search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளிர்ச்சி"

    • பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
    • தென் மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக கன மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக பல இடங்களில் மழை பெய்து வருவதால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆண்டு தோறும் மார்ச் முதல் ஜூன் வரையான கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பது வழக்கம். குறிப்பாக கத்திரி வெயிலின் போது வெப்பத்தின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்.

    அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கம் முதலே தமிழகத்தில் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட 4-5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருந்ததுடன், வெப்ப அலையும் வீசியது. குறிப்பாக ஈரோடு, பரமத்திவேலூர் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் 111 டிகிரி பாரஹீட் வரை வெயில் கட்டெரித்தது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

    கடந்த 4-ந்தேதி முதல் கத்திரி வெயில் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மாறாக தற்போது பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் வெப்ப தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது.

    நேற்றைய நிலவரப்படி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட குறைவாக இருந்தது. குறிப்பாக திருத்தணியில் 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இது இயல்பை விட 3 டிகிரி செல்சியல் குறைவு. அதே போல் ஈரோட்டில் 97 டிகிரியும், பரமத்திவேலூரில் 93 டிகிரியும் வெப்பம் பதிவானது. இது இயல்பை விட 1.6 டிகிரி செல்சியஸ் குறைவு. இதற்கிடையே சென்னை மீனம்பாக்கத்தில் 95 டிகிரி, நுங்கம்பாக்கத்தில் 92 டிகிரி வெப்பம் பதிவானது. இது இயல்பை விட சுமார் 2.7 டிகிரி செல்சியஸ் குறைவு.

    தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) முதல் 23-ந்தேதி வரை வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட குறைவாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சிலருக்கு தொண்டையில் உள்ள ரத்த நாளங்கள் பாதிப்புக்குள்ளாகும்.
    • கார்னியல் நரம்பின் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படும்.

    கோடை காலத்தில் பலரும் குளிர்ச்சியான உணவுகள் மற்றும் குளிர் பானங்களை ருசிப்பதற்கு தொடங்கிவிடுவார்கள். கடுமையான வெப்பத்தில் இருந்து உடலை காப்பதற்கு குளிர்சாதன பெட்டியில் இருக்கும் ஐஸ்கட்டிகளை தண்ணீரில் போட்டு பருகுவார்கள்.

    தண்ணீர் பாட்டில்களை குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து அதனை குளிர்ச்சியடைய வைத்து அந்த நீரை பருகவும் செய்வார்கள். அத்தகைய ஐஸ் நீரை பருகுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து பார்ப்போம்.


    ஐஸ் நீரை அதிகமாக குடிப்பது உடலுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தும். குறிப்பாக செரிமான மண்டலம் பாதிக்கப்படலாம். இதனால் வயிற்று வலியும் ஏற்படலாம். சிலருக்கு தொண்டையில் உள்ள ரத்த நாளங்கள் பாதிப்புக்குள்ளாகும். அதன் காரணமாக தொண்டைப்புண், எரிச்சல் ஏற்படக்கூடும்.

    ஐஸ் நீரை குடிக்கும்போது முதுகு தண்டுவட பகுதியிலுள்ள பல நரம்புகள் குளிர்ச்சியடையும். அதன் காரணமாக மூளையின் செயல்பாடு பாதிப்படையும். அது தலைவலியாக வெளிப்படும். அதிலும் ஒற்றைத்தலைவலி பிரச்சினை கொண்டவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள். அடிக்கடி சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    கோடையில் தினமும் ஐஸ் நீரை குடித்து வந்தால் தொண்டையில் வீக்கம் மற்றும் அசவுகரியம் ஏற்படும். சாப்பிட்ட பிறகு ஐஸ் கட்டி கலந்த குளிர்ந்த நீரை குடித்தால் தொண்டையில் சளி படிந்துவிடும். அடிக்கடி சளி, காய்ச்சல், ஒவ்வாமை பிரச்சினை கொண்டவர்களாக இருந்தால் நிலைமையை மோசமாக்கும்.


    ஐஸ் நீரை அதிகமாக உட்கொண்டால் இதயத் துடிப்பு குறையும். கார்னியல் நரம்பின் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படும். இதுதான் இதயத் துடிப்பை ஒழுங்குபடுத்தும் தன்மை கொண்ட நரம்பு மண்டலத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது.

    ஐஸ் நீரை அடிக்கடி உட்கொள்ளும் போது பற்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சிலருக்கு பற்கள் குளிர்ச்சியடைவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். எந்த பொருளையும் மென்று உட்கொள்வதற்கு கடினமான நிலைமையை உருவாக்கும். பற்களின் எனாமலை அரித்து, அவற்றை அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றும். குளிர்ச்சியாக எந்த பொருளை உட்கொண்டாலும் பல் கூச்சம், பல் குளிர்ச்சி அடைவது போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.

    ×