என் மலர்
நீங்கள் தேடியது "பச்சை பட்டினி விரதம்"
- சமயபுரம் மாரியம்மனை தரிசிப்போருக்கு நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
- சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பகல் பொழுதில் நடை சாத்தப்படும் வழக்கம் கிடையாது.
பொதுவாக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்து வதற்காக அம்மனை வேண்டி விரதம் இருப்பது வழக்கம். மேலும் கோவில் விழாக்களில் சாமிக்கு நேர்ச்சை செலுத்துவோர் மற்றும் வழிபாடுகளை முன் நின்று செய்வோர் கடுமையான விரதம் இருப்பார்கள்.
சபரிமலை கோவிலுக்கு செல்வோர் 48 நாட்களும், முருகன் கோவில் களுக்கு செல்வோர் 40 நாட்களுக்கு மேலாகவும் விரதம் இருப்பது வழக்கம். ஆனால் உலக மக்களின் நன்மைக்காக அம்மனே விரதம் இருக்கும் நிகழ்வு திருச்சி சமயபுரம் கோவிலில் பல ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது.

சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் சங்கடங்கள் போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஒட்டுமொத்த உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோயில்களுக்கும் தலைமை பீடமானதுதான் சமயபுரம் ஆகும். சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த தலம்.
தட்சன் யாகத்துக்குச்சென்ற தாட்சாயணியை தூக்கி சிவபெருமான் ருத்ரதாண்ட வம் ஆடியபோது அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்ததால் இந்த திருத்தலத்திற்கு கண்ணனூர் என்ற பெயர் புராணகாலம் தொட்டே இருந்து வருகிறது.
மிகத்தொன்மையான உற்சவ அம்மனின் திருமேனியில் இன்றும் ஆயிரம் கண்கள் உள்ளன. இது, இத்தலத்தின் பெருமையை விளக்குவதாக அமைந்துள்ளது.
அம்மனின் சுயம்பு திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவக்கிரகங்களை நவசர்ப்பங்களாக தரித்து அருள்பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் மகா மாரியம்மன் அருள்பாலிப்பது தனிப்பெரும் சிறப்பு அம்சமாகும்.
இங்கு உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய், நொடிகள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக் காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பாகும்.
இந்த 28 நாட்களில் இக்கோவிலின் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவும், நீர்மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நெய் வேத்தியமாக படைக்கப்படுகிறது.
மகிஷா சூரனை வதம் செய்த பாவம் தீரவும், தன் கோபம் தணியவும் இந்த விரதத்தை அம்மன் மேற்கொள்கிறார். இந்த நாட்களில் பட்டினி விரதம் இருக்கும் காலங்களில் அம்மனின் முகம் சோர்வுடன் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

அம்மனை மகிழ்வூட்ட பூச்சொரிதல் நடைபெறும். அம்மன் விரதம் இருக்கும் 28 நாட்களில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை களில் திருச்சி மட்டுமல்லாது சுற்றுப்பகுதி களில் இருந்து மக்கள் பூக்களை கூடை, கூடையாக கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றுவார்கள்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல ஆயிரம் கிலோ பூக்கள் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சாத்தப் படும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்காரிக்கப்பட்ட வாகனங்களில், மேளதாளங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக வருவார்கள். உடல் முழுவதும் வாசனை பூக்களால் மலை போல் குவித்து உண்ணா நோன்பிருக்கும் அம்மன் சாந்த சொரூபிணியாகி அருள்பாலிக்கிறார்.
அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் நாட்களில் பக்தர்கள் வீடுகளில் அம்மன் படத்தை வைத்து வழிபடுவது வழக்கம். சமையலின்போது தாளிக்காமல் இருப்பார்கள். காலில் செருப்பு அணியாமல் இருப்பார்கள்.
இளநீரும் நீர் மோரும் அருந்தி இருப்பார்கள், மஞ்சள் ஆடை உடுத்தி மகமாயியின் அருள் வேண்டி இருப்பார்கள். மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் நிறைவு செய்யும் நாளில், சித்திரை தேரோட்ட விழா கொடியேற்றம் நடைபெறும்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் அனைத்து நாட்களிலுமே பகல் பொழுதில் நடை சாத்தப்படும் வழக்கம் கிடையாது.
காலை முதல் இரவு வரை அம்மனை எப்போது வேண்டுமானாலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். சமயபுரம் மாரி யம்மனுக்கு உலகின் பல நாடுகளிலும் கோவில் இருந்தாலும் திருச்சி சமயபுரத்திற்கு வந்து அம்பிகையை தரிசிப்பதை பலருக்கும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
- அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பாகும்.
- சித்திரை மாதம் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
மண்ணச்சநல்லூர்:
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சக்தி தலங்களில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு, மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பாகும்.
இத்தகைய பச்சை பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள்பாலித்தல் ஆகிய 5 தொழில்களையும் செய்து, சித்திரை பெருவிழா நாட்களில் அம்மன் அருள்புரிந்து வருவதாக ஐதீகம்.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த் திரு விழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
இன்று காலை அம்மன் சிறப்பு கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் அம்மன் கேடயத்தில் எழுந்த ருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகி றார்.
இதைத்தொடர்ந்து திரு விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார்.
அதேபோல் தினமும் இரவு 8 மணிக்கு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், மரக்குதிரை வாகனம் என ஒவ் வொரு வாகனத்தில் எழுந்து கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
வருகின்ற 15-ந் தேதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற 16-ந்தேதி (செவ்வாய்கிழமை) நடைபெறுகி றது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.