search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிசி மாவு"

    • கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
    • போண்டா பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து விடவும்.

    வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுவையான கிரிஸ்பியான போண்டா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    அரிசி மாவு - 2 கப்

    சீரகம் - 1 ஸ்பூன்

    பூண்டு - 5 பல்

    இஞ்சி - 1 துண்டு

    வேர்கடலை - 50 கிராம்

    பச்சைமிளகாய் - 3

    வெங்காயம் - 1

    கறிவேப்பிலை - சிறிதளவு

    தயிர் - 1 கப்

    எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    • ஒரு மிக்ஸியில் சீரகம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், வேர்கடலை ஆகியவற்றை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    • ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போடவும்.

    • இதனுடன் அரைத்து வைத்திருந்த பொருட்களை போட்டு கைகளால் நன்கு பிசையவும்.

    • பின்னர் வெங்காயம், தயிர், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு போண்டா பதத்திற்கு பிசைந்து எடுத்து வைக்கவும்.

    • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றவும்.

    • எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் தயாரித்து வைத்திருந்த போண்டாவை எடுத்து சிறு சிறு உருண்டையாக கில்லி போடவும்.

    • அடுப்பை மீடியம் தீயில் வைத்து சமைக்கவும்.

    • போண்டா பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து விடவும்.

    • இதோ கிரிஸ்பியான அரிசி மாவு போண்டா ரெடி.

    • இதனுடன் நீங்கள் விருப்பப்பட்ட சட்னி, அல்லது சாஸ் வைத்து சாப்பிடலாம்.

    • குழந்தைகள் மிகவு விரும்பி சாப்பிடுவார்கள்...
    • நாம் செய்வதற்கும் ஈஸியாக இருக்கும்...

    கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறையில் இருப்பார்கள் அவர்களுக்கு வீட்டிலே மிக பெரிய பொருள் செலவு இல்லாமல் ஈசியாக ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க....

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு- 4

    ரவை- 2 ஸ்பூன்

    மைதா மாவு- 2 ஸ்பூன்

    அரிசி மாவு- 3 ஸ்பூன்

    மிளகாய் தூள்- 1 ஸ்பூன்

    மிளகு- 1 1/2 ஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    கறிவேப்பிலை- தேவையான அளவு

    கொத்தமல்லி- தேவையான அளவு


    செய்முறை:

    முதலில் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள்.

    இப்போது வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை தோல் நீக்கி உறித்து ஒரு பவுலில் சேர்த்து நன்றாக மசித்து கொள்ளுங்கள்.

    அடுத்து பவுலில் உள்ள கிழங்குடன் மிளகு, ரவை, மைதா மற்றும் அரிசி மாவு என இவை அனைத்தினையும் நன்றாக 2 நிமிடம் வரை பிசைந்து கொள்ளுங்கள்.

    2 நிமிடம் கழித்து பவுலில் உள்ள பொருளுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

    கடைசியாக கையில் சிறிதளவு எண்ணெயினை தடவி கொண்டு தயார் செய்து வைத்துள்ள உருளைகிழங்கை கலவையை கையில் தொட்டு நீளமாக ஊருட்டி வைத்து விடுங்கள்.

    இதனை தொடர்ந்து கடாயில் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்த பிறகு அதில் செய்து வைத்துள்ளதை போட்டு பொன் நிறமாக வரும் வரை பொரிய விட்டு எடுக்க வேண்டியது தான்.

    அம்புட்டு தான் அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் ரெடி....

    குழந்தைகள் மிகவு விரும்பி சாப்பிடுவார்கள்... நாம் செய்வதற்கும் ஈஸியாக இருக்கும்.

    ×