என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாபி செம்மனூர்"

    • இறப்புக்கு ஈடாக ரூ.34 கோடி பெற்றுக்கொள்ள சிறுவன் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
    • இதனால் 'சேவ் அப்துல் ரஹீம்' என்ற செல்போன் செயலி நிறுவப்பட்டு, நிதி திரட்டப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள வாலிபரான அப்துல் ரஹீம் மாற்றுத்திறனாளி சிறுவனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சவுதி அரேபிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

    சிறுவனின் இறப்புக்கு ஈடாக 34 கோடி ரூபாயைப் பெற்றுக்கொள்ள சிறுவனின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதனால் 'சேவ் அப்துல் ரஹீம்' என்ற செல்போன் செயலியையும் நிறுவி கூட்டு நிதி திரட்டும் பணியில் அவரது நண்பர்கள் ஈடுபட்டனர்.

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் நிதி அளித்தனர். கடந்த வாரம் நிர்ணயிக்கப்பட்ட ரூ.34 கோடியையும் தாண்டி அதிகமாகவே நிதி வந்தடைந்தது.


    இந்நிலையில், சவுதியில் சிக்கிய கேரள வாலிபரை மீட்க முக்கிய பங்காற்றியவர் பாபி செம்மனூர் என்பதும், இவர் தனது பங்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்ததுடன், குறைந்த கால அவகாசத்தை நீட்டிக்கும் வகையில் சவுதி அரசிடம் பேசியதும் விசாரணையில் தெரியவந்தது.

    பிரபல தொழிலதிபரான பாபி செம்மனூர் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை நிதி திரட்டும் பிரசாரத்தை நடத்துவதாக அறிவித்திருந்தார். அதன்பின், பல்வேறு தரப்பு மக்களும் உதவ முன்வந்தனர். திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சாலையோரங்கள் போன்ற பொது இடங்களிலும் மக்கள் உதவி கோரப்பட்டது. இதனால் மொத்தம் ரூ.34 கோடியே 45 லட்சம் நிதி கிடைத்துள்ளது.

    செம்மனூர் நகைக்கடையின் நிறுவனரான பாபி செம்மனூர் விமானத்தில் பயணிக்க ஆசைப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பயண ஏற்பாடு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரபல தொழிலதிபரான பாபி செம்மனூரை எர்ணாகுளம் மத்திய போலீசார் கடந்த 8-ந்தேதி கைது செய்தனர்.
    • சிறையில் பாபி செம்மனூருக்கு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகளும் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகை ஹனிரோசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரான பாபி செம்மனூரை எர்ணாகுளம் மத்திய போலீசார் கடந்த 8-ந்தேதி கைது செய்தனர்.

    பின்பு அவர் எர்ணாகுளம் காக்கநாட்டில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு சில நாட்களுக்கு பிறகு அவர் ஜெயிலில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே பாமி செம்மனூர், சிறையில் இருந்தபோது அவரை சந்திக்க வந்த முக்கிய பிரமுகர்களுடன் கேரள மாநில மத்திய பகுதி சிறைத்துறை டி.ஐ.ஜி. அஜய குமார் சென்றிருக்கிறார்.

    பின்பு ஜெயில் சூப்பிரண்டு ராஜூ ஆபிரகாம் அறையில் டி.ஐ.ஜி. அஜய குமார் மற்றும் அவருடன் சென்றிருந்த 3 முக்கிய பிரமுகர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பாமி செம்மனூரிடம் பேசியுள்ளனர். மேலும் சிறையில் பாபி செம்மனூருக்கு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகளும் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதுகுறித்து சிறைத்துறையின் உயர் அதிகாரி விசாரணை நடத்தினார். அதில் சிறையில் பாபி செம்மனூருக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து சிறைத்துறை டி.ஐ.ஜி. அஜய குமார், காக்கநாடு சிறை சூப்பிரண்டு ராஜூ ஆபிரகாம் ஆகிய இருவரையும் சஸ்பெண்டு செய்து மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    ×