search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுநீர் தொற்று"

    • ஆண்களை விட பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.
    • புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும்.

    சிறுநீர் கழிப்பதில் கட்டுப்பாடின்மை அல்லது அடக்க முடியாத நிலைமையை சிறுநீர் கசிவு என்று அழைக்கிறோம். இது ஆண்களை விட பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது. இது பொதுவாக நான்கு வகைப்படும்.

    அழுத்த கசிவு:

    உடல் ரீதியான செயல்பாட்டால் ஏற்படுவது. உதாரணமாக இருமல், தும்மல், அதிக எடை தூக்குதல், உடல் பருமன், மலச்சிக்கல் போன்ற காரணிகள் சிறுநீர்பையில் அழுத்தத்தை உண்டாக்கி சிறுநீர்கசிவை ஏற்படுத்துகிறது.

    அவசர சிறுநீர் கசிவு:

    சர்க்கரை நோய், வயது முதிர்வு அல்லது நரம்பியல் பிரச்சனை (அல்சைமர்ஸ், பார்கின்சன், மல்டிபிள் ஸ்கிளராஸிஸ் நோய்கள்), பக்கவாதம் பாதிப்பு, சிறுநீர்பாதை தொற்று உள்ளவர்களுக்கு ஏற்படும்.

    நிரம்பி வழியும் சிறுநீர் கசிவு:

    இதில் சிறுநீர் கழித்த பிறகும் சிறுநீரை முக்கி வெளியேற்ற வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இது பெரும்பாலும் சர்க்கரை நோய் அல்லது புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும்.

    கலப்பு நீர்க்கசிவு:

    இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுநீர் கசிவு வகைகளின் அறிகுறிகள் இருக்கிறது.

    சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீர் கசிவு ஏற்பட முக்கிய காரணம்:

    1) நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதால் அது சிறுநீர் பாதை தொற்றுக்கு வழி வகுத்து சிறுநீர் கசிவை ஏற்படுத்துகிறது

    2) உடல் பருமன் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீர்ப்பையில் ஏற்படும் அழுத்தம்

    3) சிறுநீர்ப்பையை கட்டுப்படுத்தும் நரம்புகளின் பாதிப்பு

    4) ஒரு சிலருக்கு கூடுதலாக உள்ள நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவு (டையூரிடிக்ஸ், கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ், மன அழுத்தத்திற்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகள்)

    சிறுநீர் கசிவை கட்டுப்படுத்தும் வழிகள்:

    * ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

    * புகை, மதுப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.

    * காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    * இடுப்புக்குழி தசைகளும், சிறுநீர்ப்பை தசைகளும் துவண்டு விடாமல் இருக்க கீகல் பயிற்சி என்னும் அடி வயிற்று தசையை இழுக்கும் உடற்பயிற்சியை தினமும் செய்ய வேண்டும்.

    * உடல் எடையை குறைக்க வேண்டும்.

    * சிறுநீர்ப்பை தசையை தளர்த்தும் மருந்துகள் (மைராபெக்ரான்), ஆண்டிகோலினர்ஜிக்ஸ் (டோல்டரோடைன், டாரிபெனாசின், சோலிபெனாசின்) போன்ற மருந்துகளை மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொண்டால், * சிறுநீர் கசிவு பிரச்சனையை எளிதில் கட்டுப்படுத்தலாம்.

    எக்காரணம் கொண்டும் மருத்துவர் அனுமதியின்றி இம்மருந்துகளை உபயோகிக்க கூடாது.

    • UTI என்பது பிறப்புறுப்பில் ஏற்படும் ஒரு தொற்று ஆகும்.
    • அறிகுறிகளை புறக்கணிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

    சிறுநீர் உங்கள் ஆரோக்கியம் தொடர்பான பல ரகசியங்களை வெளிப்படுத்தும். வயிற்றில் அல்லது உடலில் பல பிரச்னைகள் இருக்கும்போது சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும்.

    ஆனால் சில நேரங்களில் தனிப்பட்ட சுகாதாரத்தை சரியாக கவனிக்காததால், பலர், குறிப்பாக பெண்கள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும். பல நேரங்களில், தனிப்பட்ட சுகாதாரத்தை கவனித்த பிறகும், UTI வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது.

    UTI என்பது பிறப்புறுப்பில் ஏற்படும் ஒரு தொற்று ஆகும். இதன் காரணமாக உங்களுக்கு சிறுநீர் கழித்தல் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். இது சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், வயிறு மற்றும் சிறுநீரகங்களுக்கும் பரவுகிறது.

    சிறுநீர் தொற்றுக்கான அறிகுறிகள்

    சிறுநீர் தொற்று ஏற்பட்டால், சில பொதுவான அறிகுறிகளைக் காணலாம். இது உங்களுக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும் போது பிறப்புறுப்பில் எரிச்சல் அல்லது வலி ஏற்பட்டால், அது சிறுநீர் தொற்றுக்கு காரணமாக இருக்கலாம். இதனுடன், சிறுநீரில் ரத்தப் பிரச்சனையும் அதிகரிக்கிறது.

    எனவே, இத்தகைய அறிகுறிகள் காணப்பட்டால், அவை சிறுநீர் தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். மேலும் இந்த அறிகுறிகளை புறக்கணிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

    சிறுநீர் தொற்று மிகவும் சங்கடமாக இருக்கும் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சைய அளிக்கப்படாவிட்டால், அது வயிற்று தொற்றுக்கு வழிவகுக்கும். சிறுநீர் நோய்த்தொற்றை நிர்வகிப்பதில் நீர் மிகவும் முக்கியமானது. எனவே UTI ஏற்பட்டால், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

    தொடர்ந்து தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது மற்றும் பாக்டீரியாவை வெளியேற்றவும் மற்றும் UTI களை தடுக்கவும் உதவுகிறது. எனவே, நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

    பாக்டீரியாவால் சிறுநீர் தொற்று

    UTI -ன் மிகவும் பொதுவான காரணம் பாக்டீரியா ஆகும். பாக்டீரியாவால் பெரும்பாலானவர்களுக்கு சிறுநீர் தொற்று ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், தொற்றுநோயைத் தடுக்க, நீங்கள் சுகாதாரத்தைப் பேணுவது மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அல்லது அதிகரிப்புக்கான காரணங்களைக் கண்டறிந்து உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முயற்சிப்பது முக்கியம்.

    • கர்ப்பமாக இருக்கும் போது, இவ்வாறான வலிகள் ஏற்படுவது சாதாரணம் தான்.
    • கரு உருவாகும் போது, ஒருவிதமான வலி அடிவயிற்றில் ஏற்படும்.

    கர்ப்ப காலத்தில் குழந்தை வளரும் போது குழந்தைக்கு ஏற்றவாறு உடல் மாறும் போது கர்ப்பிணிகளுக்கு மேல் வயிற்றில் வலி ஏற்படும். பொதுவாகவே இந்த வயிற்று வலிக்கு அபாயகரமான காரணங்கள் இல்லை என்றாலும் சில தீவிரமானதாக இருக்கலாம்.

    கர்ப்பத்தின் ஒன்பது மாதங்களில் ஒரு கட்டத்தில் வயிற்று வலி அல்லது பிடிப்புகள் வருவது இயல்பானது. கர்ப்ப காலத்தில் வயிறு வலியே வரக்கூடாது, என்று நினைக்க கூடாது. வயிற்று வலி அல்லது பிடிப்புகள் இயல்பானது.

    பெரும்பாலான நேரங்களில் அது சாதாரணமாக இருக்கும். ஏனெனில் குழந்தையை வயிற்றில் சுமக்கும் போது தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் அதீத அழுத்தம் உங்கள் வயிற்றை சில நேரங்களில் அசெளகரியமாக உணர்த்தலாம்.

    பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அடிக்கடி வலி ஏற்பட்டால், மிகவும் பயமாக இருக்கும். அதிலும் முதல் தடவை லேசான வலி ஏற்பட்டாலே, அனைவரும் பதட்டம் அடைவோம். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது, இவ்வாறான வலிகள் ஏற்படுவது சாதாரணம் தான். அதற்காக சாதாரணமாக இருந்துவிடக் கூடாது. ஏனெனில் சில சமயங்களில் சிக்கலான பிரசவம் நடைபெறப்போகிறது என்பதற்கான அறிகுறியாகவும் அடிவயிற்றி வலி ஏற்படும்.

    மேலும் இத்தகைய வலி, கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் ஏற்படும். சொல்லப்போனால், கர்ப்பத்தில் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமான வலி அடிவயிற்றில் ஏற்படும். அதிலும் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் வலிகளை விட, இரண்டாம் கட்டத்தில் ஏற்படும் வலியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரி, இப்போது அத்தகைய வலி அடிவயிற்றில் ஏற்படுவதற்கான காரணத்தை பற்றி பார்க்கலாம்....

    * கர்ப்பத்தின் 2 முதல் 6 வாரங்களில், கருவானது உருவாக ஆரம்பிக்கும். அவ்வாறு அவை உருவாகும் போது, ஒருவிதமான வலி, அடிவயிற்றில் ஏற்படும். சொல்லப்போனால், இந்த காலத்தில் மாதவிடாய் சுழற்சி ஏற்படப்போவது போன்று உணர்வு இருக்கும். ஆனால் உண்மையில், இந்த காலத்தில் வலி ஏற்பட்டால், கரு உருவாக ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.

    * கர்ப்பமாக இருக்கும் போது ஹார்மோன்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய ஹார்மோன் மாற்றங்களாலும், வயிற்றில் வலி அல்லது ஒருவித பிடிப்பு ஏற்படும். இது கூட, கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் தான் உண்டாகும்.

    * சில சமயங்களில் கருமுட்டையானது கருப்பையில் இல்லாமல், பெல்லோப்பியன் குழாய்களில் இருந்தால், அது வளரும் போது மிகவும் கடுமையான வலியானது ஏற்படும். இந்த நிலையில் மருத்துவரிடம் சென்றால், நிச்சயம் கருவை அகற்றிவிட வேண்டும். இல்லையெனில் கருச்சிதைவு ஏற்படும். இந்த மாதிரியான வலி, 4-6 வாரங்களில் ஏற்படாது. ஆனால் அதற்கு பின்னர் வலியானது ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும். ஏனெனில் கரு வளரும் போது, குழாயும் விரிவடைந்து கடும் வலி ஏற்படும்.

    * கர்ப்பமாக இருக்கும் போது வலியுடன் கூடிய ரத்தப்போக்கு ஏற்பட்டால், அது கருச்சிதைவிற்கான அறிகுறியாகும். அதிலும் ரத்தப்போக்கு அதிகமாக இருந்து, வலி தொடர்ந்து அரை மணிநேரத்திற்கு இருந்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

    * பொதுவாகவே 36 வாரங்கள் முடிந்ததும், எந்த நேரத்திலும் பிரசவ வலி ஏற்படலாம். சில நேரங்களில் அவை பிரசவ வலியாக இல்லாவிட்டாலும், சில சமயங்களில் குறை பிரசவத்தை ஏற்படுத்தும். அதிலும் 7 அல்லது 8 -வது மாதத்தில், இந்த மாதிரியான வலி ஏற்பட்டால், அது குறைபிரவத்திற்கான அறிகுறியாக இருக்கும்.

    * நஞ்சுக்கொடி சிதைவு என்பது உயிருக்கு ஆபத்தான நிலை. இதில் குழந்தை பிறப்பதற்கு முன்பே நஞ்சுக்கொடி கருப்பையிலிருந்து பிரிந்துவிடும். இதன் அறிகுறியே நிலையான இடைவிடாத வயிறு வலி தான். இது உங்கள் வயிற்றில் நிவாரணம் இல்லாமல் நீண்ட காலத்துக்கு கடினமாக இருக்கும்.

    மற்றொன்று ரத்தம் தோய்ந்த திரவம் அல்லது பனிக்குட நீர் கசிவு. கூடுதல் அறிகுறிகளில் உங்கள் அடிவயிற்றில் மென்மை, முதுகுவலி, அல்லது ரத்தத்தின் தடயங்களை உள்ளடக்கிய திரவ வெளியேற்றம் ஆகியவை அடங்கும்.

    ×