search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாஹிப் அல் ஹசன்"

    • இந்திய அணிக்காக விராட் கோலி சாதித்தது நம்ப முடியாதவையாகும்.
    • அவருடைய நாட்டிற்கும் கிரிக்கெட்டிற்கும் விராட் கோலி போன்று மற்றொருவரால் செய்ய முடியும் என என்னால் நினைக்க முடியவில்லை.

    இந்தியா- வங்காளதேச அணிகள் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்திய நேரப்படி இன்று இரவு பலப்பரீட்சை நடத்துகின்றன. டி20 கிரிக்கெட் போட்டியை வரை இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. மேலும் வங்காளதேச அணிக்கெதிராக விராட் கோலி சிறப்பாக விளையாடியுள்ளார். சராசரி 90-க்கு மேல் வைத்துள்ளார்.

    இந்த நிலையில் வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஷாகி் அல் ஹசன் விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

    விராட் கோலி குறித்து ஷாகிப் அல் ஹசன் கூறியதாவது:-

    இந்திய அணிக்காக விராட் கோலி சாதித்தது நம்ப முடியாதவையாகும். தனி நபராக இந்திய அணிக்காக ஏராளமான வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளா்ர. அவருடைய நாட்டிற்கும் கிரிக்கெட்டிற்கும் விராட் கோலி போன்று மற்றொருவரால் செய்ய முடியும் என என்னால் நினைக்க முடியவில்லை.

    இவ்வாறு ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

    • முஸ்தாபிஜூர் ரஹ்மான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருவதால், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    • சாஹிப் அல் ஹன் கண் பிரச்சனை காரணமாக விளையாடாமல் இருக்கிறார். குணமடைய இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால் அவர் இடம் பெறவில்லை.

    ஜிம்பாப்வே அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக வங்காளதேசம் செல்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மே 3-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த நிலையில் முதல் மூன்று போட்டிக்கான வங்காளதேசம் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆல்-ரவுண்டர் சாஹிப் அல் ஹசன், வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மான் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

    சாஹிப் அல் ஹன் கண் பிரச்சனை காரணமாக விளையாடாமல் இருக்கிறார். குணமடைய இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால் அவர் இடம் பெறவில்லை. மேலும், சர்வதேச கிரிக்கெட்டிற்கு தயாராகும் வகையில் டாக்கா பிரீமியர் லீக்கில் விளையாட விரும்புகிறார். அவருக்குப் பதிலாக ஆஃபிஃப் ஹொசைன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    முஸ்தாபிஜூர் ரஹ்மான் ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக விளையாடி வருகிறது. அவர் மே 1-ந்தேதி பஞ்சாப் அணிக்கெதிராக விளையாடிய பின், சொந்த நாடு திரும்புகிறார். இருந்த போதிலும் அணியில் சேர்க்கப்படவில்லை.

    முஸ்தாபிஜூர் ரஹ்மான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருவதால், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என வங்காளதேசம் தெரிவித்துள்ளது.

    ×