search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இசை வெளியீட்டு விழா"

    • இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
    • இசை வெளியீட்டு விழாவில் பலர் ராயன் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டனர்.

    தனுஷ் அவரது ஐம்பவதாவது திரைப்படமான ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இசை வெளியீட்டு விழாவில், ஏ.ஆர் ரகுமான், துஷரா, காளிதாஸ் ஜெயராம், அபர்னா பாலமுரளி, செல்வராகவன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்,

    இசை வெளியீட்டு விழாவில் பலர் ராயன் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டனர். தனுஷ் அவர்களது இன்ஸிபிரேஷன் எனவும் அவரிடம் நிறைய விஷயத்தை கற்றுக் கொண்டோம் என நடிகர்கள் கூறினர். அதைத்தொடர்ந்து தனுஷ் இசை வெளியீட்டு விழாவில் பேசினார். அதில் அவர் ஏன் போயஸ் கார்டனில் வீடு வாங்கினார் என்ற காரணத்தை அவர் கூறினார்.

    சென்னை: நடிகர் தனுஷுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ரஜினிகாந்த் வீட்டில் மரியாதை கிடைக்கவில்லை என்கிற வெறியில் தான் அவர் போயஸ் கார்டனில் வீடு கட்டினார் என செய்யாறு பாலு உள்ளிட்ட பலர் வீடியோக்களில் பேசி வந்த நிலையில், அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் தனுச் பதிலளித்துள்ளார்.

    `தலைவர் வீட்டை பார்க்க வேண்டும் என போயஸ் கார்டனுக்கு சென்றேன். போலீஸ் அண்ணன்கள் சிலர் இருந்தனர். அவர்களிடம் கேட்டதற்கு அங்க தான் இருக்கு சைலன்ட்டா பார்த்து விட்டு போயிடணும்னு சொன்னாங்க, நானும் தலைவர் வீட்டை பார்த்து விட்டு சந்தோஷமாக திரும்பினால், அங்கே இன்னொரு வீட்டுக்கு முன் ஜே ஜேன்னு கூட்டம். அது யாரு வீடுன்னு கேட்டதற்கு ஜெயலலிதாம்மா வீடுன்னு சொன்னாங்க, அப்படியே வியந்து போய் விட்டேன். இந்த பக்கம் ரஜினி சார் வீடு, அந்த பக்கம் ஜெயலலிதாம்மா வீடு நடுவில் நம்ம வீடு கட்டினா எப்படி இருக்கும் என தனுஷ் சொல்வதற்கு முன்பாகவே ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து விட்டனர்.

    அதைத்தொடர்ந்து சினிமா பிரபலங்களுக்கு விவாகரத்து ஆனாலும் அதற்கு தனுஷ் தான் காரணம் என்கிற அளவுக்கு யூடியூபர்கள் பேச ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் " நான் யாருன்னு எனக்கு தெரியும், ன்னை படைச்ச அந்த சிவனுக்குத் தெரியும், என் அப்பா, அம்மாவுக்குத் தெரியும், என் பசங்களுக்குத் தெரியும், என் ரசிகர்களுக்குத் தெரியும்" என பேசி தனுஷ் அவரை பற்றி தவரான விமர்சனம் வைக்கும் பல நபர்கலின் வாயை அடைத்துள்ளார்.

    தனுஷ் பேசிய இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனுஷின் ஐம்பதாவது படமான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார்.
    • படம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

    தனுஷின் ஐம்பதாவது படமான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 6) சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்காக மிகப்பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்நிகழ்ச்சியில் தனுஷ், ஏ ஆர் ரகுமான், பிரகாஷ்ராஜ், சந்தீப் கிஷன், உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது பேசிய பிரகாஷ்ராஜ், "10 கிலோ சதை, 15 கிலோ எலும்பை வெச்சிட்டு துள்ளிக்கிட்டு இருக்கியேன்னு நான் ஒரு டயலாக் சொல்லுவேன். இன்னும் துள்ளிக்கிட்டு தான் இருக்காரு. அவரை பார்த்து எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு இப்போ ஒரு இயக்குனரா இருக்காருன்னு. அசுர வளர்ச்சி. அழகான வளர்ச்சி" என்று கலகலப்பாக பேசி தனுஷை பாராட்டினார்.

    துஷாரா விஜயன் பேசுகையில், "ராயன் படத்தில் நடித்த அனுபவத்தை வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியவில்லை. நிறைய திட்டு வாங்கி இருக்கேன். இது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு" என்று பேசினார்.

    காளிதாஸ் ஜெயராம், "நான் தனுஷ் சாரை ஒரு வழிகாட்டியாக பார்க்கிறேன். யாருக்கு தான் தனுஷ் சாரை பிடிக்காது" என்று பேசினார்.

    அபர்ணா பாலமுரளி பேசும்போது, "ராயன் திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். என்னை தேர்ந்தெடுத்ததற்கு தனுஷ் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தான் என் இன்ஸ்பிரேஷன்" என்று தெரிவித்தார்.

    அடுத்ததாக சந்தீப் கிஷன் பேசும் போது, "தனுஷ் அண்ணாவுடன் இது எனக்கு இரண்டாவது படம். அவர்தான் என் அண்ணா, என்னுடைய வழிகாட்டி. நான் கதை கேட்காமல் நடித்த முதல் படம் இதுதான். தனுஷ் அண்ணா எல்லோருக்கும் பிடித்தவர். அவர் ஒரு நல்ல மனிதர். அனைவருக்கும் அவர் ஒரு அடையாளம். அது வேறு நடிகராக இருந்திருந்தால் என்னுடைய கதாபாத்திரத்திற்கு இரட்டை வேடங்களில் நடித்திருக்கலாம். அது வலுவான கதாபாத்திரம். அதை தனுஷ் அண்ணா எனக்கு கொடுத்தார். லவ் யூ அண்ணா. என்னை நம்பியதற்கு நன்றி" என்று பேசினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தாரகை சினிமாஸ் தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் "அறம் செய்".
    • முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளது

    Thaaragai cinemas தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் "அறம் செய்". நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளது

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

    நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது....

    ,இந்தப்படம் கண்டிப்பாகச் சர்ச்சையில் சிக்குமெனத் தெரியும். முழுக்க முழுக்க அரசியலில் நடந்த உண்மை சம்பவங்களை எடுத்திருக்கிறார் ஆனால் போஸ்ட்ரில் இப்படத்தில் அரசியல் இல்லை எனப் பொய் சொல்லியிருக்கிறார்.

    நடிகர் ஜீவா பேசியதாவது...

    பாலு எஸ் வைத்தியநாதன் இந்தப்படத்தின் நாயகன் இயக்குநர் ஒன் மேன் ஆர்மி மாதிரி செயல்பட்டு தன் மனதிலிருந்ததை படமாக எடுத்துள்ளார். மிக இளகிய மனதுக்காரர் நல்ல மனிதர். ஹீரோயின் மேகாலி நல்ல நடிகை, நன்றாக டான்ஸ் ஆடியுள்ளார், அவருடன் எனக்கு சாங்க் இருக்கிறது எனச் சொல்லிவிட்டு பாலு சார் அவரே தனியாக போய் டான்ஸ் ஆடிவிட்டு வந்துவிட்டார். என்று நகைச்சுவையாக பேசியுள்ளனர்.

    யூடியூபில் டிரெண்டான திருச்சி சாதனா முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அரசியல் கருத்துகளை முன் வைக்கும் திரைப்படமாக அமைந்துள்ளது. Thaaragai cinemas பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்தை, ஸ்வேதா காசிராஜ் இணை தயாரிப்பு . செய்துள்ளார். விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.




     


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பொதுமக்கள் 120 ரூபாய் அல்லது 200 ரூபாய் கொடுத்து படம் பார்க்கின்றனர்.
    • நீங்க கொடுக்கிற டிக்கெட் பல குடும்பத்தை வாழ வைக்கும்.

    முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி என விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான பல படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஷாஜி சலீம் இயக்கத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லாந்தர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

    லாந்தர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய எம். எஸ். பாஸ்கர் படங்களை பார்த்து விட்டு பிடிக்கவில்லை என்றால் ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் நல்லா இல்லை என மற்றவர்களிடம் சொல்லக் கூடாது என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பொதுமக்கள் 120 ரூபாய் அல்லது 200 ரூபாய் கொடுத்து படம் பார்க்கின்றனர். அதை வைத்து யாரும் மாடமாளிகையோ கூட கோபுரமோ கட்டப் போறதில்லை என எம்.எஸ். பாஸ்கர் பேசியதும் அரங்கத்தில் இருந்தவர்களின் முகமே மாறிவிட்டன. சினிமாவில் பலர் கஷ்டப்பட்டு உழைக்கிறோம். நீங்க கொடுக்கிற டிக்கெட் பல குடும்பத்தை வாழ வைக்கும்.

    படம் பிடிக்கவில்லை என்றால், படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தியேட்டரில் இருந்து மொக்கை, யாரும் தியேட்டருக்கு வர வேண்டாம் என போட்டு படத்தை காலி பண்ணிடுறாங்க என பேசியுள்ளார். நல்ல படத்தை எடுக்க வேண்டும் என சினிமா கலைஞர்களுக்கு அறிவுரை வழங்காமல் படம் நல்லா இல்லை என விமர்சிக்கக் கூடாது என எம்.எஸ். பாஸ்கர் பேசுவது சரியல்ல என சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

    • 'இந்தியன் 2' திரைப்படம் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

    இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கமல் ஹாசன், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 'இந்தியன் 2' திரைப்படம் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப்குமார், சிம்பு மற்றும் பலர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர்.

    இசைவெளியீட்டு விழாவில் சிம்பு "கமல்ஹாசன் சார் தான் என்னோட ஸ்கிரீன் குரு, அவரோட தக் லைஃப் படத்துல் வேலை செய்றது ரொம்ப அதிர்ஷடமா நான் பாக்குறேன், நான் இந்தியன் 1 ஓட மிகப் பெரிய ரசிகன், இந்திய 2, இந்தியன் 3 அப்பறம் கேம் சேஞ்சர் படம் பன்ற ஷங்கர் சாருக்கு ஹாட்ஸ் ஆஃப்" என்று கூறினார்.

    பின் ரசிகர்களிடம் "மக்கள் எல்லாரும் என்னைய வெயிட் குறச்சிட்டாரு , டிரான்ஸ்ஃபார்ம் ஆயிட்டாரு எல்லாம் சொல்றாங்க ஆனா அதுக்கும் மேல இது ஆன்மிகம் சார்ந்த விஷயம், நம்ம கூட இருக்கறவங்க எல்லாரும் ஒரு நாள் நம்மல விட்டுட்டு போயிடுவாங்க, நம்ம முடி கூட கொஞ்ச நாளுல கொட்டிடும், ஆனா எப்பொழுதும் நம்ம கூட இருக்க ஒரே விஷயம் நம்ம உடம்புதான் அத நம்ம நல்லா பாத்துகணும்" என்று கூறினார்.

    பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சிம்பு பேசியதாது, 'தக் லைப்' படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் இங்கு வந்திருக்கிறேன். அடுத்து, 'எஸ்.டி.ஆர்.48' படமும் தொடங்கும். உலகிலேயே அதிக கஷ்டப்படும் ஆள் யார்னா அது உண்மையை வெளிப்படையாக பேசுகிறவர்கள்தான்.

    நானும் அதில் ஒருவன். மக்களவை தேர்தல் சமயத்தில் நான் படப்பிடிப்பில் இருந்தேன். சூட்டிங் கேன்சல் செய்துவிட்டு வரும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. ஆனால், ஓட்டுப் போட வராதது எனக்கு வருத்தம்தான். பின் தயாரிப்பாளர் சங்கம் எனக்கு ரெட் கார்டெல்லாம் தரவில்லை, அது எனக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் ஒரு சிறிய பிரச்சனை அதை நாங்கள் இப்பொழுது சரி ஆக்கிவிட்டோம்', என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
    • 'இந்தியன் 2'படத்தின் இசை வெளியீடு நேற்று மாலை 6 மணியளவில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைப்பெற்றது.

    சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தில் கமலுடன் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே அறிவித்திருந்தபடி 'இந்தியன் 2'படத்தின் இசை வெளியீடு நேற்று மாலை 6 மணியளவில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைப்பெற்றது.

    இவ்விழாவில் தமிழ் சினிமாவின் பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப்குமார், நடிகர் சிம்பு மற்றும் பலர் பங்கேற்றனர்.

     

    'இந்தியன் 2' படத்தில், பாரா, காலண்டர் சாங், நீளோற்பம், ஜகாஜகா, கம்பேக் இந்தியன், கதரல்ஸ் என மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இந்த விழாவில் படத்தின் பாடலான கம் பேக் இந்தியன் என்ற பாடலை அனிருத் லைவாக பாடினார்.

    அனிருத் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானை பாராட்டி பேசினார் " ஷங்கர் சார் ஸ்டைல சொல்லனும்னா சிக்ஸ்க்கு அப்பறம் செவென் டா.... ரஹ்மான் சார்க்கு அப்பறம் எவன் டா" என்று கூறினார்.

    சிம்பு விழாவில் " சிம்பு லேட்டா வந்துடாரு அப்படின்னு எல்லாரும் சொல்லுவாங்க, ஆனா நான் மணி சாரோட தக் லைஃப் படத்தோட ஷூட்டிங்ல இருந்துதான் வரேன்" என்று கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாரா, காலண்டர் சாங், நீளோற்பம், ஜகாஜகா, கம்பேக் இந்தியன், கதரல்ஸ் என மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன
    • லைகா நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது

    சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் கமலுடன் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே அறிவித்திருந்தபடி 'இந்தியன் 2'படத்தின் இசை வெளியீடு இன்று மாலை 6 மணியளவில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்வில் மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 'இந்தியன் 2' படத்தில், பாரா, காலண்டர் சாங், நீளோற்பம், ஜகாஜகா, கம்பேக் இந்தியன், கதரல்ஸ் என மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    இதில் பாரா, நீலோற்பம் ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு 'இந்தியன் 2' இசை வெளியீட்டு விழா தொடங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பே மதியம் 3 மணியளவில் 6 பாடல்களை உள்ளடக்கிய ஆல்பம் வெளியாகும் என்று லைகா நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இதனால் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு முன்னதாகவே ரசிகர்கள் பாடல்களுக்கு வைப் செய்யத் தொடங்கிவிடுவர் என்று தெரிகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது.
    • கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், நடிப்பையும் தாண்டி பின்னணிப் பாடகராகவும், பாடலாசிரியராகவும், ப. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராகவும் தன்னை நிரூபித்தவர் ஆவார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தாயரிக்கும் இப்படத்துக்கு ஏர்.ரகுமான் இசையமைக்கிறார்.

    இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன்,பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம் , சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    கடந்த மே 9 ஆம் தேதி இப்படத்தில் ஏர்.ஆர் ரகுமான் இசையில் தனுஷ் பாடிய 'அடங்காத அசுரன்' என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1 ஆம் தேதி பிரமாண்டமான நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த விழாவில் இதுவரை தனுஷை வைத்து படம் இயக்கிய இயக்குனர்களை அழைத்து கவுரவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ராயன் படம் ஜூன் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கோல்டன் ஸ்டூடியோஸ்- 23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா தயாரிக்கும் 'தி புரூப்' என்ற புதிய படத்தில் சாய் தன்ஷிகா தற்போது முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
    • இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது.

    பிரபல நடிகை சாய் தன்ஷிகா தமிழில் மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். மேலும் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்து உள்ளார்.

    இந்நிலையில் கோல்டன் ஸ்டூடியோஸ்- 23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா தயாரிக்கும் 'தி புரூப்' என்ற புதிய படத்தில் சாய் தன்ஷிகா தற்போது முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    'ஆக்ஷன்' படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குனர் ராதிகா மாஸ்டர் இயக்குகிறார். ரித்விகா, அசோக் ஆகியோரும் இந்த படத்தில் நடித்து உள்ளனர்.

    இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகி வருகிறது.இந்த படத்தின் முதல் பார்வை கடந்த மாதம் வெளியானது. அதைதொடர்ந்து படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. படத்தின் பணியாற்றிய அனைவரும் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர். யூகி சேது, இயக்குனர் மிஷ்கின், சினேகன், ரோபோ சங்கர் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

    அதில் பேசிய இயக்குனர் மிஷ்கின் கோயிலுக்கு போகாதீங்க தியேட்டருக்கு போங்க என பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இது பேசும் பொருளாகி வருகிறது. கோயிலுக்கு போனாலாவது மன் நிம்மதி கிடைக்கும், சமீபத்தில் வெளிவந்த தமிழ் படங்களை தியேட்டருக்கு சென்று பார்த்தால் பிபி தன் ஏறுகிறது என ட்ரோல் செய்து வருகின்றனர்.

    வீட்ல வெங்காயம் வெட்டிக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா, புருஷன் கூட சண்டை போட்டுக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா? புது டிரெஸ் போட்டு பர்ஃப்யூம் அடித்துக் கொண்டு காரில் ஜம்முன்னு தியேட்டருக்கு சென்று பாப்கார்ன் வாங்கிக் கொண்டு படத்தை அப்படி பார்க்க வேண்டும் என மிஷ்கின் சினிமாவை எப்படி பார்க்க வேண்டும் என பேசியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×