search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரிஷ்மா"

    • இந்த பைக் சென்டென்னியல் கலெக்டர்ஸ் எடிசன் மோட்டார்சைக்கிள் என அழைக்கப்படுகிறது.
    • ஏலம் விடுவதன் வாயிலாக இந்த பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனைச் செய்ய திட்டமிட்டிருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்தின் பிரபல பைக் மாடலான கரிஷ்மா (Karizma XMR) மோட்டார்சைக்கிளின் புதிய எடிசனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்நிறுவனத்தை உருவாக்கிய பிரிஜ்மோகன் லால் முஞ்சலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரின் 101 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த மாடல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    ஹீரோ நிறுவனம் இந்த பைக்கை சென்டென்னியல் கலெக்டர்ஸ் எடிசன் மோட்டார்சைக்கிள் (Centennial Collector's Edition Motorcycle) என குறிப்பிட்டு இருக்கின்றது. சுருக்கமாக மோட்டார்சைக்கிள் 'சிஇ001' (CE001) எனும் பெயரில் இது அழைக்கப்படுகிறது.

    இந்த சிறப்பு பதிப்பை அது வெறும் 100 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைக்கு தயார் செய்திருக்கின்றது.

    ஏலம் விடுவதன் வாயிலாக இந்த பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனைச் செய்ய திட்டமிட்டிருக்கிறது. இதற்கான ஏல பணிகளே தற்போது தொடங்கி இருப்பதாகவும் இந்த பைக்கை சிறப்பு நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாக ஏலம் விடப்படும் என்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் (Karizma XMR) உடன் ஒப்பிடுகையில், சென்டென்னியல் கலெக்டர்ஸ் எடிசன் மோட்டார்சைக்கிள் 5 கிலோ எடை குறைவாக 158 கிலோவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கரிஷ்மாவின் திருமணத்தின் போது விகாசின் குடும்பத்தினருக்கு ₹ 11 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ஒரு எஸ்யூவி காரை வரதட்சணையாக கொடுத்தோம்
    • விகாஸ் குடும்பத்தினர் ஒரு ஃபார்ச்சூனர் கார் மற்றும் கூடுதலாக ₹ 21 லட்சம் பணம் கேட்டுள்ளனர்

    உத்தரபிரதேசத்தில் 2022 டிசம்பரில் கரிஷ்மா என்ற பெண் விகாஸ் என்பவரை திருமணம் செய்தார். பின்பு இந்த ஜோடி கிரேட்டர் நொய்டாவில் உள்ள விகாஸ் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், வரதட்சணை கொடுமையால் கரிஷ்மா அவரது கணவர் மற்றும் கணவரது குடும்பத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    இது தொடர்பாக கரிஷ்மாவின் சகோதரர் தீபக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கரிஷ்மாவின் திருமணத்தின் போது விகாசின் குடும்பத்தினருக்கு ₹ 11 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ஒரு எஸ்யூவி காரை வரதட்சணையாக கொடுத்தோம். ஆனால், விகாசின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக இன்னும் அதிக வரதட்சணை கேட்டு கரிஷ்மாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர்.

    இந்நிலையில், கரிஷ்மாவிற்கு ஒரு பெண் குழந்தையைப் பிறந்துள்ளது. அதன்பிறகும் விகாஸ் குடும்பத்தினரின் அதிக வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளனர். அதனால் கரிஷிமாவின் குடும்பத்தினர் விகாஸ் குடும்பத்திற்கு கூடுதலாக ₹10 லட்சம் கொடுத்தனர். அதன்பின்பும் இந்த கொடுமை முடிவுக்கு வரவில்லை.

    அண்மையில், விகாஸ் குடும்பத்தினர் ஒரு ஃபார்ச்சூனர் கார் மற்றும் கூடுதலாக ₹ 21 லட்சம் பணம் கேட்டுள்ளனர். அதனை கரிஷ்மா குடும்பத்தினரால் கொடுக்கமுடியவில்லை.

    இந்நிலையில், மார்ச் 29 அன்று கரிஷ்மா எங்களை தொடர்பு கொண்டு விகாஸ் குடும்பத்தினர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்தார். உடனே நாங்கள் விகாஸ் வீட்டிற்கு சென்று பார்க்கையில் கரிஷ்மா இறந்து கிடந்தார். கரிஷ்மாவை அவரது கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினர் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த புகாரில், விகாஸ், அவரது தந்தை சோம்பல் பதி, அவரது தாய் ராகேஷ், சகோதரி ரிங்கி மற்றும் சகோதரர்கள் சுனில் மற்றும் அனில் ஆகியோர் மீது வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் விகாஸ் மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

    ×