என் மலர்
நீங்கள் தேடியது "மதுரை மீனாட்சி அம்மன்"
- அனைத்து ஜீவராசிகளுக்கும் காட்சி கொடுக்கவே இறைவன் மாசி வீதியில் வலம் வருவதாக ஐதீகம்.
- சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி திருக்கல்யாணம் 8-ந்தேதி நடைபெறுகிறது.
மதுரை பாண்டிய மன்னனுக்கு மீனாட்சி மகளாக பிறந்து, பட்டத்து அரசியாக மகுடம் சூடி, தேவா்களை போரில் வென்று, கடைசியாக சிவபெருமானை போருக்கு அழைத்து பின்னர் அவரையே மணம் புரிந்தார்.
மதுரையை ஆண்ட மகாராணிக்கு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த விழாவை பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடுகிறார்கள். இந்தாண்டு சித்திரை திருவிழா நாளை மறுநாள் (29-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா நடைபெறும் நாட்களில் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி-சுந்தரேசுவரா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். அனைத்து ஜீவராசிகளுக்கும் காட்சி கொடுக்கவே இறைவன் மாசி வீதியில் வலம் வருவதாக ஐதீகம். எனவே ஒவ்வொரு நாளும் மக்கள் பெருந்திரளாக கூடி தரிசிப்பார்கள்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகள் பல உள்ளன. மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் வைபவம் மே 6-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7.35 மணிக்கு மேல் 7.59 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள ஆறு கால் பீடத்தில் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அம்மனுக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தின செங்கோல் வழங்குவார்கள். அடுத்த நாள் சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை போருக்கு அழைத்து எட்டு திக்கிலும் தேவா்களை வென்று கடைசியாக இறைவனுடன் அம்மன் போர் புரியும் திக்கு விஜயம் நிகழ்ச்சி நடக்கிறது.
சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி திருக்கல்யாணம் 8-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் வடக்கு மேற்கு ஆடி வீதிகள் சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த விழாவை காண பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வருவார்கள். அதே போன்று திருப்பரங்குன்றத்தில் இருந்து தெய்வானை, முருகப்பெருமானும், பவளகனிவாய் பெருமாளும் வந்து பங்கேற்பார்கள். மறுநாள் (9-ந்தேதி) மாசி வீதிகளில் சுவாமி, அம்மன் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து அழகர்கோவிலில் நடக்கும் சித்திரை விழாவில் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும். 10-ந்தேதி அழகர் கோவிலில் இருந்து பக்தர்கள் புடைசூழ மதுரையை நோக்கி அழகர் அதிர்வேட்டுகள் முழங்க புறப்படுகிறார். 18 கி.மீ. தூரம் வரும் அவர், வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
11-ந்தேதி மூன்று மாவடியில் அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடக்கிறது. 12-ந்தேதி விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில், கள்ளழகர் தங்கக்குதிரையில் வீற்றிருந்து வைகை ஆற்றில் இறங்குகிறார். ராமராயர் மண்டபத்தில் அவரை குளிர்விக்க தீர்த்தவாரியும் நடக்கிறது. அடுத்த நாள் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். பின்னர் தசாவதாரங்களில் காட்சி அளிக்கிறார். பூப்பல்லக்கில் தல்லாகுளத்தில் பவனி வருவார். 15-ந்தேதி மலைக்கு புறப்படுகிறார்.
- வெளிநாட்டு பக்தர்களும் மீனாட்சி அம்மன் கோவிலை வியந்து பார்த்து செல்கின்றனர்.
- வாரங்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழமை வாய்ந்த பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 4 வாயில்களிலும் பிரம்மாண்ட ராஜகோபுரங்களுடன் காட்சியளிக்கிறது. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியே தாமரை வடிவில் மதுரை மாநகரம் உருவானதாக வரலாறு கூறுகிறது.
வெளிநாட்டு பக்தர்களும் மீனாட்சி அம்மன் கோவிலை வியந்து பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் புதுப்பிக்கப்படும் பழமையான கோவில் ஒன்றை மீனாட்சி அம்மன் கோவில் போன்று வடிவமைக்க திட்டமிட்டுள்ளனர்.
வாரங்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழமை வாய்ந்த பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கி.பி. 1323-ம் ஆண்டில் காகதிய பேரரசு காலத்தில் கட்டப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது.
9 அடி அகலம் 9 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக பத்திரகாளி அம்மன் இந்த கோவிலில் காட்சியளிக்கிறார்.
தினந்தோறும் இந்த கோவிலுக்கு சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் வரை வந்து செல்கின்றனர். ஆண்டு தோறும் 4 முறை பிரம்மாண்டமாக திருவிழாக்கள் நடத்தப்படுகிறது.
பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவிலை பிரமாண்டமாக புதுப்பிக்க வேண்டும். அனைவரும் பிரமிக்கும் வகையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலை போல இந்த கோவிலை வடிவமைக்க வேண்டும் என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து கோவிலை சுற்றிலும் மாட வீதிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ரூ.100 கோடி செலவில் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
மேலும் 4 புறமும் பிரம்மாண்ட ராஜகோபுரங்கள் அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1000 கோடி வரை செலவாகலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில் போன்று மாதிரிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. கட்டுமான பணியில் ஈடுபடும் என்ஜினீயர்கள் கொண்ட குழுவினர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் தஞ்சை பெரிய கோவில் ஆகிய இடங்களில் ஆய்வு செய்து திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
விரைவில் அவர்கள் மதுரை, தஞ்சை கோவில்களில் ஆய்வு செய்த பிறகு இதற்கான பணிகள் தொடங்கும்.
இதற்கு நன்கொடையாளர்கள் உதவியும் நாடாப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்துள்ளார்.
- டிக்கெட் பதிவு செய்ய வருபவர்கள் ஆதார் நகல், போட்டோவுடன் கூடிய அடையாளச் சான்று, மொபைல் எண், இ-மெயில் முகவரி ஆகியவை அளிக்க வேண்டும்.
- அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து மொபைல் மற்றும் இ-மெயிலில் 14-ந்தேதி அன்று தகவல் தெரிவிக்கப்படும்.
மதுரை:
உலகப் புகழ்பெற்ற மதுரையில் முத்திரை பதிக்கும் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதி கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது.
விழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர் காலை, இரவு என இரு வேளைகளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாசி வீதிகளை வலம் வருவர். ஏப்ரல் 19-ந்தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 20-ந்தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது.
சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண வைபவங்கள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் நடைபெறும்.
இந்தாண்டு மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை பக்தர்கள் காண வசதியாக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் வைத்திருப்பவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும், கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற முறையில் தெற்கு கோபுரம் வழியாக மொத்தம் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதற்கான கட்டண டிக்கெட் முன்பதிவானது கோவில் இணையதளமான maduraimeenakshi.hrce.tn.gov.in மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான hrce.tn.gov.in ஆகியவற்றில் இன்று (9-ந்தேதி) தொடங்கி வருகிற 13-ந்தேதி இரவு 9 மணி வரை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒருவர் இரண்டு ரூ.500 கட்டண டிக்கெட் மட்டுமே பெறமுடியும். ரூ.200 டிக்கெட்டை ஒருவர் 3 பெறலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.200 டிக்கெட்டுகளை பெற முடியாது. இந்த பதிவின்போது, பிறந்த தேதி சரியாக இருக்க வேண்டும்.
பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் கோவில் பணியாளர்கள் மூலம் ரூ.500, ரூ.200 டிக்கெட் முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டிக்கெட் பதிவு செய்ய வருபவர்கள் ஆதார் நகல், போட்டோவுடன் கூடிய அடையாளச் சான்று, மொபைல் எண், இ-மெயில் முகவரி ஆகியவை அளிக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து மொபைல் மற்றும் இ-மெயிலில் 14-ந்தேதி அன்று தகவல் தெரிவிக்கப்படும்.
அவ்வாறு டிக்கெட் உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்தவர்கள் வருகிற 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் தங்களுக்கு வந்த எஸ்.எம்.எஸ்., இ-மெயிலை காண்பித்து பணம் செலுத்தி திருக்கல்யாண டிக்கெட்டை பெறலாம்.
டிக்கெட் பெற்றவர்கள், திருக்கல்யாண நாளான வருகிற 21-ந்தேதி காலை 7 மணிக்குள் கோவிலுக்கு வந்து, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அமர்ந்து மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.