என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு வீரர்"

    • கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளமான பேர் நடராஜனுக்காக ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்
    • மே 25 - ந் தேதி வரை அணியை அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் உள்ளது.

    டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே "நடராஜன்" என்ற பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது.

    கிரிக்கெட் ரசிகர்கள் நடராஜனை ஏன் இப்போட்டியில் சேர்க்க வில்லை, தற்போது தேர்வுசெய்யப்பட்ட பவுலர்களை விடவா நடராஜன் மோசமாக பந்து வீசியுள்ளார் என்ற ஆதங்கம் குறித்து இணைய தளத்தில் அதிருப்தியை தெரிவித்து உள்ளனர்.




    இந்நிலையில் இது குறித்து முன்னாள் இந்திய அணி வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது :-

    டி20 உலகக்கோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகிய வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

    சரியாக செயல்படாத வீரர்கள் உலகக்கோப்பை போட்டிக்கு செல்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு வீரர்கள் மட்டும் 2 மடங்கு 'பெர்பாம்' செய்தாலும் இதில் தேர்வுசெய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டு உள்ளார்கள்". என பத்ரிநாத் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.




    மேலும் கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளமான பேர் நடராஜனுக்காக ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். மே 25 - ந் தேதி வரை அணியை அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் உள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

    ×