என் மலர்
நீங்கள் தேடியது "இதயநோய்"
- புதிய வகை மரபணுவானது அல்காப்டோனூரியா அல்லது கருப்பு சிறுநீர் நோயை உருவாக்கும் தன்மை கொண்டது.
- மரபணு பகுப்பாய்வு மூலம் இந்த நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பெரிய அளவிலான பாதிப்பை தடுக்கலாம்
சென்னை:
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உயிர் வேதியியல் துறையை சேர்ந்த நிபுணர்கள், சென்னையை சேர்ந்த நரிக்குறவர் மக்களிடையே ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். அப்போது அவர்களின் உடலில் புதிய வகை மரபணு மாற்றத்தை கண்டுபிடித்தனர்.
இந்த புதிய வகை மரபணுவானது அல்காப்டோனூரியா அல்லது கருப்பு சிறுநீர் நோயை உருவாக்கும் தன்மை கொண்டது. இந்த புதிய வகை மரபணு தொடர்பாக ஆராய்ச்சி தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 3 நாட்கள் தொடர் மருத்துவ கல்வி திட்டம் மற்றும் பகுப்பாய்வு உயிர் வேதியியல் குறித்த பயிலரங்கு நடந்தது. இந்த பயிலரங்கில் நரிக்குறவ மக்களிடையே கண்டு பிடிக்கப்பட்டுள்ள புதிய வகை மரபணு பற்றிய ஆய்வு அறிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் நாடு முழுவதும் இருந்து 110 மருத்துவர்கள் பங்கேற்றனர்.
இந்த பயிலரங்கத்தில் அல்காப்டோனூரியா மரபணு மாற்றம் பற்றிய புத்தகமும் வெளியிடப்பட்டது.
இந்த பயிலரங்கத்தில் பேசிய மருத்துவர்கள் கூறியதாவது:-
அல்காப்டோனூரியா நோயை தோற்றுவிக்கும் புதிய வகை மரபணு மாற்றம் கொண்டவர்கள், இளம் வயதிலேயே மூட்டுவலி மற்றும் இதயநோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இவர்களுக்கு சிறுநீர் கருப்பு நிறத்தில் வெளியேறும். அல்லது காற்று பட்டவுடன் சிறுநீர் கருப்பு நிறத்தில் மாறும்.
இது உடலில் ஹோமோ ஜென்டிசிக் அமிலம் எனப்படும் ரசாயனத்தை உருவாக்கி உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த மரபணு மாற்றமானது பரம்பரை வழியாக மிகவும் அரிதாகவே ஏற்படும். மரபணு பகுப்பாய்வு மூலம் இந்த நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பெரிய அளவிலான பாதிப்பை தடுக்கலாம். மேலும் அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- இதயத்தில் நோய் இருந்தால் நெஞ்சில் வலி ஏற்படுவது தான் ஒரே அறிகுறி எனும் தவறாக புரிதல் பலரிடம் உள்ளது.
- கொழுப்புச்சத்து, சோடியம், இனிப்பு உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
மனித உடலில் இன்றியமையாத உறுப்பு இதயம் ஆகும். உடல் முழுவதும் குருதியை விநியோகம் செய்யும் பிரதான உறுப்பான இதயத்திற்கு வரும் ஆபத்துகளில் பெரும்பாலானவற்றை நாம் கட்டுப்படுத்த முடியும். உண்ணும் உணவும், வாழ்க்கை முறையுமே இருதய நோய்களை கட்டுப்படுத்தும் கருவிகளாகும்.
எல்லா வகையான இருதய நோய்களுக்கும் அறிகுறிகள் தெளிவாக புலப்படுவதில்லை. அப்படியிருக்க, நம் இதயம் ஆரோக்கியமாக துடிக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது? குறிப்பிட்ட இடைவெளிகளில் உடற் பரிசோதனை செய்வதன் மூலம் இருதய நோய் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

இதயத்தில் நோய் இருந்தால் நெஞ்சில் வலி ஏற்படுவது தான் ஒரே அறிகுறி எனும் தவறாக புரிதல் பலரிடம் உள்ளது. இருதய நோய் உள்ளவர்களுக்கு நெஞ்சு வலி மட்டுமல்லாது மேலும் பல அறிகுறிகள் தென்படலாம். அவை கீழ்வருமாறு:
சீரற்ற இதயத்துடிப்பு
நெஞ்சில் அசௌகரியம்
உடலின் இடப்புறத்தில் தோன்றும் வலி
மயக்க உணர்வு
தலைசுற்றல்
தொண்டை அல்லது தாடை வலி
உடற்சோர்வு
தீராத இருமல்
கால்கள், கணுக்கால், அடிவயிறு ஆகியவற்றில் வீக்கம்
குறட்டை மற்றும் தூக்கக் கோளாறு

துவக்கத்திலேயே கண்டறிந்தால் இருதய நோய்களை குணப்படுத்துவது எளிது. எனவே, இருதய நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். ஆரோக்கியமான உணவுடன் போதியளவு உடற்பயிற்சியும் மேற்கொண்டால் இதயம் நலமுடன் துடிக்கும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பயறு வகைகள் ஆகியவற்றை போதியளவு எடுத்துக்கொள்ள வேண்டும். கொழுப்புச்சத்து, சோடியம், இனிப்பு உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. சீரான உடல் எடை பேணுவதுடன், புகைப்பதை தவிர்த்து, மன இறுக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்தக் கொழுப்பு ஆகியவை இருதய நோய்களுக்கு வழிவகுக்கலாம் என்பதால் அவற்றை கட்டுக்குள் வைக்கவேண்டியது அவசியமாகும்.
- தாமதமாக தூங்குவதும், காலையில் அவசர அவசரமாக எழுந்து வேலைக்கு புறப்பட்டு செல்வதும் பலருடைய வாடிக்கையாக இருக்கிறது.
- போதிய தூக்கமின்மை காரணமாக உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்கள் உண்டாகக்கூடும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரவு தூங்க செல்வதற்கு முன்பு செல்போனிலும், சமூக ஊடகங்களிலும் பொழுதை போக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இரவு 10 மணியை கடந்த பின்பும் செல்போனில் மூழ்குபவர்களும் இருக்கிறார்கள்.
இரவு 11 மணியை தாண்டிய பிறகுதான் தூங்குவது பற்றி சிந்திக்கிறார்கள். அப்படி தாமதமாக தூங்குவதும், காலையில் அவசர அவசரமாக எழுந்து வேலைக்கு புறப்பட்டு செல்வதும் பலருடைய வாடிக்கையாக இருக்கிறது.
தினமும் இரவு 8 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், தினமும் 7-9 மணி நேரம் தூங்குவதற்கு பரிந்துரைக்கிறது. ஆனால் நிறைய பேர் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அது தொடர்ந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?

தூங்கும் நேரம் குறைவது நாளடைவில் தூக்கமின்மை பிரச்சினைக்கு வழிவகுக்கும். இதய ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும். போதிய தூக்கமின்மை காரணமாக உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்கள் உண்டாகக்கூடும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூக்கத்தின் போது உடல் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும். குறிப்பாக ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, ரத்த சர்க்கரை அளவுகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும்.
''உங்களுக்கு போதுமான தூக்கம் வராதபோது, உங்கள் உடல் அதிக மன அழுத்த ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அது ரத்த நாளங்களை சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க வைத்துவிடுகிறது. தூக்கத்தின் போது, உங்கள் இதயத் துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைகிறது. சுவாசம் சீராக நடப்பதும் உறுதிப்படுத்தப்படுகிறது.

இந்த செயல்முறை இதயம் மற்றும் ரத்த நாளங்கள் ஓய்வெடுக்கவும், அன்றைய நாளின் மன அழுத்தத்தில் இருந்து மீளவும் வழிவகை செய்கிறது. அதேவேளையில் உங்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்காவிட்டாலோ அல்லது ஆழ்ந்த தூக்கம் இல்லாவிட்டாலோ இதயம் மற்றும் ரத்த நாளங்கள் ஓய்வெடுக்க வாய்ப்பில்லாமல் போய்விடும். நாளடைவில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும். இதய அமைப்பை சேதப்படுத்தும்'' என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.
6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் வழக்கம் தொடர்ந்தால் இதய நோய் அபாயங்களுக்கு மட்டுமின்றி நீரிழிவு நோய்க்கும் வழிவகுத்துவிடும்.
- உலகில் அசைவ உணவுகளை விரும்பாதவர்களே இல்லை.
- மாட்டிறைச்சியில் அதிகளவு கொழுப்புகள் உள்ளன.
இன்றைய உலகில் அசைவ உணவுகளை விரும்பாதவர்களே இல்லை. அதை பற்றி சொன்னாலே நம் உள்ளத்தில் உற்சாகம் ஊறும், நாவிலும் எச்சில் ஊறும். அசைவ உணவுகளை அனைவரும் விரும்பி சாப்பிட்டாலும் கூட மாட்டு இறைச்சி குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. மாட்டு இறைச்சி சாப்பிடுவது நல்லது என்று ஒரு தரப்பினரும், இல்லை, அது கெடுதலானது என்று இன்னொரு பாதி மக்களும் கருதுகின்றனர்.
மாட்டுக் கறியில், புரோட்டீன் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் உள்ளன. அதேசமயம், கொலஸ்டிராலும் நிறைய உள்ளது. இதனால் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களில் 20 சதவீதத்தினர் இளம்வயதிலேயே மரணம் அடைகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தினமும் அல்லது அதிகமாக மாட்டிறைச்சி உட்கொண்டு வருபவர்களுக்கு இதயநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனென்றால் மாட்டிறைச்சியில் அதிகளவு கொழுப்புகள் உள்ளன. இதனால் தமணிகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைவதோடு அதன் வீரியமும் குறைந்து நாள்பட்ட நோய்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

மாட்டுறைச்சியில் உள்ள கார்சினோஜென் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. அளவுக்கு அதிகமாக மாட்டிறைச்சி உண்ணும் போது உடலில் கார்சினோஜென் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மாட்டிறைச்சியில் அதிகளவு கலோரிகள் உள்ளது. எனவே இதனை அதிகமாக உட்கொள்ளும் போது உடல் எடை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
எனவே மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு இதயநோய் மற்றும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதேசமயம் கோழிக்கறி மற்றும் மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாக உள்ளது என்று ஆயுவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க நாடுகளில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிடவர்களில் 13 சதவீதம் பேர் இதய பாதிப்பு மற்றும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி உள்ளனர். காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு (சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக்) போன்றவை ஆகும். இதுவே இதயநோய் பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன.
அதேசமயம் மாட்டிறைச்சிக்கு பதிலாக பருப்பு, மீன் போன்றவற்றை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்கிறது ஆய்வுகள்.
- ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
- அறுவை மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சை மிகுந்த பலன் அளிக்கும்.
நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் என்பது நுரையீரலில் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்த அழுத்தம் இயல்பை விட அதிகமாக இருக்கும் ஒரு நிலையாகும்.
நுரையீரலில் உள்ள ரத்தக்குழாய்கள் தடிமனாகி, அடைப்பு ஏற்பட்டு, அதன் பாதை குறுகுவதால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது. இது ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
நுரையீரலில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு கீழ்க்கண்டவை முக்கிய காரணங்களாகும்:-

இதய வால்வுகளின் (தடுக்கிதழ்) குறைபாடுகள், இடது பக்க ஏட்ரியம் மற்றும் வெண்ட்டிரிக்கிள் சார்ந்த இதய நோய்கள், காரணம் அறியப்படாமல் ஏற்படும் தான்தோன்றி நோய்கள் (முதல் நிலை நுரையீரல் ரத்த அழுத்தம்), மரபணு காரணங்கள், இதய செயலிழப்பு, பிறவி இதய குறைபாடுகள், நாள்பட்ட திரோம்போஎம்போலிக் நுரையீரல் உயர் ரத்த அழுத்தம், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (சி.ஓ.பி.டி),
தொற்று பாதிப்புகள் (ஹெச்.ஐ.வி), மருந்துகளின் பக்க விளைவுகள் (பசியை குறைக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் ஆம்பெடமைன்கள்), நுரையீரலில் ரத்த கட்டிகள் ஏற்பட்டு குருதியோட்டத்தை தடுக்கும் தக்கையடைப்பு நோய், கல்லீரலில் ஏற்படும் சிரோசிஸ் போன்ற பிரச்சனைகள், ஆட்டோ இம்யூன் நோய்கள் (தன்னுடல் தாக்குநோய்), உடல் பருமன், புகைப்பிடித்தல் பழக்கம், சர்க்கரை நோய்.

ஆரம்ப நிலையிலேயே நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்தை கண்டறிந்து மருத்துவரை கலந்தாலோசித்து மருந்துகளை உட்கொள்தல் அவசியம். இது பலன் தராவிட்டால், ஏட்ரியல் செப்டோஸ்டமி, நுரையீரல் மாற்று அறுவை மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சை மிகுந்த பலன் அளிக்கும்.
நுரையீரல் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்தல், தினமும் உடற்பயிற்சி செய்தல், உயரமான இடங்களைத் தவிர்த்தல், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்தல், புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழித்தல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்ற வேண்டும்.