என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபாச வீடியோக்கள்"

    • இன்று எச்.டி.ரேவண்ணா ஜாமீன் மனு மீதான விசாரணை நடக்கிறது.
    • தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு.

    பெங்களூரு:

    பிரஜ்வால் ரேவண்ணா ஆபாச வீடியோவில் இருந்த மைசூரை சேர்ந்த ஒரு பெண்ணை கடத்தியதாக எச்.டி. ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஷ் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரேவண்ணாவை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து அவரிடம் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தொடர்ந்து பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள தங்களது அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே எச்.டி.ரேவண்ணா சார்பில் அவரது வக்கீல் பவன்சாகர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான கிரிமினல் வழக்குகள் விசாரணை நடைபெறும் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி விசாரணையை இன்று ஒத்திவைத்தார். எனவே இன்று எச்.டி.ரேவண்ணா ஜாமீன் மனு மீதான விசாரணை நடக்கிறது.

    பிரஜ்வால் ரேவண்ணா ஆபாச வீடியோ தொடர்பான வழக்கை விசாரணை நடத்தி வரும் எஸ்.ஐ.டி. தலைவர் பி.கே.சிங் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் ஆபாசமான வீடியோக்கள், புடைப்படங்களை பகிர்வது மட்டுமல்ல, அவற்றை வைத்திருப்பதும் குற்றம். தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்தி ருந்தால் கண்டுபிடிப்பது எளிது. எனவே இதுபோன்ற வீடியோக்கள் மற்றும் புடைப்படங்களை யாராவது வைத்திருந்தால், அவற்றை அழித்து விடுவதன் மூலம் சட்ட நடவடிக்கைகளில் இருந்த தப்பிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 3 நாட்கள் போலிஸ் காவல் முடிந்து ரேவண்ணாவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
    • ரேவண்ணாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று ரேவண்ணா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்

    பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோவில் இருந்த மைசூரை சேர்ந்த ஒரு பெண்ணை கடத்தியதாக எச்.டி. ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஷ் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரேவண்ணாவை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அவரிடம் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தொடர்ந்து பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள தங்களது அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில், 3 நாட்கள் போலிஸ் காவல் முடிந்து ரேவண்ணாவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது ரேவண்ணாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று ரேவண்ணா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனையடுத்து, ரேவண்ணாவை மே 14 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ரேவண்ணாவின் ஜாமின் மனு மீதான விசாரணையை பெங்களூரு நீதிமன்றம் நாளைக்கு ஒத்தி வைத்தது.

    நீதிமன்ற உத்தரவை அடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு ரேவண்ணாவை போலீஸ் அழைத்துச் செல்கிறது.

    • ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சர்வசாதாரணமாக நடமாடி உள்ளார்.
    • ஞானசேகரன் ஏராளமான வீடியோக்களை அழித்து இருப்பது தெரிய வந்தது.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த வாரம் என்ஜினீயரிங் மாணவி தனது காதலருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது மர்மநபர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    காதலனை அடித்து விரட்டி விட்டு அந்த மாணவியை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அந்த மாணவியை மிரட்டிய மர்ம நபர், "நான் கூப்பிடும் போது எல்லாம் வரவேண்டும்" என்று மிரட்டல் விடுத்தார். இல்லையெனில் செல்போனில் பதிவாகி இருக்கும் காட்சிகளை உன் தந்தைக்கு அனுப்பி விடுவேன் என்றும் மிரட்டினார்.

    ஆனால் அந்த மாணவி இந்த மிரட்டலுக்கு பயப்படவில்லை. தனக்கு நேர்ந்த கொடூரம் பற்றி அந்த மாணவி போலீசில் புகார் அளித்தார். தனக்கு நேர்ந்த விவரங்கள் அனைத்தையும் போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.

    புகழ்பெற்ற கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாகவே மாணவியிடம் அந்த நபர் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானது. இது தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த சர்ச்சை வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து போலீசார் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

    அண்ணா பல்கலைக்கழக வளாகம் அருகே பிரியாணி கடை நடத்தி வந்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவனை கைது செய்தனர். விசாரணை நடக்கும் போது அவர் வழுக்கி விழுந்ததால் அவருக்கு மாவு கட்டு போடப்பட்டது. அவர் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கைதான ஞானசேகரன் தி.மு.க.வை சேர்ந்தவர் என்று முதலில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் அதை தி.மு.க. தலைவர்கள் மறுத்தனர். இந்த நிலையில் ஞானசேகரன் விசாரணைக்கு பிறகு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    அவர் தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக கோட்டூபுரம் போலீசார் கோர்ட்டில் மனு செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.

    இதற்கிடையே ஞானசேகரன் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யும்போது "சார்" என்று அழைத்து யாரிடமோ பேசியது தெரியவந்துள்ளது. எனவே ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தவிர ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சர்வசாதாரணமாக நடமாடி உள்ளார்.

    இதனால் மேலும் சில மாணவிகளை அவர் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து இதை உறுதிப்படுத்துவதற்கு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதன் ஒரு பகுதியாக ஞானசேகரனின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அப்போது ஞானசேகரன் ஏராளமான வீடியோக்களை அழித்து இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த செல்போனை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அழிக்கப்பட்ட வீடியோ காட்சிகளில் என்ன இடம்பெற்றுள்ளது என்று ஆய்வு செய்தனர். அப்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்தது.

    அந்த செல்போனில் ஞானசேகரன் வேறு சில பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோ காட்சிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதில் சில வீடியோக்களில் பெண்கள், மாணவிகள் போல இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. சில வீடியோக்களில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சில வீடியோ காட்சிகளில் திருநங்கைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த வீடியோ பதிவுகள் விசாரணை நடத்தும் போலீசாரை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஞானசேகரன் செல்போனில் இருக்கும் வீடியோ காட்சிகள் அவரால் படம் பிடிக்கப்பட்டவை என்று கருதப்படுகிறது. சில காட்சிகள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் எடுக்கப்பட்டது போல இருக்கிறது.

    எனவே மேலும் சில மாணவிகளை ஞானசேகரன் படம் பிடித்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாரா? என்று தீர்வு காண முடியாத சிக்கல் உருவாகி இருக்கிறது. இதுபற்றி போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    ஞானசேகரனுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் யார்-யார் என்ற பட்டியலை போலீசார் தயார் செய்து உள்ளனர். அதன் அடிப்படையில் ஒவ்வொருவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து போலீசார் கேள்விகள் கேட்டு வாக்குமூலம் பெற்று வருகிறார்கள்.

    அதன்படி ஞானசேகரனின் 3 மனைவிகளிடமும் நேற்றும், இன்றும் தீவிர விசாரணை நடந்தது. அவர்களது வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.

    இதன் மூலம் ஞானசேகரனின் நடத்தைகள், குண நலன்கள் அனைத்தும் தெரிய வந்துள்ளது. அந்த வாக்குமூலங்களின் அடிப்படையில் ஞானசேகரனின் மற்ற தொடர்புகளும் போலீசாரால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    ஞானசேகரனுக்கு ரகசிய தோழி ஒருவர் இருப்பது தெரிய வந்தது. அவரையும் தனிப்படை போலீசார் தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    ஞானசேகரனின் செல்போனில் ஏராளமான தனித்தனி போல்டர்கள் இருப்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்துள்ளனர். அந்த ரகசிய போல்டர்களையும் சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்து அதில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • குற்றவாளி சுரேஷ் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
    • கலையரசன் மற்றும் அபிஷேக் ஆகிய 2 பேரும் தர்மபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் பெண்ணை கூட்டு வன்கொடுமை செய்து வழிப்பறி செய்த வழக்கில் 2 பேர் கைதான நிலையில் தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தப்பி ஓடியவர்களில் ஒருவரை நேற்று கிருஷ்ணகிரி போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மற்றொரு நபர் ஓடிய போது தவறி விழுந்ததில் கால் முறிந்தது. இதில் சுட்டு பிடிப்பட்ட வாலிபரின் செல்போனை போலீசார் கைப்பற்றி விசாரித்ததில், அதில் மேலும் சில ஆபாச வீடியோக்கள் இருந்தனர். இதில் பெண்களை மிரட்டி வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோக்கள் இருப்பதை போலீசார் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் பின்புறம் மலை உள்ளது. இந்த மலைக்கு கடந்த 19-ந்தேதி மதியம் 3 மணி அளவில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண் ஒருவரும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் வந்தனர்.

    அவர்கள் மலையின் உச்சிக்கு சென்றபோது அங்கு 4 இளைஞர்கள் மதுபோதையில் அமர்ந்திருந்தனர். அவர்கள் மலைக்கு வந்த பெண்ணையும், உடன் வந்த நபரையும் கத்தி முனையில் சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த பெண்ணிடம் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, தோடு உள்ளிட்டவற்றை பறித்தனர்.

    பின்னர் காம வெறி தலைக்கேறிய அந்த 4 பேரில் 2 பேர் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர். அந்த நேரம் உடன் இருந்த 2 பேர் தாங்கள் வைத்திருந்த செல்போனில் அதை வீடியோவாக பதிவு செய்தனர். மேலும் பெண்ணுடன் வந்த நபரின் செல்போனை பிடுங்கி அவர் போனில் இருந்த ஜி.பே வாயிலாக ரூ.7 ஆயிரம் பறித்துக் கொண்டனர்.

    இந்த நிலையில் மலையில் இருந்து கீழே வந்து அழுத அந்த பெண்ணை அந்த பகுதியில் இருந்த மக்கள் பார்த்தனர். அவர்கள் நடந்த சம்பவம் குறித்து கேட்டனர். அப்போது அந்த பெண் நடந்தவற்றை கூறி விட்டு போலீசிடம் புகார் அளிக்காமல் நேராக ஊருக்கு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் இச்சம்பவம் பற்றி அறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினார்கள்.

    போலீசாரின் விசாரணையில் பாதிக்கப்பட்டவர் திருப்பத்தூரை சேர்ந்தவர் என தெரியவர அங்கு சென்று அவரிடம் புகார் விவரத்தை பெற்றுக் கொண்டனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பெண்ணை மிரட்டி பணம், நகை வழிப்பறி செய்தது கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை சேர்ந்த கலையரசன் (21), அபிஷேக் (20) மற்றும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த சுரேஷ் (22), நாராயணன் (21) என தெரிய வந்தது.

    இதில் கலையரசன், அபிஷேக் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த சுரேஷ், நாராயணன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்மலை குட்டை பெருமாள் கோவில் பின்புறமாக பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகர், போலீசார் குமார், விஜயகுமார் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது போலீசார் வருவதை கண்ட சுரேஷ், நாராயணன் தாங்கள் வைத்திருந்த கத்தியால் போலீசார் குமார், விஜயகுமாரை தாக்கி விட்டு தப்ப முயன்றனர். அந்த நேரம் போலீசார் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர். தொடர்ந்து சுரேசும், நாராயணனும் ஓட முயற்சி செய்யவே, சுரேசின் வலது முட்டில் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

    இதில் சுரேஷ் சுருண்டு விழுந்தார். போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிய நாராயணன் கீழே விழுந்ததில் வலது காலில் முறிவு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி ஆகியோர் சென்று விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் காயம் அடைந்த போலீசார் குமார், விஜயகுமார் ஆகியோரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே போல துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட சுரேஷ், கால் முறிந்த நாராயணன் ஆகியோரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    துப்பாக்கி சூடு நடந்த இடத்தை போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அதே போல தடயவியல் நிபுணர்களும் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலையரசன், அபிஷேக், சுட்டு பிடிக்கப்பட்ட சுரேஷ், நாராயணன் ஆகிய 4 பேரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

    அப்போது கைதான சுரேசிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை போலீசார் பார்த்த போது அதிர்ந்து போனார்கள்.

    அதில் ஏராளமான பெண்களை சுரேஷ் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ காட்சிகள் இடம் பெற்றிருந்தன. தனியாக வந்த பல இளம்பெண்களை சுரேஷ் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அவற்றை வீடியோவாக எடுத்து மிரட்டி வந்துள்ளான். இவ்வாறு எத்தனை இளம்பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என போலீசார் தீவரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து துப்பாக்கியால் சுடப்பட்ட குற்றவாளி சுரேஷ் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கைதான நாராயணன் காலில் மாவு கட்டு போட்ட பிறகு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கலையரசன் மற்றும் அபிஷேக் ஆகிய 2 பேரும் தர்மபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கிருஷ்ணகிரியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மலை பகுதியில் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் வந்திருந்தனர். அவர்களில் அந்த பெண்ணை 4 பேர் மிரட்டி நகையை பறித்தனர். இதில் 2 பேர் அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் குற்றவாளிகள் 4 பேரின் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களில் 2 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

    மற்ற 2 குற்றவாளிகளை தேடி வந்தோம். அவர்கள் பொன்மலை குட்டை பெருமாள் கோவில் பின்புறமாக இருப்பதாக தகவல் வந்து இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகர் மற்றும் போலீசார் சென்றனர்.

    அந்த நேரம் குற்றவாளிகள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் 2 போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றனர்.

    அந்த நேரம் போலீசார் தற்காப்புக்காக குற்றவாளிகளில் சுரேஷ் என்பவரை சுட்டு பிடித்தனர். மற்றொரு நபர் நாராயணன் என்பவர் தப்ப முயன்ற போது தவறி விழுந்ததில் கால் முறிந்தது. கைதான சுரேஷ் மீது 2 அடிதடி வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கிருஷ்ணகிரியில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வழிப்பறி செய்த வழக்கில், தப்ப முயன்ற நபரை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×