என் மலர்
நீங்கள் தேடியது "பணம் வரவு"
- மென்பொருள் கோளாறால் பானுவின் வங்கிக் கணக்கில் பெரும் தொகை காணப்பட்டது.
- தவறை சரிசெய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.
உத்தரபிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு அவரது வங்கிக் கணக்கில் ரூ.9,900 கோடி பணம் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி மாநிலத்தை சேர்ந்த பானு பிரகாஷ் பரோடா உபி வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அவரது வங்கிக் கணக்கில் சமீபத்தில் ரூ.99,99,94,95,999.99 (ரூ.99 பில்லியன் 99 கோடியே 94 லட்சத்து 95 ஆயிரத்து 999) இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பானு பிரகாஷ், உடனே வங்கி கிளைக்கு விரைந்து இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். வங்கி அதிகாரிகள் இது குறித்து ஆராய்ந்தனர்.
அப்போது, பிரகாஷின் வங்கி கணக்கு கிசான் கிரெடிட் கார்டு (கேசிசி) கடன் கணக்கு என்றும், அது செயல்படாத சொத்தாக (என்பிஏ) மாறியது என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், மென்பொருள் கோளாறால் பானுவின் வங்கிக் கணக்கில் பெரும் தொகை காணப்பட்டது என்றும் பின்னர் தெரியவந்தது.
தவறை சரிசெய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தொகையை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் வங்க மேலாளர் தெரிவித்துள்ளார்.
- வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
- நமது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு நாமே காரணமாக இருக்க கூடாது
இன்றைய காலக்கட்டத்தில் கடன் வாங்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். மாதம் மாதம் வாங்கும் சம்பளம் கடன் அடைக்கவே சரியாக இருக்கிறது. கடன் பிரச்சனையை நினைத்து கவலை படாதே நாளே இருக்காது. தண்ணீரை வைத்து கடன் பிரச்சனையை சரி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்
வாஸ்து படி குளியலறையில் காலி வாளி வைத்தால் பணத்தட்டுப்பாடு ஏற்படும். இதனுடன், நிதி சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
குளியலறையில் வைக்கும் வாலி நீல நிறமாக இருக்க வேண்டும். அந்த வாலி அழுக்கு மற்றும் பாசி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அழுக்கோடு இருந்தால் வீட்டில் நிம்மதி இருக்காது. வீட்டின் குளியலறையில் இருக்கும் பாத்திரம் நீலம் நிறமாக இருந்தால் வீட்டில் மகிழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும்.
கடன் பிரச்சனையை சரிசெய்வது எப்படி?
உங்களுக்கு கடன் தொல்லைகள் இருந்தால் இரவு தூங்குவதற்கு முன் நீல நிற வாலியில் தண்ணீர் பிடித்து வையுங்கள். பிடித்து வைத்த தண்ணீரை கொண்டு காலையில் குளிக்கும் இடத்தை சுத்தம் செய்யுங்கள். அந்த தண்ணீரில் சுத்தம் மட்டும் தான் செய்ய வேண்டும். குளிக்க கூடாது. குளியலறையில் பிடித்த தண்ணீரை மூடாமல் வைக்க வேண்டும். இப்படி வைப்பதனால் பணவரவு அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
இதேபோல் நாம் அன்றாடம் சமைக்கும் பாத்திரங்கள் வேலைபளு காரணமாக கழுவாமல் அப்படியே வைத்து விடுவேம் இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் பண பிரச்சனை அதிகரிக்கும். இரவு எந்த வேலை எப்படி இருந்தாலும் இரவே உணவு சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைத்திடுங்கள், அழுக்கோடு வைத்து காலையில் எழுந்து கழுவினால் பண பிரச்சனையும், தெய்வ அருளும் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்காமல் போகும்.
ஆகவே நமது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு நாமே காரணமாக இருக்க கூடாது ஆகவே மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி கடன் பிரச்சினையில் இருந்து விடுபடுங்கள்.