என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐடிஎப்சி வங்கி"

    • வாங்கிய கடனுக்கு இன்னும் 10 வாரங்கள் மட்டுமே தவனை உள்ளது.
    • வங்கி ஊழியர் கடன் தொகையை கட்ட சொல்வதற்காக பிரசாந்தை தொடர்புக் கொண்டுள்ளார்.

    சேலம் மாவட்டம், வாழப்பாடியை சேர்ந்த கூலித் தொழிலாளி பிரசாந்த் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஐடிஎப்சி வங்கியில், ரூ.35 ஆயிரம் கடன் தொகை பெற்றுள்ளார்.

    அவர், வாரந்தோறும் பணத்தை வட்டியுடன் சரியாக செலுத்தி வந்துள்ளார். அவரது மனைவி கவுரிக்கு உடல் நலம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த இரண்டு வாரங்களாக ரூ.770 தவனை தொகையை வங்கியில் செலுத்த முடியாமல் போயுள்ளது.

    வாங்கிய கடனுக்கு இன்னும் 10 வாரங்கள் மட்டுமே தவனையும் உள்ளது.

    இந்நிலையில், ஐடிஎப்சி வங்கியின் பெண் ஊழியர் சுபா என்பவர் நேற்று பிரசாந்தை தொடர்புக் கொண்டுள்ளார். பிரசாந்த் செல்போன் எடுக்கவில்லை. இதனால், பிரசாந்த் வீட்டிற்கு சென்ற சுபா வெகு நேரம் காத்திருந்த நிலையில், பணம் செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்லட்டும் என்று கவுரியை தன்னுடன் ஐடிஎப்சி வங்கிக்கு சுபா அழைத்துச் சென்றுள்ளார்.

    பின்னர், பிரசாந்த் நண்பரின் செல்போன் எண்ணை தொடர்புக் கொண்ட கவுரி விவரத்தை தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, நேற்று இரவு 7.30 மணியளவில் பணத்துடன் வங்கிக்கு விரைந்த பிரசாந்த் தவனை தொகையை செலுத்திவிட்டு மனைவியை மீட்டுள்ளார்.

    தனியார் வங்கி பெண் ஊழியர் சுபா, கூலித் தொழிலாளியிடம் அடாவடியாக கடனை வசூலித்து அத்துமீறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும், இந்த விவகாரம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    ×