்கர வாகனங்களில் மர்ம நபர்கள் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து கோவை மண்டல மது விலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் தலைமையில் ஏட்டு மதிவாணன், அமலாக்க பிரிவு போலீசார் நேற்று ஓசூர்-சேலம் பை பாஸ் சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 215 கேன்களில், 7,525 லிட்டர் எரிசாரியம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனை கர்நாடக மாநிலம் உப்பள்ளியில் இருந்து பெங்களூர்-ஓசூர் வழியாக கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து எரிசாராயத்தை மினி லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த சயாத் மற்றும் பாபுராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் அங்கிருந்த சுமார் 3 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- மதுபானங்கள் தயாரிப்பதற்காக வைத்திருந்த மூலப்பொருட்களையும் கைப்பற்றிய போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.
சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அமைந்துள்ளது குமரப்ப குடிப்பட்டி கிராமம். அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய இங்கு தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் போலி மதுபான ஆலை இயங்குவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட மதுவிலக்கு பிரிவு கூடுதல் துணை சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமையிலான போலீசார் அந்த வனப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு மதுபான ஆலை செயல்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மதுபானம் தயாரித்து, பாட்டில்களை அடைத்து விற்பனைக்கு கொண்டு சென்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த சுமார் 3 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் மதுபானங்கள் தயாரிப்பதற்காக வைத்திருந்த மூலப்பொருட்களையும் கைப்பற்றிய போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இதுதொடர்பாக போலியான மதுபான ஆலை நடத்தி வந்த சிங்கம்புணரியை சேர்ந்த ராமசாமி மனைவி மங்களம் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.