search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ப்ளூ கார்னர் நோட்டீஸ்"

    • போலீசார் பிரஜ்வல் ரேவண்ணா தேடப்படும் நபராக அறிவித்து உள்ளனர்.
    • எங்களது குடும்பத்தினரின் தொலைபேசிகளை அரசு ஒட்டு கேட்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதை அடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    ஆபாச வீடியோ குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் பிரஜ்வல் ரேவண்ணா தேடப்படும் நபராக அறிவித்து உள்ளனர். மேலும் அவரை கைது செய்ய கோர்ட்டு பிடிவாரண்டும் பிறப்பித்தது. ஆனால் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் உள்ளார் என்று தெரியாமல் விசாரணை அதிகாரிகள் உள்ளனர்.

    இதற்கிடையே மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி, பிரஜ்வலுக்கு வேண்டுகோள் விடுத்து கூறியதாவது:-

    எனது சகோதரர் ரேவண்ணா மற்றும் அவரது குடும்பத்தினர் செய்யும் தொழில் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தொடர்பான புகாரில் தவறு செய்யவில்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும். எனவே அவர் உடனடியாக இந்தியாவுக்கு திரும்பி வந்து சிறப்பு புலனாய்வு குழு முன்பு நேரில் ஆஜர்ஆகி குடும்ப மானத்தை காப்பாற்ற வேண்டும். மேலும் எங்களது குடும்பத்தினரின் தொலைபேசிகளை அரசு ஒட்டு கேட்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

    குமாரசாமியின் இந்த குற்றச்சாட்டுக்கு கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே பிரஜ்வலின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய சிறப்பு விசாரணை குழுவினர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் தேவராஜ கவுடா கைது செய்யப்பட்டார்.
    • பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தும் பெங்களூருவில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச படம் வெளியான விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. இந்த வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள பிரஜ்வலை கைது செய்ய சர்வதேச அளவில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பிரஜ்வல் ஆபாச வீடியோவை வெளியிட்டது தொடர்பாக அவரது முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் பா.ஜ.க. பிரமுகர் வக்கீல் தேவராஜ கவுடா ஆகியோர் மீது சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் தேவராஜ கவுடா கைது செய்யப்பட்டார். இதற்கிடையே ஆபாச படங்கள் வெளியான இணையதளங்கள் குறித்த பட்டியலை சேகரித்து அவற்றை நீக்க சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இந்த ஆபாச படங்கள் இருந்தால் அழிக்கவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

    இந்த நிலையில் பிரஜ்வல் ஆபாச வீடியோ வெளியானது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் 18 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பா.ஜ.க. மாநில பொதுசெயலாளர் பிரீதம் கவுடா என்பவரது வீட்டில் நடத்திய சோதனையில் 7 பென் டிரைவ்கள், 6 ஹார்ட்டு டிஸ்க்குகள், 4 லேப் டாப்கள், 3 டெஸ்க் டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தும் பெங்களூருவில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பென் டிரைவ் மற்றும் லேப் டாப்புகள் பிரஜ்வல் வழக்குடன் தொடர்புடையதா? இல்லையா? என்ற அறிக்கை வந்தபின்பு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிரஜ்வல் கர்நாடகாவில் யார், யாருடன் தொடர்பில் இருந்து வருகிறார் என்றும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • மத்திய அரசுக்கு கர்நாடக மாநில அரசு இ- மெயில் வாயிலாக கடிதம் எழுதியுள்ளது.
    • தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ்.

    கர்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஹாசன் தொகுதியில்பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்டார்.

    தேர்தல் முடிந்ததும் அவர் ஜெர்மனி சென்றுவிட்டார். அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவரை தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் அறிவிப்பை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு கர்நாடக மாநில அரசு இ- மெயில் வாயிலாக கடிதம் எழுதியிருந்தது.

    மேலும் அதில், குற்றவாளி குறித்த தகவல்களை அனைத்து நாடுகளுக்கும் தெரிவிக்கும் வகையில், ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட வலியுறுத்தப்பட்டது.

    இந்நிலையில், பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கியிருப்பதாக சிபிஐ, கர்நாடக சிறப்பு புலனாய்வு அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளது.

    பிரஜ்வால் ரேவண்ணா இருந்தால் தெரிவிக்குமாறு இன்டர்போலில் உள்ள 196 நாடுகளுக்கு தகவல் அனுப்பப்பட்டு இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. 

    • மத்திய அரசுக்கு கர்நாடக மாநில அரசு இ- மெயில் வாயிலாக கடிதம் எழுதியுள்ளது.
    • தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ்.

    கர்நாடகத்தில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஹாசன் தொகுதியில்பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்டார்.

    தேர்தல் முடிந்ததும் அவர் ஜெர்மனி சென்றுவிட்டார். அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவரை தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் அறிவிப்பை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு கர்நாடக மாநில அரசு இ- மெயில் வாயிலாக கடிதம் எழுதியுள்ளது.

    மேலும் அதில், குற்றவாளி குறித்த தகவல்களை அனைத்து நாடுகளுக்கும் தெரிவிக்கும் வகையில், ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட வலியுறுத்தப்பட்டுள்ளது.

    முன்ஜாமின் கோரி பிரஜ்வல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, கர்நாடகாவில் மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றத்தில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    ×