என் மலர்
நீங்கள் தேடியது "திரிபுரா அரசு"
- பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
- பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
அகர்தலா:
வட மாநிலங்களில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். கால நிலை மாற்றம் மற்றும் வெயில் கொளுத்தி வருவதால் இமயமலை பகுதியில் இருக்கும் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இப்படி நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில், அதிகரித்து வரும் வெப்ப அலையைக் கருத்தில் கொண்டு, திரிபுரா மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
- கடந்த 2016-ம் ஆண்டு முதல் மின் வினியோகம் நடந்து வருகிறது.
- நன்றிக்கடனாகவும் மின் வினியோகம் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
வங்காளதேசத்துக்கு நாள்தோறும் 60 முதல் 70 மெகாவாட் வரையிலான மின்சாரத்தை திரிபுரா மாநில மின் பகிர்மான கழகம் வழங்கி வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்த வினியோகம் நடந்து வருகிறது.
இந்த மின்சாரத்துக்காக வங்காளதேச அரசு சுமார் ரூ.200 கோடி வரை பாக்கி வைத்து உள்ளதாக முதல்-மந்திரி மாணிக் சகா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'வங்காளதேசம் ரூ.200 கோடி வரை மின் கட்டண பாக்கி வைத்துள்ளது. இது நாள்தோறும் அதிகரித்தும் வருகிறது. இதை விரைவில் வழங்கி மின் வினியோகம் தடைபடாமல் பார்த்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்' என தெரிவித்தார்.
அதிகமான கட்டணம் பாக்கி வைத்துள்ளதால் வங்காளதேசத்துக்கு மின் வினியோகம் நிறுத்தப்படுமா? என்று கேட்டபோது, அது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று பதிலளித்தார்.
திரிபுரா மின் உற்பத்தி நிலையத்துக்கான பல தளவாடங்கள் வங்காளதேசம் அல்லது சிட்டகாங் துறைமுகம் வழியாக கொண்டு வரப்படுவதாகவும், எனவே அதற்கான நன்றிக்கடனாகவும் மின் வினியோகம் செய்து வருவதாகவும் தெரிவித்தார். எனினும் கட்டண நிலுவையை வழங்காமல் இன்னும் எவ்வளவு காலத்துக்கு மின்சாரம் வழங்க முடியும் என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.