search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி மதுபானக் கொள்கை"

    • தன்னை மக்கள் நேர்மையாளன் என்று சொல்லும்வரை முதல்-மந்திரி பதவியை ஏற்க மாட்டேன்- கெஜ்ரிவால்.
    • டெல்லி மந்திரிகள் அதிஷி, கோபால் ராய், சவுரவ் பரத்வாஜ், கைலாஷ் கெலாட் பெயர்கள் அடிபடுகிறது.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் 26-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவ்வழக்கில் கடந்த 13-ந்தேதி உச்சநீதிமன்றம் அவரை ஜாமினில் விடுதலை செய்தது. அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

    கடந்த 15-ந்தேதி, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 48 மணி நேரத்துக்குள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். தன்னை மக்கள் நேர்மையாளன் என்று சொல்லும்வரை முதல்-மந்திரி பதவியை ஏற்க மாட்டேன் என்று கூறினார். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு, ஒரு மூத்த தலைவர் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவித்தார்.

    இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ இல்லத்தில் நேற்று அவரை முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா சந்தித்து பேசினார். புதிய முதல்-மந்திரியாக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் மாலையில், கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி அரசியல் விவகாரக்குழு கூட்டம் நடந்தது. அதிலும், புதிய முதல்-மந்திரி தேர்வு பற்றி விவாதிக்கப்பட்டது.

    டெல்லி மந்திரிகள் அதிஷி, கோபால் ராய், சவுரவ் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், தனித்தொகுதிகளில் வெற்றி பெற்ற சில எம்.எல்.ஏ.க்கள், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா ஆகியோரின் பெயர்கள் புதிய முதல்-மந்திரி பதவிக்கு அடிபடுகின்றன.

    இதற்கிடையே, டெல்லி கவர்னர் வி.கே. சக்சேனாவை இன்று சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் நேரம் கேட்டுள்ளார். இன்று மாலை 4.30 மணிக்கு சந்திக்க அவருக்கு கவர்னர் நேரம் ஒதுக்கி தந்துள்ளார். இச்சந்திப்பின்போது, கவர்னரிடம் கெஜ்ரிவால் ராஜினாமா கடிதம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது. அதைத்தொடர்ந்து புதிய முதல்-மந்திரி பதவியேற்பார் என்று தெரிகிறது.

    • மணிஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
    • பிப்ரவரி 28-ந்தேதி தனது டெல்லி மாநில துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், டெல்லி மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியோ மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஜாமின் கிடைக்காமல் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருக்கும் சிசோடியா, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இதற்கு வருகிற 20-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏப்ரல் 20-ந்தேதி மணிஷ் சிசோடியாவின் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா விசாரணைக்கு ஏற்றுக் கொள்வார் எனத் தெரிகிறது.

    மணிஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சிபிஐ எஃப்.ஐ.ஆர்.யை மேற்கோள் காட்டி அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து அவரை மார்ச் 9-ந்தேதி கைது செய்தது.

    துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    ×