search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது கடைகள்"

    • தெலுங்கானாவில் தனியார் வசம் உள்ள மதுபான கடைகள் மூலம் அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைப்பது தெரியவந்தது.
    • செப்டம்பர் மாத இறுதியில் ஆன்லைன் மூலம் மதுபான கடைகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

    திருப்பதி:

    ஆந்திராவில் கடந்த 2017-ம் ஆண்டில் சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது மதுபான கடைகள் தனியார் வசம் இருந்தது.

    அதன் பிறகு ஆட்சிக்கு வந்த முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மதுபான கடைகளை அரசு மதுகடைகளாக மாற்றினார்.

    சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு புதிய மதுபான கொள்கைகளை அமல்படுத்த முடிவு செய்தார்.

    அதன்படி கலால் துறை அதிகாரிகள் தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் மதுபான கொள்கை குறித்து ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.

    அதில் தெலுங்கானாவில் தனியார் வசம் உள்ள மதுபான கடைகள் மூலம் அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைப்பது தெரியவந்தது.

    இதனால் தெலுங்கானா மதுபான கொள்கையை பின்பற்ற முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

    அதன்படி செப்டம்பர் மாத இறுதியில் ஆன்லைன் மூலம் மதுபான கடைகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

    மதுபான கடைக்கு விண்ணப்பம் செய்ய ரூ.2 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைக்கும் 40 விண்ணப்பங்கள் வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2000 கோடி வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஆட்சியில் அரசு மதுபான கடை என்பதால் அருகில் பார் வைக்க அனுமதி கொடுக்கவில்லை. இதனால் மது குடிப்பவர்கள் சாலைகளில் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

    தற்போது மதுக்கடைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளதால் மது கடையுடன் கூடிய பார் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளதாக ஆந்திர மாநில கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • வழக்கமாக மது வாங்க வரும் மது பிரியர்கள் கடை அடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்‌.
    • கடந்த தேர்தலின் போது மதுக்கடைகள் தனியார் வசம் இருந்தது.

    திருப்பதி:

    ஆந்திராவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் தொண்டர்களுக்கு மது பாட்டில்கள் வழங்கி வருகின்றனர்.

    தொண்டர்கள் மது பாட்டில் வழங்கினால் மட்டுமே பிரசாரத்திற்கு வர முடியும் என கராராக கூறி விடுகின்றனர்.

    பிரசாரத்திற்காக மதுபானங்களை வாங்கி அள்ளி சென்று விடுகின்றனர். இதனால் மதியத்திற்குள் மதுபாட்டில்கள் விற்று தீர்ந்து விடுகின்றன.

    குறிப்பிட்ட அளவு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படுவதால் விற்பனை இலக்கை எட்டியவுடன் மதியத்திற்கு மேல் கடை ஊழியர்கள் மது கடையை அடைத்து விட்டு செல்கின்றனர்.

    வழக்கமாக மது வாங்க வரும் மது பிரியர்கள் கடை அடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    ஆந்திராவில் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.70 கோடிக்கு மது விற்பனை ஆகிறது.

    கடந்த தேர்தலின் போது மதுக்கடைகள் தனியார் வசம் இருந்தது. இதனால் மது கடை நடத்துபவர்கள் முன்கூட்டியே மதுபாட்டில்களை ஸ்கேன் செய்து இரவு வரை விற்பனை செய்தனர்.

    தற்போது மது கடைகள் அரசு வசம் உள்ளதால் தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகளுடன் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

    ×