என் மலர்
நீங்கள் தேடியது "அதிமுக செயலாளர்"
- அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை மதிப்பளிப்பதில்லை.
- தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாததால் அதிருப்தியில் ராஜினாமா.
கர்நாடகா அதிமுகவின் முக்கிய நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் ராஜினாமா அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை களம் இறக்க மறுத்ததால் அதிருப்தி என தெரிவிக்கப்படுகிறது.
பிற மாநிலங்களில் ஏன் அதிமுகவை வளர்க்க வேண்டும் என மேலிடம் நினைப்பதாக கர்நாடகா நிர்வாகிகள் வேதனை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மக்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்பதை கூட கட்சி மேலிடம் கூற மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு பிறகு கர்நாடகாவில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை மதிப்பளிப்பதில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து எஸ்டி குமார் ராஜினாமா செய்துள்ளார்.
ஓசூரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது எஸ்.டி.குமார் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பமனு அளித்தும், வாய்ப்பு வழங்கப்படவில்லை.
யாரை ஆதரித்து பிரசாரம் செய்வதென்று தெரியாமல் கர்நாடகா அதிமுகவினர் குழம்பியுள்ளனர். அதனால், மாநில அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்து கொண்டேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வெங்கடாஜலத்தை இன்று முதல் கட்சிபொறுப்பில் இருந்து விடுவித்து அறிக்கை.
- 8 வருடங்களாக மாநகர் மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் அமைப்பு ரீதியாக அ.தி.மு.க.வில் மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம் என 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
இதில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாஜலம் பதவி வகித்து வந்தார். இவரை மறைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாநகர் மாவட்ட செயலாளராக அறிவித்தார்.
இதையடுத்து வெங்கடாஜலம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 8 வருடங்களாக மாநகர் மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் அவர் மாநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய பொறுப்பாளர்களாக 2 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த வெங்கடாஜலத்தை இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவித்து சேலம் மாநகர் மாவட்ட கழக பணிகளை மேற்கொள்வதற்காக புதிய பொறுப்பாளர்களாக அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எம்.கே.செல்வராஜ், சூரமங்கலம் பகுதி-2 கழக செயலாளராக இருந்த ஏ.கே.எஸ்.எம்.பாலு ஆகியோர் நியமிக்கப்பட்டு ள்ளனர்.
இவர்களுக்கு நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.