என் மலர்
நீங்கள் தேடியது "தென் தமிழகம்"
- கேரளா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது.
- பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரளா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 'கள்ளக்கடல்' என்ற சிவப்பு எச்சரிக்கையை தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (ஐ.என்.சி.ஓ.ஐ.எஸ்) மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை விடுத்துள்ளன.
கடலில் எந்தவித அறிகுறிகளும் இன்றி திடீரென பலத்த காற்று வீசுவதோடு, கடல் கொந்தளிப்பும் ஏற்படுவதையே கள்ளக்கடல்' எச்சரிக்கையாக விடுக்கப்படுகிறது. இந்திய முன்னெச்சரிக்கை மையங்கள் முதன் முறையாக இந்த சொற்றொடரை பயன்படுத்தி தற்போது சிவப்பு எச்சரிக்கையை விடுத்து உள்ளன. சனிக்கிழமை அதிகாலை 2.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி வரை கேரளா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்களும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அபாய பகுதியில் இருந்து மக்கள் விலகியிருக்குமாறும் கடல் கொந்தளிப்பால் படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதமடைவதைத் தடுக்கும் வகையில், படகுகளுக்கு போதிய இடைவெளிவிட்டு நிறுத்துமாறும் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரிக்கும்.
- குமரிக்கடல், கடலோரப்பகுதிகளில் 3ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், தென் தமிழகத்தில் சில பகுதிகளிலும் இன்று தொடங்கியுள்ளது.
இதன் எதிரொலியால், தமிழகத்தில் வரும் 1, 2, 3ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 1ம் தேதி மற்றும் 2ம் தேதிகளில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 3ம் தேதி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல், கடலோரப்பகுதிகளில் 3ம் தேதி வரை 55 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும், அதுவரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
- 23ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் 25ம் தேதியில் இருந்து மழை படிப்படியாக அதிகரிக்கும்.
- 24, 25ம் தேதி தமிழ்நாட்டில் அதிக மழைப்பொழிவு இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் இன்று மிக கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காலை முதல் தொடர்ந்து பங்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
23ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் 25ம் தேதியில் இருந்து மழை படிப்படியாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு தெற்கு பகுதியில் காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது.
இருப்பினும் ரெட் அலர்ட் எச்சரிக்கை இன்று நள்ளிரவு வரை மட்டுமே பொருந்தும் என வானிலை ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
24, 25ம் தேதி தமிழ்நாட்டில் அதிக மழைப்பொழிவு இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருவாரூர், நாகை, காரைக்காலுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- தென் தமிழகத்தில் இருந்து சென்னை பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரெயில்களில் கூட்டம் மிக அதிகமாக அலைமோதுகிறது.
- புதிய ரெயில்கள் தேவை என்று கோரிக்கையும் மத்திய அரசின் பார்வைக்கு பலமுறை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் தனது வலைத்தளப் பகுதியில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழகத்தின் ரெயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்கவில்லை எனவும், மின் மயமாக்கல், அகல ரயில் பாதை, தென் தமிழகத்தின் ரயில் நிலையங்களின் தரம் மேம்படுத்துதல் மற்றும் நவீனமயமாக்கல், தென் தமிழகத்தின் நகரங்களை இணைக்கும் வகையில் மெமு ரெயில் சேவைகள், மக்கள் தேவைக்கு ஏற்ப அதிக ரெயில் சேவைகள் போன்ற ரெயில் பயணிகளின் நீண்ட நாள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளேன்.
கடந்த பல வருடங்களாக ரெயில்வே திட்டங்களுக்கான நிதிகளை ஒதுக்குவதில் தென் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
போதிய நிதி இல்லாத காரணத்தாலும், சிறப்பான செயல் திட்டம் இல்லாத காரணத்தாலும் பல ரெயில் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான வழித்தடம் மற்றும் திண்டுக்கல் முதல் மதுரை வரையான வழித்தடம் ஆகியவற்றில் ரெயில்வே பாதைகள் மின்மயம் ஆக்க வேண்டும் என்று கோரிக்கை நிலுவையில் உள்ளது. மேலும் அகல பாதை ரெயில் தட வேலையும் நிறைவேறாமல் உள்ளது.
தென் தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்களான மதுரை, கன்னியாகுமரி போன்ற நிலையங்கள் நவீனமயமாக்கல் மற்றும் தரம் உயர்த்தும் பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருகிறது.
தென் தமிழகத்தில் இருந்து சென்னை பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரெயில்களில் கூட்டம் மிக அதிகமாக அலைமோதுகிறது.
இதை தவிர்க்க புதிய ரெயில்கள் தேவை என்று கோரிக்கையும் மத்திய அரசின் பார்வைக்கு பலமுறை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
ரெயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் அமைக்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் இருந்த போதிலும் பல்வேறு காரணங்களை கூறி ரெயில்வே நிர்வாகம் இதை தவிர்த்து வருகிறது.
மேலும், இதற்கான பணிகள் நடைபெறும் இடங்களில் ஆமை வேகத்தில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. தென் தமிழகத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் மெமு ரெயில்களை இயக்க வேண்டும் என்றும் நீண்ட நாளாக கோரி வருகிறோம்.
இந்த நீண்ட நாள் மக்கள் தேவைகளை பாராளுமன்றத்தில் நேரம் ஒதுக்கி விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.