search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிந்தனை திறன்"

    • புத்தகங்களைப் போன்ற சிறந்த வழிகாட்டி எதுவும் இல்லை.
    • சிறந்த வாசிப்பாளனால் மட்டுமே சிறந்த எழுத்தாளானாக முடியும்.

    குழந்தைப் பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி விட்டாலே போதும் அவர்கள் வளர வளர படிக்கும் ஆர்வம் தானாகவே வரும்.

    புத்தகங்களை படிக்கும் குழந்தைகள் இயல்பாகவே அறிவுத் திறனையும், கற்பனை ஆற்றலையும், நினைவாற்றலையும் பெற்று விடுகின்றனர். இத்தகைய ஆற்றலால் பள்ளிப் பாடங்கள் படித்தல் கூட எளிதாக வசப்பட்டு விடுகிறது.

    படிக்கும் போதே மகிழ்ச்சியைத் தருவது புத்தகங்கள் என்பது மறுக்க இயலாத உண்மை. புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் அதில் வரும் பாத்திரங்களை மனதில் காட்சிப் படுத்தும் போதே கற்பனைத் திறன் விரிவடைகிறது.

    மனம் சோர்ந்திருக்கும் போது ஊக்கத்தை தருவதும் புத்தகங்கள் தான். அறம் சார்ந்த சிந்தனைகளையும் சமூகம் சார்ந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முயல்வதும் புத்தகங்கள் தான்.

    ஒரு குழந்தையை நேர்மையான வழியில் நடக்க வைப்பதற்கும், சிறந்த சமூக செயற்பாட்டாளானாக அவனை உருவாக்குவதிலும் புத்தகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

    புத்தகங்களைப் போன்ற சிறந்த வழிகாட்டி எதுவும் இல்லை. நல்ல நண்பனாக நம்முடன் பயணிப்பவை புத்தகங்கள். நம் சிந்தனையைத் துாண்டவும், சிந்தனையை புதுப்பிக்கவும் உதவுவது புத்தகங்கள்.

    நம் மனதை உழுது, அதில் நல்ல பண்புகளை விதைப்பது புத்தகங்கள். சிறந்த வாசிப்பாளனால் மட்டுமே சிறந்த எழுத்தாளானாக முடியும்.

    எனவே பெற்றோர்கள் புத்தகங்களை வாசிக்கும் குழந்தைகளை சின்ன சின்ன பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்.

    படித்த புத்தகத்தில் உள்ள செய்திகள் பற்றி கலந்துரையாடுங்கள். குழந்தைகளின் பிறந்த நாளில் புத்தகங்களை பரிசளியுங்கள். கதைகளை படிக்கும் குழந்தைகளை பின்னர் அந்த கதையை கூறச் செய்யலாம்.

    கதை சொல்லிகளாக இருந்த பாட்டிகள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை குழந்தைகளைக் கொண்டு நிரப்புங்கள். பின்னாளில் அவர்களை சிறந்த கதை சொல்லிகளாக உருவாக்கும் நல் வாய்ப்பை புத்தகங்கள் வழங்குகின்றன.

    முதலில் பெற்றோர் முன்னுதாரணமாக இருந்து புத்தகங்களை வாசிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் அப்பழக்கம் இயல்பாக மாறிவிடும்.

    தேடலை உருவாக்கி அவர்களின் சிந்தனைகளைத் துாண்டிவிடும். புத்தகங்களைப் படிக்கும் போது அவை நம்மை அந்த காலத்திற்கே கடத்திச் செல்லும். இயற்கை காட்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். வரலாற்றுக் காலத்தின் சுவடுகளில் அவர்களை பதிய விடும்.

    • அதிகாலையில் எழும்போது தெளிவான மன நிலை நிலவும்.
    • இரவில் ஆழ்ந்து தூங்கினால் மூளை நன்கு ஓய்வெடுக்கும்.

    இது தேர்வு நேரமாக இருப்பதால் மாணவர்கள் பலரும் தூங்குவதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் கண் விழித்து படிப்பார்கள். ஒரு சில மணி நேரம் மட்டுமே தூங்கிவிட்டு நள்ளிரவில் எழுந்து படிப்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் நள்ளிரவை தாண்டியும் படித்துவிட்டு சிறிது நேர தூக்கத்திற்கு பிறகு அதிகாலையில் எழுந்து மீண்டும் படிப்பை தொடர்வார்கள். அதிகாலையில் படிப்பது நல்லதா? நள்ளிரவை கடந்தும் படிப்பது சிறந்ததா? என்ற கேள்வி பலருக்குள் எழுவதுண்டு. எந்த நேரத்தில் படிப்பது சிறப்பானது என்பதை பார்ப்போம்.

    * இரவில் ஆழ்ந்து தூங்கினால் மூளை நன்கு ஓய்வெடுக்கும். அதிகாலையில் எழும்போது தெளிவான மன நிலை நிலவும். அந்த சமயத்தில் சிக்கலான கருத்துக்கள் மீது கவனம் செலுத்துவது எளிதான தீர்வை தரும். அதனால்தான் அதிகாலையில் படிக்குமாறு அறிவுறுத்துகிறார்கள். மேலும் தெளிவான மன நிலையுடன் அன்றைய நாளை தொடங்குவது நேர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும்.

    * வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் குறுக்கீடுகள் இல்லாத சூழலை அதிகாலை உருவாக்கிக்கொடுக்கும். செல்போனை தொடாமல் அந்த அமைதியான காலத்தில் எந்தவொரு இடையூறும் இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்த முடியும்.

    * மாலை நேர சூரிய ஒளியின் மறைவும், மறுநாள் காலையில் சூரிய கதிர்களின் உதயமும் தூக்க-விழிப்பு சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவும். சூரியன் இல்லாத இரவு பொழுதில் நன்றாக தூங்கி ஓய்வெடுத்துவிட்டு அதிகாலையில் எழுவது உற்சாகமாக வைத்திருக்க உதவும். அத்துடன் காலையில் படிப்பது மனநிலையை மேம்படுத்தும். அதிகாலை பொழுதில் இயற்கை ஒளியை நுகர்வது உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்வளிக்கும்.

     * அதிகாலையில் படிப்பதன் மூலம் மாலை வேளையில் மற்ற செயல்பாடுகளுக்கு நேரம் ஒதுக்கலாம். மனதை ரிலாக்ஸாக வைக்கும் பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். அதன் பிறகு படிப்பை தொடர்வது எளிதாக மனதில் பதிவதற்கு வழிவகுக்கும். இரவு 10 மணிக்குள் படித்து முடித்துவிட்டு தூங்குவதும், அதிகாலையில் எழுந்து மீண்டும் படிப்பை தொடர்வதும் சிறந்த பலனை கொடுக்கும்.

    * அதிகாலையில் சத்தமில்லாத சூழலில் படிப்பில் கவனம் செலுத்துவது சிலருக்கு கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இரவு நேர அமைதி சிறந்ததாக இருக்கும். இரவு பொழுதில் படிப்பது ஆழ்ந்த கவனத்தை பாடம் மீது பதிய வைக்கும். அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கு ஏற்ற அமைதியான சூழலை வழங்கும்.

    * சிலருக்கு இரவு நேரத்தில்தான் சிந்தனை திறன் மேலோங்கும். மனம் தெளிவாக இருக்கும். சவாலான பிரச்சினைகளை சமாளிப்பதற்கு மூளைக்கு வேலை கொடுப்பார்கள். புதுமையான சிந்தனை உதிப்பதற்கும், சிக்கல்களை தீர்க்கும் திறனை மேம்படுத்துவதற்கும் இரவு பொழுதை பயன்படுத்திக்கொள்வார்கள். அந்த சமயத்தில் படிப்பதும் சிறந்த தேர்வாக அமையும்.

     * இரவு நேரத்தில் கண் விழித்து படிப்பது பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும். குறிப்பாக தூங்கும் நேரம் குறைவதால் காலையில் சோர்வுக்கு வழிவகுத்துவிடும். மனதில் தகவல்களை தக்கவைத்துக்கொள்ளும் திறனையும் பலவீனப்படுத்திவிடும். அதனால் அறிவாற்றல் செயல்பாடுக்கும், போதுமான தூக்கத்திற்கும் முன்னுரிமை அளிப்பது அவசியம். இரவு பொழுதில் கண் விழித்து படிப்பதை விட அதிகாலையில் படிப்பதே சிறந்தது.

    ×