search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேன்கனிக்கோட்டை"

    • உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
    • தக்காளி தோட்டத்தில் 2 யானைகள் புகுந்து தோட்டத்தை காலல் மிதித்து நாசம் செய்துள்ளன.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 10 காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன.

    இந்நிலையில் சந்தனப்பள்ளி, தல்சூர் ஆகிய கிராமங்களில் 2 யானைகள் முகாமிட்டு ராகி பயிர்களை நாசம் செய்துள்ளன. விவசாயிகள் பட்டாசு வெடித்து விரட்டியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து அருகில் உள்ள குருபட்டி கிராமத்தில் மூர்த்தி என்பருடைய 3 ஏக்கர் தக்காளி தோட்டத்தில் 2 யானைகள் புகுந்து தோட்டத்தை காலல் மிதித்து நாசம் செய்துள்ளன.

    இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சேதமடைந்த தாக்காளி, ராகி தோட்டங்களை பார்வையிட்டனர். தக்காளி விலை சற்று உயர்ந்துள்ள நிலையில் யானைகள் அட்டகாசத்தால் தக்காளி தோட்டம் நாசமடைந்து உள்ளதால் விவசாயி மூர்த்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வனத்துறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    மேலும், இந்த பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை கர்நாடகா வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பக்தி கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரை ஊராட்சிக்குட்பட்ட அடவி சாமிபுரம் கிராமத்தில் மதனகிரி முனீஸ்வர சாமி கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது.

    விழாவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித தீர்த்தம் தெளித்து தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேரில் உற்சவ மூர்த்தியை அமர்த்தி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க பக்தி கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து கோவிலை சுற்றி வலம் வந்து தேரை நிலை நிறுத்தினர்.

    இதில் விழா கமிட்டி தலைவர் சமபங்கிராம ரெட்டி, தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், தண்டரை ஊராட்சி மன்ற தலைவர் நீலம்மா ஜெயராமன், மல்லசந்திரம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேகா முனிராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர ஆர்த்தி, தொழில் அதிபர் சுரேஷ் பாபு, வசந்தகுமார், துரைசாமி, டி.எஸ்.பி சாந்தி, இன்ஸ்பெக்டர் தவமணி, ஊராட்சி மன்ற செயலாளர் விஸ்வநாத், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், விழா குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் கர்நாடக மாநில பக்தர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இன்று இரவு நாடகம் மற்றும் வான வேடிக்கைகளுடன் கிராம தேவதைகளின் பல்லக்கு ஊர்வலம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    ×