என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் விமல்"

    • நடிகர் விமல் அடுத்ததாக அப்துல் மஜித் இயக்கத்தில் `கரம் மசாலா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது.

    நடிகர் விமல் அடுத்ததாக அப்துல் மஜித் இயக்கத்தில் `கரம் மசாலா' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது.

    இப்படம் ஒரு குடும்ப பொழுதுபோக்கான காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. மேலும் படத்தில் சம்பிகா, ராஜேந்திரன், எம்.எஸ் பாஸ்கர், ஜான் விஜய், ஸ்ரீனிவாசன், ரவி மரியா, சாம்ஸ் ,நமோ நாராயணன் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தின் ஒளிப்பதிவை கே கோகுல் மேற்கொள்ள. பைஜு ஜேகம் படத்திற்கு இசையமைத்துள்ளார். கரம் மசாலா படத்தை அப்துல் மஜித் தயாரித்துள்ளார். திரைப்படம் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது என படக்குழு அறிவித்துள்ளது.

    விமல் சமீபத்தில் நடித்து வெளியான ஓம் காளி ஜெய் காளி வெப் தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • விமலில் 34- வது திரைப்படமாக பரமசிவன் பாத்திமா படத்தில் நடித்துள்ளார்.
    • படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது

    விமலில் 34- வது திரைப்படமாக பரமசிவன் ஃபாதிமா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இசக்கி கர்வண்னன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் குடிமகன், பெட்டிக்கடை மற்றும் பகிரி ஆகிய திரைப்படங்களை இயக்கியவராவார்.

    இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் ஒரு மலைக்கிராமத்தில் இரு மதத்தினரால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசக்கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது.

    இரு வேறு மதத்தை சேர்ந்த விமல் மற்றும் சாயாதேவி காதலிக்கின்றனர். மேலும் மலைப்பகுதியில் ஒவ்வொரு மதத்திற்கு என தனி கிராமம் இருக்கின்றனர். இவர்களுக்கு நடுவே மத கலவரம் ஏற்ப்பட்டு வருகிறது. இம்மாதிரியான காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. டிரெய்லர் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    விமலுக்கு ஜோடியாக சாயாதேவி நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ் பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி, அதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விமல் அடுத்ததாக ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் ஒரு புதிய வெப் தொடரில் நடித்துள்ளார்.
    • இந்நிலையில் தொடரின் டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

    பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விமல். அதைத்தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சார் மற்றும் போகுமிடம் வெகுதூரமில்லை திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் விமல் அடுத்ததாக ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் ஒரு புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடருக்கு ஓம் காளி ஜெய் காளி என தலைப்பிட்டுள்ளனர்.

    ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான விலங்கு வெப் தொடருக்கு பின் விமல் நடிக்கும் வெப் தொடராகும். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசரை ஜியோ ஹாட்ஸ்டார் சமீபத்தில் வெளியிட்டது. இத்தொடரில் குவீன்ஸி, புகழ், கஞ்சா கறுப்பு, பாவ்னி ரெட்டி, கிரண், திவ்யா துரைசாமி, ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் தொடரின் டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. இத்தொடர் வரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    டிரெய்லர் காட்சிகளில் விமல் ஒரு ஆக்ஷன் ஹீரோ அவதாரத்தை எடுத்துள்ளார். விமல் ஒரு எம்.எல்.ஏ வை கொன்றுவிடுகிறார். இதனால் எம்.எல் ஏ க்கு நெருக்கமாக இருக்கும் 4 நபர்கள் விமலை கொல்ல வேண்டும் என தேடிவருகின்றனர். இதனால் விமல் வனதேசம் என்ற ஊருக்கு செல்கிறார். இதுப்போன்ற காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. தொடரைக்குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. விலங்கு வெப் தொடரை தொடர்ந்து இத்தொடரும் வெற்றி பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விமல் மா.பொ.சி. எனும் படத்திலும் நடித்துள்ளார்.
    • படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    விமல் நடிக்கும் 'போகுமிடம் வெகுதூரமில்லை' ஃபர்ஸ்ட்-லுக் வெளியானது. பசங்க, களவாணி திரைப்படம் மூலம் மக்களை கவர்ந்தார் நடிகர் விமல்.

    தொடர்ந்து தூங்கா நகரம், வாகை சூடவா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஆரம்ப காலகட்டத்தில் கில்லி, கிரீடம் போன்ற திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்த விமல், பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'பசங்க' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

    மீனாட்சி சுந்தரம் என்ற கதாபாத்திரத்தில் விமல் நடித்த அப்படம் அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இது சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.

    விமல் நடித்த வாகை சூடவா திரைப்படமும் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. கடந்த 20 ஆண்டுகளில் தேசிய விருது பெற்ற படங்களில் அதிகம் நடித்த ஒரே தமிழ் நடிகர் விமல். அவர் நேரடியாக தேசிய விருதை பெறவில்லை என்றாலும் அவர் நடித்த படங்கள் மதிப்புமிக்க தேசிய விருதை பெற்றுள்ளது.

    கிட்டதட்ட 3 ஆண்டுகள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்துவந்த விமல், அதன் பிறகு வெப் சீரிசிலும் நடித்தார். இதற்கிடையில் நடிகர் விமல், போஸ் வெங்கட் இயக்கும் மா.பொ.சி. எனும் படத்திலும் நடித்துள்ளார்.

    இதனையடுத்து, விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில் `போகுமிடம் வெகுதூரமில்லை'என்ற திரைப்படம் உருவாகிறது. மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விமல் சொன்னபடி கோபியிடம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
    • சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.

    நடிகர் விமல் நாயகனாக நடித்து, தயாரித்து வெளியான "மன்னர் வகையறா" திரைப்படத்திற்கு அரசு பிலிம்ஸ் கோபி என்பவர் ரூ.5 கோடி கடனாக கொடுத்திருந்தார்.

    படம் வெளியாகும் சமயத்தில் வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறிய விமல் சொன்னபடி கோபியிடம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

    இதனால், கோபி கடந்த 2020ம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார்.

    இதனை மழுங்கடிப்பதற்காகவும், பணம் கொடுக்காமல் தப்பிப்பதற்காகவும் கோபி, சிங்காரவேலன் ஆகியோர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி புகாரை நடிகர் விமல் அளித்தார்.

    இந்நிலையில் விமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டு, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த விசாரணயின் முடிவில் விமல் மற்றும் கோபிக்கு இடையே சமரசம் ஒப்பந்தம் ஏற்பட்டு, 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 3 கோடியை ஓராண்டு காலத்திற்குள் திருப்பித்தருவதாக விமல் சமாதான ஒப்பந்தம் செய்து கொடுத்தார்.

    ஓராண்டு கடந்தும் பணம் தராததால் 2022-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கோபி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "கோபியிடம் உள்ள ஆவணங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ரூ.3 கோடியை 18 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.

    • கடனை திருப்பி செலுத்தாததால் 2020-ம் ஆண்டு நடிகர் விமல் மீது காசோலை மோசடி வழக்கை பைனான்சியர் கோபி தொடர்ந்தார்.
    • கோபி தரப்பிலும் சிங்காரவேலன் தரப்பிலும் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

    நடிகர் விமல் நாயகனாக நடித்து, தயாரித்த 'மன்னர் வகையறா' என்ற படத்திற்கு பைனான்சியர் கோபி என்பவர் ரூ.5 கோடி கடன் கொடுத்திருந்தார். பட வெளியீட்டின்போது நடிகர் விமலால் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் படங்களில் நடித்தும், வேறு படங்களை தயாரித்து அதிலிருந்து வரும் லாபத்திலிருந்தும் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதாக 2018-ம் ஆண்டு உத்தரவாதம் நடிகர் விமல் அளித்திருந்தார். ஆனால் சொன்னபடி கடனை திருப்பி செலுத்தாததால் 2020-ம் ஆண்டு நடிகர் விமல் மீது காசோலை மோசடி வழக்கை பைனான்சியர் கோபி தொடர்ந்தார்.

    வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் தப்பிப்பதற்காக குறுக்கு வழியில் இறங்கிய நடிகர் விமல் கடன் கொடுத்த கோபி, கடனுக்கு பரிந்துரை செய்த கோபியின் நண்பரும் 'லிங்கா' பட விநியோகஸ்தருமான சிங்காரவேலன் மற்றும் சிங்காரவேலனின் மேலாளர் விக்னேஷ் ஆகியோர் கூட்டு சதி செய்து தன்னை ஏமாற்றி தன் வங்கிக் கணக்கிலிருந்து தனக்கே தெரியாமல் ரூபாய் இரண்டு கோடியை எடுத்து விட்டதாக கூறி 2021-ம் ஆண்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல் அதிகார வர்க்கத்தினரின் மூலம் அழுத்தத்தையும் கொடுத்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந்தேதி சிங்காரவேலன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். கோபி மற்றும் விக்னேஷ் உயர்நீதிமன்றத்தை அணுகி முன் ஜாமீன் பெற்று கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பினர். அதன் பிறகு 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் தங்கள் மீது ஆதாரமற்ற பொய்யான வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதனை விசாரித்த நீதியரசர் சதீஷ்குமார் காவல்துறையினர் இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால், 2023-ம் ஆண்டு வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்னேஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    மேற்கண்ட வழக்கை விசாரித்த நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் இரண்டு மாதங்களுக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதன் பின்னரும் வழக்கின் விசாரணையில் எந்தவித முன்னேற்றம் இல்லாததால் 2024-ம் ஆண்டு விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நேரில் ஆஜரான காவல்துறை தரப்பு இரண்டு வாரங்களுக்குள் தீர விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதாக உத்தரவாதம் அளித்தது.

    அதன் பின்னர் இந்த வழக்கில் வேகம் காட்டிய காவல்துறை சம்பந்தப்பட்டவர்களை அழைத்து நீதிமன்ற அறிவுறுத்தல் அடிப்படையில் நேர்மையான முறையில் விசாரணை மேற்கொண்டது. கோபி தரப்பிலும் சிங்காரவேலன் தரப்பிலும் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

    ஆவணங்களின் அடிப்படையில் கோபி, சிங்காரவேலன் மற்றும் விக்னேஷ் மீது நடிகர் விமல் கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றத்திற்கான முகாந்திரம் எதுவும் இல்லை எனவும், ஆதாரங்கள் எதையும் நடிகர் விமல் சமர்பிக்காத காரணத்தினாலும், மேற்படி வழக்கை மேல் விசாரணை ஏதுமின்றி முடித்து கொள்வதாக கூறி நீதிமன்றத்தில் விருகம்பாக்கம் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்தது.

    இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் ஆய்வாளர் மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டுள்ளது.

    இதன் மூலம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் தப்பிப்பதற்காக பைனான்சியர் கோபி மற்றும் விநியோகஸ்தர் சிங்காரவேலன் ஆகியோர் மீது நடிகர் விமல் கொடுத்திருப்பது பொய் புகார் என்பது நிரூபணமாகியுள்ளது.

    • படக்குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை கண்டுகளித்தனர்.
    • `சார்’ திரைப்படம் வெற்றியடைந்தது மிகுந்த மகிழ்ச்சி.

    திருப்பூர்:

    நடிகர் விமல் நடித்த 'சார்' திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கிற்கு வந்த நடிகர் விமல், இயக்குனர் போஸ் வெங்கட் உள்ளிட்ட படக் குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை கண்டுகளித்தனர்.


    பின்னர் கேக் வெட்டி படத்தின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். இதனைத்தொடர்ந்து நடிகர் விமல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    `சார்' திரைப்படம் வெற்றியடைந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சிறிய திரைப்படங்கள் வெற்றி பெறுவது திரைத்துறையை மேலும் ஊக்குவிக்கும். ஓடிடி, திரையரங்கு என்பவை வெவ்வேறானவை. இரண்டும் திரைத்துறைக்கு மிகுந்த ஊக்கத்தை வழங்குகிறது.

    திரையரங்குகள் மூலம் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களின் ஆதரவுகளை பெற்று கொண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது.

    விஜய் மாநாட்டிற்கு விஷால் செல்வேன் என கூறியது வரவேற்கத்தக்க விஷயம். எனக்கு அந்த நேரத்தில் படப்பிடிப்பு இருக்கும் காரணத்தால் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    இயக்குனர் போஸ் வெங்கட் கூறுகையில், `சிறிய திரைப்படங்கள் வெற்றி பெற நாட்கள் தேவைப்படுகிறது. ஆனால் முதல் 3 நாட்கள் மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கு அடுத்த நாட்கள் திரையரங்குகளால் பொறுமை காக்க முடியாத நிலையில் நல்ல படங்களும் திரையரங்கை விட்டு வெளியேறுகிறது.

    ஆனால் லப்பர் பந்து, சார் ஆகிய படங்களுக்கு பொதுமக்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சியை தருகிறது. வார இறுதி நாட்கள் தவிர்த்து அடுத்தடுத்த நாட்களிலும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று படம் வெற்றி அடைந்திருக்கிறது. பொது மக்களின் நல்ல விமர்சனம் காரணமாக படம் வெற்றி அடைந்திருக்கிறது' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் கடந்த மாதம் சார் திரைப்படம் வெளியானது.
    • விமலில் 34- வது திரைப்படமாக பரமசிவன் ஃபாதிமா படத்தில் நடித்துள்ளார்.

    போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் கடந்த மாதம் சார் திரைப்படம் வெளியானது.இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் விமல் அடுத்ததாக தனது 35 வது திரைப்படமாக பெல்லாடோனா என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    விமலில் 34- வது திரைப்படமாக பரமசிவன் ஃபாதிமா படத்தில்  நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று விஜய் சேதுபதி அவரது எக்ஸ் பக்கதில் வெளியிட்டார். இப்படத்தை இசக்கி கர்வண்னன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் குடிமகன், பெட்டிக்கடை மற்றும் பகிரி ஆகிய திரைப்படங்களை இயக்கியவராவார்.

    படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இரு மதத்தினருக்கும் உள்ள வேறுபாடை சுட்டிக்காட்டுவது போல் காட்சிகள் அமைந்துள்ளது. இப்படம் ஒரு மலைக்கிராமத்தில் இரு மதத்தினரால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசக்கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது.

    விமலுக்கு ஜோடியாக சாயாதேவி நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ் பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி, அதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சார் படம் அக்டோபர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
    • கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் சிறப்பான படமாக இப்படம் உருவாகியுள்ளது.

    சிறந்த நடிகராக அறியப்பட்ட போஸ் வெங்கட் 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கியதன் மூலம் சிறந்த இயக்குநராகவும் அறியப்பட்டார். இதைத் தொடர்ந்து 'சார்' என்ற படத்தை இயக்கினார். இதில் விமல் நாயகனாகவும் சாயாதேவி நாயகியாகவும் நடித்திருந்தனர். இவர்களுடன் சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன், நடிகை ரமா உள்ளிட்டோரும் நடித்து இருந்தனர். வில்லன் கதாபாத்திரத்தில் சிராஜ் நடித்து இருந்தார்.

    இனியன் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு, ஶ்ரீஜித் சாரங் எடிட்டிங் செய்ய, சித்து குமார் இசையமைக்க மற்றும் கலை பணிகளை பாரதி ஆகியோர் செய்திருந்தனர்..

    எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் (SSS Pictures) சார்பில் சிராஜ்.எஸ் தயாரிக்க, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம் வெளியிட்டது.

    இந்த படம் அக்டோபர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு பரம்பரையின் அர்ப்பணிப்பை அழகான பாடமாக உணர்த்தியது.

    இப்படத்தை பத்திரிகையாளர்கள் பெரிதளவில் பாராட்டினர். மேலும் மக்களிடையே இந்த படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்தன.

    மேலும் 'நாம் தமிழர் கட்சி' சீமான் மற்றும் 'விடுதலை சிறுத்தைகள் கட்சி' திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த படத்தை பார்த்து பாராட்டி இருந்தனர். குறிப்பாக கல்வியால் தான் எளிய மக்கள் மேம்பட முடியும் என்பதை பேசுகின்ற ஒரு திரைப்படம் என வாழ்த்தினர்.

    இந்த நிலையில் இந்த படம் தற்போது அமேசான் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் பார்க்காத பலரும் தற்போது ஓடிடி தளங்களில் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விமல்.
    • விமல் அடுத்ததாக ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் ஒரு புதிய வெப் தொடரில் நடித்துள்ளார்.

    பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விமல். அதைத்தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சார் மற்றும் போகுமிடம் வெகுதூரமில்லை திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் விமல் அடுத்ததாக ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் ஒரு புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடருக்கு ஓம் காளி ஜெய் காளி என தலைப்பிட்டுள்ளனர். ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான விலங்கு வெப் தொடருக்கு பின் விமல் நடிக்கும் வெப் தொடராகும். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசரை ஜியோ ஹாட்ஸ்டாஅர் வெளியிட்டுள்ளது. இத்தொடரில் குவீன்ஸி, புகஸ், கஞ்சா கறுப்பு, பாவ்னி ரெட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    டீசரில் விமல் கடவுள் வேஷம் கட்டி ஆடுவது போன்ற காட்சிகளில் மிரட்டியுள்ளார். இத்தொடரின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இத்தொடர் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×