search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோழிங்கநல்லூர்"

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி
    • பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்வி நியோகம் கொடுக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பல் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    எனவே நாளை வியாசர்பாடி, மாதவரம்: லெதர் எஸ்டேட், கே.கே.ஆர். டவுன்) கம்பன் நகர், முல்லி தெரு, தாமரை தெரு, ரோஜா தெரு, கணேஷ் நகர், ஸ்ரீ ஸ்ரீநீவாச பொருமாள் கோவில் தெரு பழனியப்பா நகர், மேத்தா நகர், பத்மாவதி நகர், மாத்தூர், 1-வது மெயின் ரோடு எம்.எம்.டி.எ. 1 பகுதி, எடைமா நகர், ஆவின் குடியி ருப்புகள், மெட்ரோ வாட்டர் பம்பு ஹவுஸ், சி.எம்.பி.டி.டி., தாத்தாங்கு ளம் ரோடு, தாரபந்த் அப்பார்ட்மென்ட், தேவராஜ் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

    சித்தாலபாக்கம்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சி.பி.ஒ.எ. காலனி, வீனஸ் காலனி, எம்.ஜீ.ஆர். தெரு.

    எம்பாசி: (பெரும்பாக்கம்) எம்பாசி அப்பார்மெண்ட் பகுதி.

    கிருஷ்ணா நகர்: (பள்ளிக்கரணை) ராஜலட்சுமி நகர், துலக்காணத்தம்மன் கோயில் தெரு, வள்ளாள பாரி நகர், ரங்கநாதபுரம்.

    கோவிலம்பாக்கம்: மேடவாக்கம் மெயின் ரோடு, வெள்ளக்கல், நன்மங்களம் ஒரு பகுதி.

    மாடம்பாக்கம்: வேங்கை வாசல் மெயின் ரோடு, நகர், புனித ஜான்ஸ் தெரு, தாமஸ் தெரு.

    அடையார்: வேளச்சேரி பைபாஸ் ரோடு, மெட்ரோ வாட்டர், முதல் விஜயா நகர் பஸ் நிலையம் வரை, வெங்கடேஷ்வரா நகர், தேவி கருமாரியம்மன் நகர்.

    தி.நகர்: தணிக்காசலம் ரோடு, தியாகராய ரோடு, பனகல்பார்க், சுப்பிரமணிய விஜயராகவாச்சாரி தெரு, கிரியப்பா சாலை பகுதி, உஸ்மான்சாலை பகுதி, ராமசந்திரன் சாலை, தெற்கு போக் சாலை, சிங்காரவேலன் தெரு, இந்தி பிரசார சபா தெரு ஒரு பகுதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்வி நியோகம் கொடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தற்பொழுது அடிக்கிற வெயிலில் சென்னை மெட்ரோவில் மக்கள் செல்ல அதிகம் விரும்புகின்றனர்.
    • இதுகுறித்து தற்பொழுது சென்னை மெட்ரோ நிறுவனம் அவர்களது எக்ஸ் தளத்தில் அறிக்கையை பதிவிட்டுள்ளனர்.

    சென்னை மெட்ரொ இரயில் நிறுவனம் சென்னையில் மக்களுக்கு போக்குவரத்து வசதியை 2015 ஆம் ஆண்டில் இருந்து சேவையை வழங்கி வருகிறது.

    மெட்ரோ தொடங்கிய ஆரம்பத்தில் மக்கள் மெட்ரோ சேவையை குறைவாகவே பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாட்கள் கடந்து செல்ல செல்ல இச்சூழல் மாறிக்கொண்டே வருகிறது. தற்பொழுது அடிக்கிற வெயிலில் சென்னை மெட்ரோவில் மக்கள் செல்ல அதிகம் விரும்புகின்றனர். பொதுமக்களுக்கு அவர்கள் செல்லும் இடத்திற்கு வேகமாகவும் டிராஃபிக்கில் சிக்காமல் செல்ல முடிகிறது.

    இதுகுறித்து தற்பொழுது சென்னை மெட்ரோ நிறுவனம் அவர்களது எக்ஸ் தளத்தில் அறிக்கையை பதிவிட்டுள்ளனர்.

    அந்த வகையில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ இரயில்களில் 80 லட்ச பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: 01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.02.2024 முதல் 29.02.2024 வரை மொத்தம் 86,15,008 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.03.2024 முதல் 31.03.2024 வரை மொத்தம் 86,82,457 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.04.2024 முதல் 30.04.2024 வரை மொத்தம் 80,87,712 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி. இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகப்பட்சமாக கடந்த மாதம் 8 ஆம் தேதி 3.24 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    தற்பொழுது சென்னை மெட்ரோ சேவை மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும், கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையிலான கட்டமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    ×