என் மலர்
நீங்கள் தேடியது "சிறப்பு புலனாய்வு குழு"
- தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
- பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .
இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெர்மனி தப்பிச் சென்ற அவர் நாடு திரும்பியதும் கைது செய்ய போலீஸ் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.
இதனையடுத்து பிரிஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
ரேவண்ணா நேரில் ஆஜராகவில்லை என்றால் அவர் கைது செய்யப்படுவார் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ரேவண்ணா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "விசாரணையில் கலந்து கொள்ள நான் பெங்களூரில் இல்லாததால், எனது வழக்கறிஞர் மூலம் பெங்களூரு சிஐடிக்கு தகவல் தெரிவித்தேன். உண்மை விரைவில் வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக பிரஜ்வல் ரேவண்ணா ஒரு வாரம் அவகாசம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
- கர்நாடகாவில் இந்த பலாத்கார குற்றவாளியை மேடையில் வைத்து கொண்டு அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டார்
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .
இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெர்மனி தப்பிச் சென்ற அவர் நாடு திரும்பியதும் கைது செய்ய போலீஸ் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, "ரேவண்ணா பல்லாயிரக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கர்நாடகாவில் இந்த பலாத்கார குற்றவாளியை மேடையில் வைத்து கொண்டு அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டார்.
இந்த பாவத்திற்காக நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் பாஜகவின் ஒவ்வொரு தலைவரும் நாட்டின் ஒவ்வொரு பெண்ணிடமும் கைகூப்பி தலைகுனிந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.
மிக மோசமான பாலியல் குற்றவாளிகள் இந்தியாவில் இருந்து தப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் - இதுதான் மோடியின் உத்தரவாதம்!" என்று தெரிவித்துள்ளார்.
- சிறப்பு புலனாய்வு குழு போலீசாருடன் ஆலோசனை.
- பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக `புளூ கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்க பரிந்துரை.
பாலியல் புகாரில் சிக்கி உள்ள பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. விசாரணைக்கு ஆஜராக கூறி ஏற்கனவே ஒருமுறை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
ஆனால் ஜெர்மனியில் இருப்பதால் தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று சமூக வலைதள பதிவு மூலம் தகவல் தெரிவித்த பிரஜ்வல் ரேவண்ணா, அவரது வக்கீல் மூலம் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக 7 நாட்கள் கால அவகாசம் கேட்டார். அதை ஏற்காத சிறப்பு புலனாய்வு குழு போலீசார், தேடப்படும் நபராக பிரஜ்வல் ரேவண்ணாவை அறிவித்து லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கினர்.
இவ்வழக்கில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா, சிறப்பு புலனாய்வு குழு போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சி.பி.ஐ. 'புளூ கார்னர்' நோட்டீஸ் வழங்கினால் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் பிரஜ்வல் ரேவண்ணா எங்கு இருக்கிறார் மற்றும் அவரது நடவடிக்கைகள் குறித்து எளிதில் தெரிந்து கொள்ள முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக 'புளூ கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்க மத்திய உளவுத்துறை (இன்டர்போல்) உடன் நேரடி தொடர்பில் உள்ள சி.பி.ஐ.யிடம் கர்நாடக அரசு மூலம் பரிந்துரைத்துள்ளனர். இதன் மூலம் பிரஜ்வல் ரேவண்ணாவை வெளிநாட்டில் வைத்து கைது செய்து அழைத்து வர நடவடிக்கை எடுக்க திட்டமிட்டனர்.
இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா துபாயில் இருந்து இன்று பிற்பகல் பெங்களூரில் உள்ள தேவனஹள்ளி விமான நிலையத்துக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு படையினர் பெங்களூர் தேவனஹள்ளி விமான நிலையத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு வைத்து அவரை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
- ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது.
- நீதிமன்ற ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு:
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (வயது 33) தற்போது நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது.
ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண், ம.ஜ.த. முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உள்பட 3 பெண்கள் தனித்தனியாக பாலியல் பலாத்கார புகார் அளித்தனர். அதன் பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் பலாத்காரம், பெண்கள் வன்கொடுமை உள்ளிளட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி ஓடினார். இதையடுத்து கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) போலீசார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை களை எடுத்தனர். வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு புளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. நோட்டீஸ் அனுப்பியும் ஜெர்மனியில் இருந்து அவர் திரும்பி வரவில்லை.
இதனால் அவரது டிப்ளோமேடிக் பாஸ்போர்ட்ைட ரத்து செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியது. இதையடுத்து அவர் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஜெர்மனி முனிச் நகரிலிருந்து புறப்பட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1.30 மணி அளவில் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் வந்தார். அங்கு காத்திருந்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை, குடியேற்ற அதிகாரிகள் உதவியுடன் பெண் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்தனர்.
இதையடுத்து சுமார் 6 மணி நேரம் விசாரணைக்கு பிறகு பெங்களூரு அரசு போரிங் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது.
மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு பிரஜ்வல் ரேவண்ணா பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பெங்களூரு நகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தின் 4-வது மாடியில் உள்ள 42-வது மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு (ஏசிஎம்எம்) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி கே.என்சிவகுமாரிடம் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். சிறப்பு புலனாய்வு குழுவினரின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.க்கு வருகிற 6-ந்தேதி வரை 6 நாட்கள் எஸ்ஐடி காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து அவரை சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்திற்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார், பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யிடம் பாலியல் வழக்கு தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டனர். போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீசு அனுப்பியும் நீங்கள் ஏன் கண்டுகொள்ள வில்லை?, விசாரணைக்கு ஆஜராக வேண்டாம் என யாராவது சொன்னார்கள்? பெண்களை கடத்தி பாலியல் பலத்காரம் செய்தீர்களா?, ஆபாச வீடியோ எடுத்த சம்பவத்தில் உடந்தையாக இருந்தவர்கள் யார்? பாலியல் பலாத்காரம் பென்டிரைவில் பதிவேற்றம் செய்தது யார்? என பல்வேறு கேள்விகள் கேட்டனர்.
ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் தெரிவக்க பிரஜ்வல் ரேவண்ணா நேரத்தை கடத்தி வருகிறார். அவர் அளித்த வாக்குமூலத்தை வீடியோவில் போலீசார் பதிவு செய்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பெண்களை மதிக்காமல் மிரட்டி பலாத்காரம் செய்த பிரஜ்வலுக்கு பெண் சக்தியையும், அதிகாரத்தையும், உணர்த்தும் விதத்தில் பெண் அதிகாரிகளை வைத்தே அவரை கைது செய்துள்ளோம்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் சொல்லும் பதிலை பொறுத்து ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்படும். விசாரணை முடிந்ததும் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்றார்.
பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணை கடத்திய வழக்கில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ. கடந்த 4-ந்தேதி இரவில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
- பின்னால் உள்ள காரணத்தை கண்டறியுமாறு அதிகாரிகளிடம் பிரஜ்வல் கோரிக்கை.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் ஹாசன் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருந்து பெங்களூரு திரும்பி வந்ததும் அவரை கைது செய்து கடந்த 31-ந்தேதி முதல் 6 நாட்கள் வரை தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.
பெங்களூரு அரண்மனைசாலையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகத்தில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரித்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் இரவு அவரிடம் பலாத்கார வழக்கு தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை போலீசார் எழுப்பினர். அப்போது அவர் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. வெளியே வந்தவுடன் பார்த்துக் கொள்கிறேன் என அதிகாரிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இன்று 3-வது நாளாக போலீசார் மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணாவிடம் விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணை பற்றி உங்களுக்கு தெரியுமா? என கேள்வி கேட்டனர். அதற்கு பிரஜ்வல் ரேவண்ணா புகார் அளித்த பெண் யாரென்று எனக்கு தெரியாது. நான் அவரை பார்த்ததில்லை. நான் பெங்களூர், ஹாசன், டெல்லியில் இருக்கிறேன். அவர் யாரென்று தெரியவில்லை என்றார்.
உங்களது மற்ற செல்போன்கள் எங்கே? என கேட்டபோது நான் பயன்படுத்தும் செல்போன் இப்போது உங்களிடம் உள்ளது. அதை தவிர வேறு செல்போன் இல்லை. மற்றொரு செல்போன் தொலைந்து போயிருக்கலாம். நான் அந்த செல்போனை பயன்படு த்தவில்லை.
மேலும் அரசியல் சதி காரணமாக என் மீது பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நான் எந்த தவறும் செய்யவில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு பலாத்கார புகாருக்கு பின்னால் உள்ள காரணத்தை கண்டறியுமாறு அதிகாரிகளிடம் பிரஜ்வல் கோரிக்கை விடுத்தார்.
மேலும் சித்தரிக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை வெளியிட்டு என்னை சிக்க வைத்துள்ளனர். இந்த வீடியோக்களை வெளியிட்டு அரசியல் கட்சியினர் விளம்பரப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோக்களின் பின்னணியில் இருக்கும் கார்த்திக் உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்தால் உண்மை நிலை தெரியவரும் என பிரஜ்வல் கூறியதாக தெரிகிறது.
அவர் கூறியபடி கார்த்திக் என்பவரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் பெண்கள் பலத்காரம் செய்யப்பட்ட ஹாசன் பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று ஆதராங்களை திரட்ட உள்ளனர்.
முதல் நாள் விசாரணையில் எதிர்ப்பார்த்தபடி பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அவர் அச்சுறுத்தும் வகையில் பேசினார். இது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 2 நாட்கள் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் குற்றம் நடந்த இடமான ஹாசனுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது என சிறப்பு புலனாய்வு குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 31-ந் தேதி கைது செய்தனர்.
- வருகிற 18-ந் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா மீது பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 3 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். இதையடுத்து அவரை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரம் காட்டி வந்தனர். அதன் பேரில் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 31-ந் தேதி கைது செய்தனர்.
இதையடுத்து பலாத்கார வழக்குகள் குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். 2 முறை போலீஸ் காவலில் எடுத்து பிரஜ்வலிடம் விசாரணை நடத்தினர். பின்னர் காவல் முடிவடைந்த நிலையில் அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் பெங்களூருவில் சைபர் கிரைம் போலீசில் பதிவான பாலியல் வழக்கு தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழுவினர் காவலில் எடுக்க முடிவு செய்தனர். இதற்காக அவரை மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் நேற்று போலீசார் ஆஜர் படுத்தினர்.
அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, பிரஜ்வல் ரேவண்ணாவை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுமதி வழங்கினார்.
அதன்படி வருகிற 18-ந்தேதி வரை பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.
- ஆந்திர மாநிலத்தில் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும்.
- மக்களின் உணர்வுகளுடன் விளையாட யாருக்கும் உரிமை இல்லை.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சை ஆந்திர மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அரசு அதிகாரிகள், மந்திரிகள் மற்றும் இந்து மத நிபுணர்களுடன் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆந்திர மாநிலத்தில் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும். திருப்பதியில் நடந்த கலப்பட நெய் முறைகேடு அராஜகம் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்க ஆந்திர மாநில ஐ.ஜி. மற்றும் உயர் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படுகிறது.
இந்த குழுவினர் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்.
எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என உறுதி அளிக்கிறேன்.
மக்களின் உணர்வுகளுடன் விளையாட யாருக்கும் உரிமை இல்லை. ஒவ்வொரு கோவிலிலும் மரபுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் மதிக்கப்பட வேண்டும். இதில் எந்த சமரசமும் இல்லை.
ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பெண்களுக்கு மரியாதை கிடைப்பதை உறுதி செய்வோம்.
அனைத்து கோவில்கள், மசூதிகள் தேவாலயங்களில் மத நல்லிணக்கம் பேணப்பட வேண்டும். எந்த மதத்தின் ஆலயமும் அந்தந்த மதத்தை சார்ந்ததாக இருக்க வேண்டும்.
கடந்த ஆட்சியில் திருப்பதி கோவிலில் பிற மதத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான குழு ஒரு சூதாட்டம் போல தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் முறைகேடுகள் நடந்துள்ளது.
ஆட்சி மன்றங்களில் குற்றவாளிகள் சமூக விரோதி சக்திகள் இல்லை என்பதை உறுதி செய்வோம். தேவைப்பட்டால் கடுமையான சட்டம் கொண்டு வருவோம்.
திருப்பதி கோவில் வளர்ச்சி குறித்து மத்திய மந்திரிகளுடன் கலந்து ஆலோசித்து ஆய்வு செய்தோம். கடவுள் நம்பிக்கை உள்ள ஒவ்வொரு பக்தருக்கும் இனி எந்த பிரச்சனையும் வராது என்று உறுதி அளிக்கிறேன். திருப்பதி லட்டுகள் தயாரிப்பில் கடந்த ஆட்சியில் செய்த தவறுக்காக தவிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆபாச வீடியோக்களை இவர் யார் யாருடன் எல்லாம் பகிர்ந்து கொண்டார் என்பது பற்றிய விவரங்களையும் போலீசார் சேகரிக்க உள்ளனர்.
- ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் படையினர் விசாரணை நடத்தி உள்ளனர்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு படித்து வந்த என்ஜினீயரிங் மாணவி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், முதல் தகவல் அறிக்கையும் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் 3 பெண் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர் பாலியல் வழக்கு விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். அண்ணாநகர் துணை கமிஷனர் சினேக பிரியா, ஆவடி துணைக் கமிஷனர் ஜெய் மன் ஜமால், சேலம் துணை கமிஷனர் பிருந்தா ஆகியோர் இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.
அண்ணா பல்கலைக் கழகத்திற்கு நேரில் சென்று மாணவியிடமும், பல்கலைக் கழக நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டி உள்ள போலீசார் நேற்று கோட்டூர்புரத்தில் உள்ள பாலியல் குற்றவாளி ஞானசேகரனின் வீட்டுக்குச் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது வீட்டில் இருந்த பல்வேறு சொத்து ஆவணங்கள், லேப்டாப், பெரிய கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஞானசேகரின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் குவிந்து கிடந்தன. இந்த நிலையில் லேப்டாப்பிலும் அதே போன்று ஆபாச வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இது தொடர்பாக லேப் டாப்பை ஆய்வு செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த ஆய்வின் போது ஞானசேகரன் லேப்டாப் மூலமாக யார் யாருடன்? இணையதளத்தில் தொடர்பில் இருந்தார் என்கிற விவரங்களும் தெரியவரும்.
ஆபாச வீடியோக்களை இவர் யார் யாருடன் எல்லாம் பகிர்ந்து கொண்டார் என்பது பற்றிய விவரங்களையும் போலீசார் சேகரிக்க உள்ளனர்.
பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ள ஞானசேகரன் என்ஜினீயரிங் மாணவியை போன்று வேறு மாணவிகள் யாரையாவது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தினாரா? என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஞானசேகரனை பொறுத்தவரையில் ஆபாச படங்களை பார்த்து ரசிப்பதுடன் உல்லாசமாக இருக்கும் பெண்களையும் ஆபாசமாக வீடியோ எடுத்து ரசிக்கும் பழக்கம் இருப்பவர் என்கிற தகவல் ஏற்கனவே வெளியாகி உள்ளது.
இதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஞானசேகரனின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆபாச வீடியோக்களில் குடும்ப பெண்கள் மற்றும் மாணவிகள் யாரும் இருக்கிறார்களா என்பது பற்றிய விசாரணையும் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் படையினர் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது பாலியல் அத்துமீறல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர்.
பாலியல் விவகாரத்தில் இன்னொரு நபருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பாகவும் அவரிடம் விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை சேகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் போலீசில் அளித்த புகாரில் ஞானசேகரனின் செல்போனில் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த சாருடனும் நீ உல்லாசமாக இருக்க வேண்டும் என்று ஞானசேகரன் கூறியதாக வெளியான தகவலால் 'யார் அந்த சார்?' என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாகவும் போலீஸ் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதன் முடிவில் ஞானசேகரன் விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறப்பு புலனாய்வு குழுவினர் 7 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர்.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை வருகிற 7-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, சிறப்பு புலனாய்வு குழுவினர் 7 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ஞானசேகரனின் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சுப்ரீம் கோர்ட் உத்தரவின்பேரில் சி.பி.ஐ. 5 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்தது.
- திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுகளில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் புதிய சுதந்திரமான சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவிட்டது
அதன்படி, சி.பி.ஐ. கடந்த ஆண்டு அக்டோபரில் 5 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்தது. இந்தக் குழு தனது விசாரணையை நடத்தி வந்தது.
இந்நிலையில், திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வழங்கிய தனியார் பால் நிறுவனங்களில் தொடர்புடைய விபின் ஜெயின், பொமில் ஜெயின்,
அபூர்வ சால்டா மற்றும் ராஜசேகரன் ஆகிய 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.