search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் டி20 உலகக்கோப்பை"

    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்துடன் அக்டோபர் 4-ந் தேதி மோதுகிறது.
    • அக்டோபர் 15-ந் தேதியுடன் லீக் சுற்று முடிகிறது.

    துபாய்:

    ஐ.சி.சி. பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இங்கிலாந்து கோப்பையை வென்றது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    கடைசியாக கடந்த வருடம் தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் பெற்றது. இதுவரை 8 போட்டி தொடர் நடைபெற்றுள்ளது. இதில் ஆஸ்திரேலியா 6 முறை உலக கோப்பையை வென்றுள்ளது. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தலா 1 தடவை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.

    9-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை வங்காளதேசத்தில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. பாதுகாப்பு காரணமாக இந்த போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டது. அக்டோபர் 3-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை அங்குள்ள துபாய், ஷார்ஜாவில் போட்டி நடைபெறுகிறது.

    இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.

    இந்த நிலையில் மகளிர் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்துடன் அக்டோபர் 4-ந் தேதி மோதுகிறது. பாகிஸ்தானை அக்டோபர் 6-ந் தேதி சந்திக்கிறது. இலங்கையுடன் 9-ந் தேதியும், ஆஸ்திரேலியாவுடன் 13-ந் தேதியும் மோதுகிறது.

    20 ஓவர் உலக கோப்பையின் தொடக்க ஆட்டங்களில் வங்காளதேசம்-ஸ்காட்லாந்து, பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன. அக்டோபர் 15-ந் தேதியுடன் லீக் சுற்று முடிகிறது.

    17-ந் தேதி முதல் அரை இறுதி துபாயிலும், 18-ந் தேதி 2-வது அரை இறுதி ஷார்ஜாவிலும் நடக்கிறது. இறுதிப் போட்டி அக்டோபர் 20-ந் தேதி துபாயில் நடைபெறுகிறது. அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு மாற்று தினம் (ரிசர்வ் டே) ஒதுக்கப்பட்டுள்ளது.

    • 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது.
    • இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன.

    துபாய்:

    9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் 3-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது.

    இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 2 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

    இந்நிலையில் இந்த தொடருக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன. இந்த தொடரில் பங்கேற்க உள்ள அணிகள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவுகளில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் சுற்றில் மோதும். அதன் முடிவில் அந்த பிரிவுகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். இறுதிப்போட்டி அக்டோபர் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

    குரூப் ஏ : ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தகுதி சுற்று அணி

    குரூப் பி: தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், தகுதி சுற்று அணி 

    ×